உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., அரசை இறக்கி காட்டுவோம்: துாத்துக்குடியில் கனிமொழி சபதம்

பா.ஜ., அரசை இறக்கி காட்டுவோம்: துாத்துக்குடியில் கனிமொழி சபதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக்கூறி, துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கனிமொழி எம்.பி., பேசியதாவது:மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது அல்ல. இரு மாநிலங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளனர். ஒரு மாநிலத்தின் பட்ஜெட் போல உள்ளது, தொடர்ந்து மாநில உரிமைகளை, மாநில வரிகளை பறித்துக் கொண்டு, மாநிலங்களுக்கு வரவேண்டிய நிதியை தரவில்லை என்றால், மாநிலத்தை எப்படி நிர்வகிப்பது.மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என தெரியவில்லை. தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.தங்களுக்கு ஓட்டளிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது. சென்ற ஆண்டைவிட தற்போது குறைவான நிதியையே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கிராமப்புறங்களில் இருக்கின்ற சாமானிய மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு பட்ஜெட். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், அவர்களை பாதுகாப்பதாகவும் மத்திய பட்ஜெட் உள்ளது. பணக்கார முதலாளிகளை வளர்த்து விடும் திட்டங்கள் மட்டுமே உள்ளன.மக்கள் விரோத பட்ஜெட்டாக பா.ஜ., அரசின் பட்ஜெட் உள்ளது. தமிழக மக்களுக்கும், நல்லாட்சிக்கும் எதிராக உள்ள இந்த மத்திய பா.ஜ., அரசை விரைவில் பதவியில் இருந்து இறக்கி காட்டுவோம்.அது விரைவில் நடக்கும். ஏழை மக்களுக்கான பட்ஜெட் கொடுக்கும் அரசு அமைய வேண்டும். அதற்கான ஆட்சியை விரைவில் உருவாக்கி காட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.துாத்துக்குடியை போலவே தமிழகம் முழுதும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

கத்தரிக்காய் வியாபாரி
ஆக 25, 2024 23:33

வெள்ளம் வந்து நிவாரண பனி நடக்காமல் கிடந்த பொது இந்த அம்மா ஒண்ணுமே பண்ண வில்லை. அனால் தேர்தல் வந்தால் பணம் குடுக்க வந்து விடுவார். மாநில தேர்தல் ஆணையகம் பள்ளு புடுங்கிய பாம்பு.


Nachiappan
ஆக 24, 2024 21:13

Height of daydream... After several decades the nation is in safe hands now and we are experiencing development/growth in all sectors now.. We are enjoying an enviable reputation in the international arena... Our economical growth is much better and endorsed by entities like World Bank , IMF etc.. Wish she reads and stops her blame game.. There are two ways to attain fame... Either you perform and become famous or you find fault with the performers and try to be popular.. She and her likes belong to the second category


Matt P
ஆக 22, 2024 06:18

கள்ளு இறக்கி காட்டுவோம் என்பது போல சொல்கிறார்கள்.


M Ramachandran
ஆக 18, 2024 20:03

தூத்து குடி மக்கள் திருந்திய பாடில்லை. இந்த அம்மாள் கும்பலால் பலர் தஙகள் வாழ்வாதாரத்திய இழந்தனர் நல்ல குடி நீர் கிடைத்து கொண்டிருந்ததிய சுய லாபத்திற்கு கோனாசம் போராட கெடுத்து விட்டனர் இந்த லட்சணத்தில் ஒளித்து கட்டு வாஙகலாம் . எஙகும் கொள்ளை எதிலும் கொள்ளை மக்கள் திருந்தின பாடில்லை. அஙகுள்ள மக்கள் அவர்கள் தலைவிதி இப்பட்டி தான் போலும். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்


enkeyem
ஆக 18, 2024 14:28

பத்து வருஷமா கொடுத்த வாக்குறுதிகள் சபதங்கள் என்று எதையும் உருப்படியாக நிறைவேற்றி இருக்கிறீங்க. வெறும் வாய்சவடால் மட்டும் தான்.


Thiruvengadam Ponnurangam
ஆக 18, 2024 10:21

இப்படியே பேசிட்டு இரும்மா


Sudhakar NJ
ஆக 08, 2024 15:38

இந்த அம்மாவுக்கு சபதம் போடுவதெல்லாம் சாப்பாடு போடுறமாதிரி போல. மதுவை ஒழிப்போம்னு சபதம் போட்டாங்க, ஒழிக்கல. நீட் தேர்வு ரத்து பண்ணுவோம்னு சபதம் போட்டாங்க, ஆனா ரத்துபண்ண முடியாது. இப்போ பாஜக அரசை ஒழிப்போம்னு சபதம் போடறாங்க. அதுவும் நடக்காது. இப்படி சபதம் போடறதுக்கா இந்தம்மாவ தூத்துக்குடி மக்கள் எம்பி யா தேர்ந்தெடுத்திருக்காங்க?


Sathyan
ஆக 22, 2024 02:33

இந்தம்மா இப்படி பேசுறத பார்த்து மீண்டும் திமுக அடிமைகள் உணர்ச்சிவசப்பட்டு ஓட்டு போடுவார்கள் அதற்காகத்தான். திமுக மக்கள் ஓட்டு போடுவது அவர்களுடைய சங்கதிகளை சீரழிப்பதற்கு சமம்.


Anu Sekhar
ஆக 06, 2024 19:53

அப்பதான் கொள்ளை அடிக்க முடியும்.


xyzabc
ஆக 05, 2024 11:53

அனாவசிய வாய். அடக்க முடியாத வாய். தூத்துக்குடி மக்களின் பரிசு


Venkateswaran Rajaram
ஆக 04, 2024 10:07

உங்க மொத்த குடும்பத்தெ முதலில் தீவிர விசாரணை செய்து திகாரில் ஏத்தனும் ...சமூக நீதி னு ஒன்ன வச்சிக்கிட்டு நீங்க valre சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி