| ADDED : ஆக 03, 2024 11:33 PM
நெல்லிக்குப்பம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த காராமணிக்குப்பம், ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுமந்த்குமார்,37; இவரது தாய் கமலீஸ்வரி,60; மகன், இசாந்த்,8; ஆகியோர் கடந்த ஜூன் 15ம் தேதி கொடுரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அதேபகுதியை சேர்ந்த பழனி மகன் சங்கர்ஆனந்த், 21; முகமது அலி மகன் சாகுல்அமீது, 20; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் போலீசார் கோர்ட் அனுமதி பெற்று நேற்று முன்தினம் இருவரையும் மீண்டும் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், இந்த கொலைக்கு, நெல்லிக்குப்பம் நடேசன் தெருவை சேர்ந்த ஹாஜா மொய்தீன் மகன் பக்கிம்,20; ஆலோசனை வழங்கியது தெரிய வந்தது. அதனையொட்டி பக்கிமை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.