உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் விஜயகாந்த், 23; கூலித் தொழிலாளி. இவர், உறவினரான 17 வயது சிறுமியை, இரு குடும்பத்தார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.தற்போது, நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமியை நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விஜயகாந்த், 23; அவரது தந்தை விஜயகுமார், 54; தாயார் சரோஜா, 52; உட்பட 5 பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவில் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை