உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்!

ஒரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்!

நமது நிருபர்

துாத்துக்குடி மாவட்டம், புதுப்பட்டியில், டி.என்.டி.டி.ஏ., என்ற பெயரில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவிக்கு, தலைமை ஆசிரியை மேரி, ஆசிரியர் ஜீவா என இருவர் பணியில் உள்ளனர். ஆனால், இருவரும் மாணவிக்கு பாடம் நடத்துவதில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q0lgnx3z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* தலைமை ஆசிரியை மேரிக்கு, 1.30 லட்சம், ஜீவாவிற்கு, 80,000 ரூபாய், பள்ளி சமையல் உதவியாளருக்கு, 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.* ஆனால், கரும்பலகையில் உள்ள தேதியை மாற்றக் கூட அவர்களுக்கு நேரமில்லை. * கடந்தாண்டு பள்ளியில், ஐந்து மாணவர்கள் படித்த நிலையில், தற்போது ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A sagayanathan
ஜூலை 03, 2026 06:23

தனியார் பள்ளியில் என்ன படித்தார்கள் என்ன கல்வித் தகுதி என்று கூட தெரியாமல் வெறும் 15000 சம்பளம் வாங்கும் டீச்சரிடம் நாம் அனைவரும் தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறோம் அரசாங்கம் அனைத்து சலுகைகளும் கொடுத்து பள்ளியை நடத்துகிறது ஆனால் நாம் யாரும் சேர்க்கவில்லை குழந்தைகளை சேர்த்து விட்டு இந்தக் கேள்வியை கேட்கலாம் நாம் கேட்க மாட்டோம் ஏனென்றால் பயம் அரசாங்க ஆஸ்பத்திரி அரசாங்க பள்ளி என்றால் அங்கு சரிவர எதுவும் நடக்காது என்று இத்தனை ஆண்டு காலமாக திராவிட மாடல்கள் நம் மனதில் பயத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டனர் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள் அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளை எந்த தனியார் பள்ளியிலும் சேர்க்காமல் குறைந்தது ஒரு 50 குழந்தை ஆவது அந்த ஸ்கூலில் ஒரே நாளில் சேருங்கள் அங்கு கலெக்டரே வருவார் அவரவருடைய வேலையை திறம்பட செய்வார் நாம் செய்வதில்லை இதில் முதல் குற்றவாளி திராவிட மாடல் கட்சிகள் இரண்டாம் குற்றவாளி பொதுமக்கள் ஆகிய நாம்


S SRINIVASAN
ஜூலை 02, 2026 17:52

ஒரே ஒரு மாணவிக்கு இரண்டு ஆசிரியர்களை விட்டு சென்ற திராவிட மாடல் அரசு.


அங்கு
ஜூலை 02, 2026 15:16

அனைவரின் சம்பளத்தையும் அந்த குழந்தைக்கு கொடுத்து வேறு எங்காவது படித்துக்கொள்ள அரசு ஏற்பாடு செய்தால் நன்று


கடல் நண்டு
ஜூலை 02, 2026 09:01

விளங்குமா தமிழ்நாடு??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை