உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசு வீழ்த்தப்படும் நாள் தொலைவில் இல்லை: அன்புமணி

தி.மு.க., அரசு வீழ்த்தப்படும் நாள் தொலைவில் இல்லை: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விவசாயிகளை பழிவாங்கும் தி.மு.க., அரசு வீழ்த்தப்படும் நாள், வெகு தொலைவில் இல்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், அ.தி.மு.க., ஆட்சி நடந்தாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் என்பது மட்டும், தீராத வியாதியாக தொடர்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், படாளம், பழையனுார் கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூடைகளை விற்கச் செல்லும் விவசாயிகளிடம் மூடைக்கு, 60 ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதைத் தட்டிக் கேட்ட விவசாய சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது.விவசாயிகளின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., நன்றி மறந்து விவசாயிகள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.கொலை, கொள்ளை, போதை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி விவசாயிகளையும், கிளி ஜோதிடர்களையும், சாலையில், 'ஆம்லேட்' போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்கிறது.ஒட்டு மொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான விவசாயிகளை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. தமிழகத்தில் விவசாயிகளை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் தி.மு.க., அரசு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்
ஏப் 28, 2024 19:56

மாங்கோட்டை பிதுக்கப்படும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை.


Pandi Muni
ஏப் 28, 2024 10:06

காங்கிரசும் திமுகவும் ஒழிக்கப்படவேண்டிய கஞ்சா போதை கடத்தல் கட்சிகளே


Nesan
ஏப் 28, 2024 08:14

அழிக்கபட வேண்டும் பாவம் அப்பாவி மக்கள்


Mani . V
ஏப் 28, 2024 06:14

அந்த தொலைவு என்பது இவர்கள் கூட்டணி தாவி ஸாரி மாறி பெட்டி வாங்கும் வரை


T.sthivinayagam
ஏப் 28, 2024 05:37

சொம்பு கட்சியுடன் கூட்டனி வைத்தவர்கள் நின்றய நிலை பரிதாபம்


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி