உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீ விபத்தில் சிக்கிய கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்!

தீ விபத்தில் சிக்கிய கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்!

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவில் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த யானை சுப்புலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது. குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுப்புலட்சுமி என்ற யானை உள்ளது. கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டின் அருகிலேயே யானை மண்டபம் உள்ளது. யானை மண்டபத்தில் மேற்கூரையான தகர சீட்டில், வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கீற்று கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக, கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது.தீயில் இருந்து தப்பிக்க, சுப்புலட்சுமி யானை தாமாகவே மண்டபத்திலிருந்து வெளியேறி வந்தது. கோயில் மண்டபத்தில் முன்பு தீக்காயத்துடன் யானை நிற்பதை பார்த்த, மக்கள் மற்றும் பணியாளர்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த கால்நடை மருத்துவர்கள், யானை சுப்புலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி யானை சுப்புலட்சுமி உயிரிழந்தது.இதைத் தொடர்ந்து, மறைந்த யானை சுப்புலட்சுமிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். தீவிபத்தில் சிக்கி கோவில் யானை உயிரிழந்த சம்பவம் பக்தர்களையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

shakti
செப் 13, 2024 19:32

இந்து கோவில்களில், தேர் மண்டபங்களில் மட்டும் தீவிபத்துகள் நடப்பது சந்தேகத்தை வளர்க்கிறது


Elango Elango
செப் 13, 2024 17:23

So saddened to read this tragic incident Must make better arrangements very tragic way to die


Subramanian
செப் 13, 2024 13:15

மிகவும் சோகமான நிகழ்வு. ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Muralidharan raghavan
செப் 13, 2024 12:49

correct


N.Purushothaman
செப் 13, 2024 11:51

ஆழ்ந்த இரங்கல்கள். ...


தமிழ்வேள்
செப் 13, 2024 11:16

யானை பலியாக்கப்பட்டால் , நல்லது நடக்கும் -தோஷம் தீரும் என்று யாராவது மலையாள ஜோதிடன் சொல்லியிருப்பானோ ? இது ஏன் அவர்களது சதி வேலையாக இருக்கக்கூடாது ..யானை பலியான உடனே ஊருக்கு திரும்பும் ஒரு ஆசாமி .....


sridhar
செப் 13, 2024 10:49

அந்த அடிகள் வீரமணியை அழைத்து விழா நடத்தினார் , திராவிட பதர்கள் மேல் அவ்வளவு பாசம்.


Palanisamy Sekar
செப் 13, 2024 10:45

தீயினால் அவ்வளவு பெரிய உயிர் எவ்வளவு துயரத்தை அடைந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே மனம் கணக்கின்றது. வேதனையின் உச்சத்தில் யானை அடைந்த அதே துயரத்தினை ஆளும் ஆட்சியாளர்களும் துறை அமைச்சரும் அடைந்தே ஆகணும். இதுதான் இறைவனிடம் வேண்டுவது. கோவிலை நிர்வகிக்க தெரியாமல் கோவிலுக்கு வருகின்ற உண்டியல் பணத்துக்கு அலைகின்ற ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் நமசிவாய


rambhagavath
செப் 13, 2024 10:26

வேறு எந்த மத வழிபாட்டுத்தலத்திலும் இதுபோன்ற சம்பவம் விழாக்காலம் அல்லாத நேரத்தில் நடைபெறவில்லை. அனால் இந்துமத வழிபாட்டுத்தலத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. கோயில்கள் வருமானம் மட்டும் அரசாங்கத்துக்கு போகணும் ஆனால் கோயில்பாராமரிப்பு மட்டும் நடைபெறுவதில்லை. இந்துக்கள் சுரனையற்று,தனகாக்க மட்டும் இறைவனிடம் வேண்டுவர். அதே கோவிலுக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது அவமானம் ஏற்பட்டால் கண்டுகொள்ளமாட்டார்கள். சுயநலவாதி ஹிந்துக்கள். சுநலவாத்தில் சிரளயாட்டும்.


ஆரூர் ரங்
செப் 13, 2024 10:22

ஆயிரக்கணக்கான குடமுழுக்குகள், ஆலய திருப்பணிகள், திருவிழாக்கள், முருகன் மாநாடு என்பவையெல்லாம் திராவிட மாடல் சாதனைகள் என்றால் இதுவும் திராவிஷ சாதனைதானே? ஆலய சீர்கேடுகளுக்கு அல்லேயா பாபு பொறுப்பேற்பாரா?


சமீபத்திய செய்தி