உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருவக்காற்று திசை மாறியது: வெயில் வாட்டி வதைக்கும்

பருவக்காற்று திசை மாறியது: வெயில் வாட்டி வதைக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.21ம் தேதி வரை இந்த நிலை தொடரும். தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 105 டிகிரி பாரன்ஹீட்; அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது.இதனால் ஓரிரு நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கலாம். வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும். மதிய நேரத்தில் வெளியில் செல்வோருக்கு உடல்ரீதியாக அசவுகரியம் ஏற்படலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sivaprakasam Chinnayan
செப் 17, 2024 22:54

Super


SRISIBI A
செப் 16, 2024 12:27

தோல் வியாதிகள் இப்பவே ஆரம்பமாகி விட்டது வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் .சாலையில் வெயில் காரணமாக விபத்து அதிகமாகும் ஒரு மரத்தின் கீழ் 10 கார்கள் நிறுத்த அடிதடியாக இருக்கும் மரத்தின் கிழே கார் நிறுத்த பணம் வசூல் செய்வார்கள்


sridhar
செப் 16, 2024 10:51

வெய்யிலை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஜேபி ஆளும் மாநிலங்களில் வெய்யில் 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் செல்லாது .


Kalyanaraman
செப் 16, 2024 09:43

கடந்த காலங்களில் / ஆட்சிகளில் பெரிய பெரிய மரங்களை எல்லாம் வெட்டியாச்சு, மழையை கொடுக்கும் மலைகளையும் கல் குவாரிகளாக தரைமட்டம் ஆக்கியாச்சு. பிறகு காற்று திசை மாறி தான் போகும். காற்று மட்டும் திசை மாறவில்லை, மற்ற மற்ற வளங்களும் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. காலம் போக நமக்கு இது புரியும். புது வியாதிகள் இதனால் ஏற்படலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை