உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி அமைச்சர் நிர்மலாவுடன் திருமா சந்திப்பு

நிதி அமைச்சர் நிர்மலாவுடன் திருமா சந்திப்பு

சென்னை : டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, வி.சி., எம்.பி.,க் களான திருமாவளவன், ரவிகுமார் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் அளித்த மனு:

மத்திய அரசின் 16வது நிதிக்குழு, மாநிலங்களில் வரி பகிர்வை குறைக்க பரிந்துரைத்துள்ளதாகவும், அதன்படி, மாநிலங்களுக்கான நிதி பகிர்வை, 41 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிதி பகிர்வு குறைக்கப்பட்டால், மாநிலங்களுக்கான நிதி சுமை அதிகரிக்கும். எனவே, மாநிலங்களின் நிதி பகிர்வை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

skv srinivasankrishnaveni
மார் 11, 2025 11:48

மத்தியிலிருந்துவரும் நிதிகளெல்லாம் மேலிடாமலேயே பகிரப்பட்டு விடுவதால் மக்கள் நலம் பற்றி என்னங்க கவலை திமுக அண்ட் அதிமுகவுக்கு உள்ள இவ்ளோகொடிகள் சொத்துக்களை பத்தி எவனாச்சும் கேள்விகேட்பானுகளா சர்வம் பிராடுமயம்


ராமகிருஷ்ணன்
மார் 11, 2025 11:31

கூட்டுகளவாணி காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் திமுகவின் அல்லக்கை விசிகவும் டெல்லி சென்று கேட்கும் அளவுக்கு போயிட்டாங்க. இன்னும் 15 வருடம் பி ஜே பி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் நிலை நிஜங்களை மிஞ்சும்.


jayaram
மார் 11, 2025 10:33

ஆமாம் ஆமாம் , இவரது தலைமையில் நிறைய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது என்ற கவலை இருக்கலாம்


Rajah
மார் 11, 2025 10:05

இந்திய நிதி அமைச்சரோடு விடுதலை சிறுத்தைகள் சந்திப்பு என்று தலைப்பு எழுதுங்கள். திருமாவோடு இருக்கும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் எப்போதும் இந்திய அரசு என்றே ஒப்பிடுவார்.


Yes your honor
மார் 11, 2025 09:57

யாருக்குத் தெரியும். டெல்லியில் ஆளாளுக்கு ஒரு லாபியை அமைத்து காய்நகர்த்தி வருகிறார்கள். திருமா மத்திய நிதியமைச்சர் காலில் ஏன் விழுகிறானோ. செய்தியாக வருவதெல்லாம் வேறாக இருக்கும். ஆனால் உண்மையாக சந்திப்பின்பொழுது பேசுவது வேறு ஏதாவது முக்கியமானதாக இருக்கும். அதுவும் இந்த ஆள் செலவு செய்து டெல்லியெல்லாம் போய் மாநில நன்மைக்காக ஏதோ செய்கிறார் என்பதையெல்லாம் உதயநிதிக்கு ஆங்கிலத்தில் அனைத்து எழுத்துக்களும் தெரியும் என்று கூறுவதை போலுள்ளது.


shyamnats
மார் 11, 2025 08:32

தமிழ் நாட்டில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக இருக்கிறார்கள் . இவர் என்ன பொறுப்பு நிலையில் மத்தியில் போய் பேசுகிறார் . தமிழ்நாட்டில் நாட்டில் நடை பெரும் மது, போதை , பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியான நிர்வாகமின்மை பற்றி எல்லாம் தன் கூட்டணியினரோடு பேசாதவர் இவர்.


xyzabc
மார் 11, 2025 07:58

இவனை சந்திப்பது time waste


சமீபத்திய செய்தி