உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அம்ருத் திட்டத்தில் 51 நகரங்களுக்கு விரைவில் புதிய மாஸ்டர் பிளான்

அம்ருத் திட்டத்தில் 51 நகரங்களுக்கு விரைவில் புதிய மாஸ்டர் பிளான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசின், 'அம்ருத் 2.0' திட்டத்தில், தமிழகத்தில், 51 நகரங்களுக்கு புதிய, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. சிறிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு, அம்ருத் திட்டத்தைத் துவக்கியது. இதில் நிதி பெற தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு, முறையான முழுமை திட்டம் இருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நாகப்பட்டினம், வேலுார், கடலுார், ராமேஸ்வரம், காஞ்சிபுரம், காரைக்குடி, தஞ்சை, ராஜபாளையம், புதுக்கோட்டை, நாகர்கோவில், கும்பகோணம், துாத்துக்குடி. ஆம்பூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம் ஆகிய 17 நகரங்களுக்கு, முழுமை திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ராஜபாளையம் நகரத்தின் முழுமை திட்டத்துக்கு மட்டுமே, அரசின் ஒப்புதல் கிடைத்தது. நாகப்பட்டினம், சேலம், வேலுார், திருநெல்வேலி நகரங்களின் முழுமை திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் அம்ருத் திட்டத்தின் முதல் பகுதியில், 17 நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதில், 12 நகரங்களின் திட்டங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், அம்ருத் 2.0 எனப்படும் இரண்டாம் பாக திட்டத்தில், 50,000 முதல், 99,000 வரையிலான மக்கள்தொகை உள்ள நகரங்களுக்கு புவிசார் அடிப்படையில், புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், 54 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், 51 நகரங்களுக்கான முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு முதல் தவணையாக, 9.87 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த முழுமை திட்டங்களில், இந்நகரங்களில், அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கம், வாகன பெருக்கம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றுக்கான மதிப்பீடுகள் சேர்க்கப்படும். இதற்கு ஏற்ற வகையில் நில பயன்பாட்டுக்கான வகைப்பாடுகள் வரையறுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

krishnan
ஜூலை 19, 2024 12:03

better these are implemented by GOI..state govt would white wash toilets,bridges, fix marbbles on them and spend.useless guys. By the way Modi Ji ..any thing for VILLAGES ...cluster of villages called RURBAN ...ur own pet project. U didnt implement. U LIED sir.


தத்வமசி
ஜூலை 19, 2024 10:16

மோடி ஐயா, நீங்க நாட்டை வளப்படுத்த நினைக்கிறீங்க. வெளிநாடு போல உள்நாட்டு கட்டுமானத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்யுறீங்க. ஆனால் மாநிலத்தில் உள்ளவர்கள் எழுபது வருடங்களாக எதை செய்தார்களோ அதைத் தான் இப்போதும் செய்கிறார்கள். தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். மக்களுக்கு எந்த பலனும் இல்லை. எப்போதும் இந்தியா மோசம், ஜப்பானைப் பார், சிங்கபூரைப் பார், அமெரிக்காவைப் பார் என்று கத்தும் கூட்டம் கூட இந்திய வேலையில் கூட்டுக் கொள்ளை தான் அடிக்கிறார்கள். அந்த அளவுக்கு இவர்கள் புரையோடி போய் உள்ளனர். ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டை விற்கும் கூட்டத்திற்கு எதை செய்தால் என்ன ? எதை செய்யாவிட்டால் தான் என்ன ? எது கொள்ளை போனால் என்ன ? அவர்களுக்கு ஓட்டு போட காசு வேண்டும், இலவசம் வேண்டும். பொது மக்களின் மனம் மாற வேண்டும். என்றைக்கு காசுக்கும், இலவசத்திற்கும் ஓட்டு போடாமல் நாட்டுக்கு நல்லது செய்பவர்களுக்கு ஓட்டு போடுகிறார்களோ அப்போது தான் லஞ்சம், கொள்ளை, கட்டை பஞ்சாயத்து ஒழியும். நாடு வளம் பெரும்.


Mali
ஜூலை 19, 2024 06:36

ராஜபாளையம் இந்த அம்ருட் திட்டத்தால் இங்கே இருக்கும் நகராட்சி அலுவலர், வருவாய் அலுவலர் எல்லாரும் 5 தலைமுறைக்கு சேர்த்து வச்சுட்டாங்க. அம்ருட் வந்த பின், இந்த ஊருல ரோடுக்கு பிரசவம் பண்ணிவிட்டு தைக்கவே இல்ல. ரோடு 2 முதல் 3 அடி ஏத்திட்டாங்க. 3 படி இருக்கும் வீடு இப்போ ஒரு படிதான் இருக்கு ரோடு மட்டத்தில். highway கரண்ட் கம்பி உயரம் கம்மியாச்சு. AKR குரூப் தான் இந்த ஊருல எல்லா கான்ட்ராக் எடுப்பாங்க. பிராடு கான்ட்ராக். ரோட்டுல தார் பேருக்கு தான் இருக்கும். 6 வருசமா ரோடு வேணும் கேட்டா பதிலே இல்லே. ஏற்கனவே நகராட்சி தண்ணீர் பைப் லைன் இருக்கு. ஆனால் நகராட்சி மூளை இருக்கும் ஆசாமி ஊருல இன்னொரு பைப் லைன் போட்டு விட்டு அதுல தண்ணீர் விடுறாங்க. ஏற்கனேவே இருக்கும் பைப் 50 வருசமா நல்லா வேலை பண்ணுது. ஆனால் புதுசா போட்ட பைப் 1 வாரத்துக்கு பல்லு இளிக்குது. மாசத்துல 2 தடவை இந்த பைப் தண்ணீ வருவது குதிரை கொம்பு. இங்கே இருக்கும் MLA, KKSSRR ஒரு மலை மிலிங்கி. அம்ருட் திட்டத்தால் ராஜபாளையம் ரோட்டில் விபத்து நடந்து 20 மேல் பரலோகம் போய்ட்டாங்க. இங்கே காவல் காக்கும் தெயவம் இல்லை. ஆக மொத்தம் மத்திய அரசு கொடுத்த 95% நிதியை அதிகாரிகள், காண்ட்ராக்ட் காரங்க வயிறுல போய்ச்சு. மக்களுக்கு பிம்பிளிக்கு பியாபி. ஊழலோ ஊழல். சொத்து வரி தமிழ்நாட்டில் இந்த ஊரு தான் ரொம்ப அதிகம். வீடு கட்ட லஞ்சம் 1 லட்சம், சொத்து வரி போட 50,000 லஞ்சம், 10,000 பட்டா மாற்ற, தண்ணீர் பைப் போட 20,000. புதிய கரண்ட் கேட்க 10000. சோலார் போட 25000. நிலத்தை அளக்க 15000. எல்லாத்துக்கும் லஞ்சமோ லஞ்சம்.


Kasimani Baskaran
ஜூலை 19, 2024 05:35

அம்ருத் திட்டத்தை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கவில்லை. லேபல் கூட ஒட்டவில்லை. அப்ப தீம்கா அமித்ஷாவின் கரத்தை பலப்படுத்த கிளம்பிவிட்டதா?


மேலும் செய்திகள்