உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி: சேகர் பாபு பெருமிதம்

முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி: சேகர் பாபு பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழநி: ''அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றிடைந்துள்ளது ''என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.பழநியில் அவர் கூறியதாவது:தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 39 மாதங்களில் கோவில்கள் வளர்ச்சிக்காகவும், ஆன்மிக அன்பர்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மாநாட்டின் முதல் நாளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.1.25 லட்சம் பக்தர்களுக்கு முதல் நாள் மாநாட்டில் உணவு வழங்கப்பட்டது. 50ஆயிரம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்

உன்னதமான நிகழ்வை அரங்கேற்றிய அரசு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு

“முருகன் பெயரை சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே அது முருகனுக்கான மாநாடு தான்,” என, உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:உலகஅளவில் முருகனின் பெயரை தாங்கி நடக்கிற மாநாடு இதுவாக தான் இருக்கும்.

பாராட்டு

என்ன காரணத்திற்காக, தமிழோடு முருகனை இணைத்து மாநாடு நடத்துகின்றனர் என்ற கேள்வியை நேற்று பலர் எழுப்பினர்.முருகன் பெயரை சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே, அது முருகனுக்கான மாநாடு தான் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு போய்விடலாம். பல கருத்துகள் சமூகத்தில் உள்ளன. இவர்கள் எதற்கு மாநாடு நடத்துகின்றனர். இவர்களுடைய கொள்கைக்கு ஏற்றதா என்று கேள்விகள் கேட்கலாம்.எல்லாருக்குமான ஒரே பதில் இறையை உணர்ந்து, தமிழை அறிந்து, உணர்ந்து, முருகனை அறிந்து, முருகனின் வீர பராக்கிரமங்களை அறிந்து, தமிழ் மொழியின் செழுமையை உணர்ந்து, முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் என்று உணர்ந்து, இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தி உள்ள அரசும், அறநிலையத்துறையும் பாராட்டிற்குரியது.மொத்தம், 36 இலக்கியங்களைக் கொண்ட சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு தான், மிக மூத்த இலக்கியமாக உள்ளது. அந்த பத்துப்பாட்டில் முதன்மை பாட்டாக வைக்கப்பட்டுள்ளது திருமுருகாற்றுப்படை.

முருகன் ஆற்றுப்படை

இந்த மாநாட்டை உலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்வதற்கு பதிலாக, உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு உன்னதமான நிகழ்வை தமிழ் மண்ணிலே இன்றைக்கு அரங்கேற்றி இருக்கும் அரசை பாராட்டுகிறேன்.அறநிலையத் துறையை பாராட்டுகிறேன். முருகனுடைய புகழும், வெற்றியும் தொடரட்டும். இந்த மாநாட்டின் மூலமாக தமிழ் வென்றிருக்கிறது. முருகன் வென்று இருக்கிறான்.இவ்வாறு அவர் பேசினார்.

முருகன் மாநாட்டில் 285 கட்டுரைகள் தேர்வு

பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், 1,500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், 285 கட்டுரைகள் தேர்வாகி உள்ளன.மாநாட்டில், தமிழகம், வெளிமாநிலம், இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் வாயிலாக, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் முருகன், நவ பாஷாண முருகன், அழகன் முருகன், பாதயாத்திரையில் முருகன், தமிழ்க் கடவுள் முருகன், முருகனும் முத்தமிழும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், முருகன் சம்பந்தமான, 1,500 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.ஆய்வுக் கட்டுரைகள் குறித்து விவாதிக்க வாரியார் அரங்கம், பாம்பன் சுவாமிகள் அரங்கம், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் அரங்கம் உட்பட ஐந்து ஆய்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விருதுகள் பெற்றவர்கள் விபரம்

முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம் மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில், 16 பேருக்கு முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.அவர்கள் விபரம்:போகர் சித்தர் விருது:மருத்துவர்கு.சிவராமன்நக்கீரர் விருது:பெ.சுப்பிரமணியம்அருணகிரிநாதர் இயல் விருது:திருப்புகழ் மதிவண்ணன்அருணகிரிநாதர் இசை விருது:வி.சம்பந்தம் குருக்கள்முருகம்மையார் விருது:மறவன்புலவு க.சச்சிதானந்தன்குமரகுருபர சுவாமிகள் விருது:பனசை மூர்த்திதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் விருது: -பா.மாசிலாமணிபகழிக்கூத்தர் விருது:ஜெ.கனகராஜ்கந்தபுராணக் கச்சியப்பர் விருது:வ.ஜெயபாலன்வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விருது:ந.சொக்கலிங்கம்மாம்பழக் கவிச்சிங்க நாவலர் விருது:புலவர்.அமுதன்சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விருது:சே.பார்த்தசாரதிபாம்பன் சுவாமிகள் விருது:தா.சந்திரசேகரன்தணிகைமணி வ.சு.செங்கல்வராயர் விருது:வ.செ.சசிவல்லிதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விருது:சொ.சொ.மீ.சுந்தரம்தேனுார் வரகவி வே.செ.சொக்கலிங்கனார் விருது:மா.திருநாவுக்கரசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sankar
ஆக 26, 2024 20:16

ஸ்விகி சிவம் ஏற்பாடு - சொதப்பல்


RAMAKRISHNAN NATESAN
ஆக 26, 2024 14:54

ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தடைக்கு உக்ரைன் பாராளுமன்றத்தின் முடிவு குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். தனது வழக்கமான ஞாயிற்றுக்கிழமை உரையில், "எந்தவொரு கிறிஸ்தவ தேவாலயமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒழிக்கப்படக்கூடாது" என்று போப் வலியுறுத்தினார். தேவாயலங்கள் பாதுகாக்கப்படவேண்டும் ன்னு சொல்லுற அதே போப்பு போர் நிறுத்தம் வேணும் ன்னு ஏனுங்கோ சொல்லல ????


Barakat Ali
ஆக 26, 2024 14:29

இதன் நோக்கம் ???? பக்தி வளர்ப்பா ???? கட்சிப் பிரமுகர்களின் பாக்கெட் நிரப்புதலா ???? அல்லது ஹிந்துக்களை தாஜா செய்யும் புதிய உத்தியா ???? அல்லது சனாதன ஒழிப்பு என்று ஒருபக்கம் பேசி அம்மையாரை கோவில் கோவிலாக அனுப்பி தமிழக மக்களைக் குழப்பியது போல இதுவும் சேர்த்து குழப்ப ஒரு புது உத்தியா ????


saiprakash
ஆக 26, 2024 13:20

சங்கிகளின் கதறல் அதிகமாக உள்ளது


Muralidharan S
ஆக 26, 2024 11:56

இன்னும் என்ன என்ன கம்பி கட்டற கதை எல்லாம் வரும் பாருங்க தேர்தலுக்கு முன்னாடி..


Muralidharan S
ஆக 26, 2024 11:39

ஆன்மீக என்ற பெயரில் மாநாடு நடத்தாமல் இருந்தா கூட, சொரணை இல்லாத ஹிந்துக்கள் திமுகாவிற்குத்தான் ஒட்டு போடுவார்கள்..


vbs manian
ஆக 26, 2024 10:49

அவன் கோவணாண்டி. கனி கொடுத்து கிழவியுடன் விளையாடியவன். அவன் புகழ் பரவாத இடம் உண்டோ. அவன் புகழை இந்த நாத்திக கும்பல் பரப்புகிறதாம். குன்று கண்ட இடம்யெல்லாம் உள்ளான் . சூரியனுக்கு விளக்கு ஏற்றுகிறார்கள்.


sridhar
ஆக 26, 2024 10:48

மாபெரும் வெற்றி . அறநிலைய துறை காசில் மூன்று வேளையும் 18 வகை உணவு வயிறு முட்ட கொட்டிக்கொண்டாயிற்று . கூஜாக்களுக்கு கோவில் பணத்தில் பணமுடிப்பு , பரிசு எல்லாம் கொடுத்தாச்சு ..


Dharmavaan
ஆக 26, 2024 10:01

ஒரு நீதி இதில் கலந்து கொண்டு நாத்திக திமுகவுக்கு சாமரம் வீசுவது கேவலம்,200 கோயில்களை இடித்தபோது அதை ஏன் கண்டிக்கவில்லை.கமிஷன் கலெக்க்ஷன் கரப்ஷன் அதற்கு இது ஒரு வழி. இவன் கொடுத்த தீர்ப்புகளும் திமுக சாதகம் கேவலம்


vinodkumar
ஆக 26, 2024 09:33

அரசியல் இல்லா ஆன்மீகம் வேண்டும் .. முருகா முருகா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை