உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை ஆசாமிகளால் அச்சத்தில் பொதுமக்கள்

போதை ஆசாமிகளால் அச்சத்தில் பொதுமக்கள்

''நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவில், போதை ஆசாமிகள், காவலர்களை தாக்கிய சம்பவம், மக்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்ததால், பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது போதை ஆசாமிகள், காவல் துறையினரை, பொது வெளியில் தாக்கும் சம்பவம் கவலை அளிக்கிறது.தி.மு.க., ஆட்சியாளர்களும், இதை தடுக்க வேண்டிய காவல் துறையினரும், விழி பிதுங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது. இத்தகையோரால், வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும், பயமும், அச்சமும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காத வகையில், முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.- - பழனிசாமி,அ.தி.மு.க., பொதுச்செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை