மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், பனந்தோப்பு காலனியை சேர்ந்த டிரைவர் மணி - ரம்யா தம்பதிக்கு சரண், 8, அரண், 7, என்ற இரு மகன்கள் இருந்தனர். ஆசிரியரான ரம்யா பணியாற்றும் பள்ளியில் சரண் மூன்றாம் வகுப்பும், அரண் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். கடந்த, 21ம் தேதி இரவு வீட்டில் சமைத்த பிராய்லர் சிக்கனை அனைவரும் சாப்பிட்டு உள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு சரண் வாந்தி எடுத்தார். கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகனை அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மீண்டும் வயிற்று வலி ஏற்படவே, கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் சரண் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago