மேலும் செய்திகள்
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
1 hour(s) ago | 3
ஆண்டிபட்டி : சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது.வைகை பூர்வீக பாசனப்பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் தேங்கும் விதமாக வைகை அணையில் இருந்து மே 16ல் வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.திறக்கப்பட்ட நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவுக்கு பின் நிறுத்தப்பட்டது. கடந்த 4 நாட்களில் அணையில் இருந்து 376 மில்லியன் கன அடி நீர் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டுள்ளது.தற்போது அணை நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 238 கன அடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து 209 மில்லியன் கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட உள்ளதாக வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 hour(s) ago | 3