உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்த பணம் விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம்; கலெக்டர் அலுவலக பணியாளர்கள் 3 பேர் கைது

ஒப்பந்த பணம் விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம்; கலெக்டர் அலுவலக பணியாளர்கள் 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ரோடு அமைத்ததற்கான ஒப்பந்த பணத்தை விடுவிக்க ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சித்துறை இரண்டு வரைபட அலுவலர்கள், உதவியாளர் ஒருவர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்ட அரசு பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரர் ஒருவர் பரமக்குடி பகுதியில் ரோடு அமைக்க டெண்டர் எடுத்துள்ளார். அந்த பணி முடிந்த நிலையில் ஒப்பந்த தொகையை வழங்குமாறு கலெக்டர் அலுவலக 2வது தளத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி முகமை பொறியியல் பிரிவில் உள்ள மூத்த வரைபட அலுவலர் வீரசேகரனை அணுகினார்.ஒப்பந்த தொகையில் ஒரு சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும். அதனை இளநிலை வரைபட அலுவலர் நாகலிங்கத்திடம் கொடுக்குமாறும் கண்டிப்புடன் வீரசேகரன் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் நோட்டுகளை ஒப்பந்ததாரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை நேற்று ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவில் சென்று அவர் நாகலிங்கத்திடம் கொடுத்தார்.அவர் பணத்தை உதவியாளர் அருணிடம் கொடுக்க, அருண் வீரசேகரனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மூவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கணினிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ராஜா
நவ 05, 2025 15:00

கண்துடைப்பு நாடகம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது


Sathya Gold
நவ 05, 2025 13:43

நிரந்தர பணி நீக்கம் அவசியம்


sundarsvpr
நவ 05, 2025 11:26

லஞ்சம் வாங்கிய பணியாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். சரி. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரரை எப்படி பாராட்டுவது? இதனை நீதிமன்றமும் அரசும் பரிசீலிக்கவேண்டும், இந்த நிகழ்வு முதல் தடவையா என்பது தெரியாது. இதனையும் கண்டுபிடித்து இதனால் பயன் அடைந்த நபர்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்


rajan
நவ 05, 2025 10:28

These fellows should be punished so that other officials afraid to commit this type of crine. Govt should include amed the law and include it. No point in publishing this news daily like the price of petrol.


Prasanna Krishnan R
நவ 05, 2025 10:04

அவர்கள் ஒரு நல்ல குலத்தில் பிறந்திருந்தால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அவமதிக்க வேண்டும்.


Mario
நவ 05, 2025 09:34

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த என்கவுன்ட்டர் நிபுணர் டி.எஸ்.பி. ரிஷிகாந்த் சுக்லா, ஊழல் மற்றும் மிரட்டல் மூலம் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்தது, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.


Keshavan.J
நவ 05, 2025 10:38

அப்போ இவங்களை விட்டுடலாமா 100 கோடி பெரியது என்பதால் . 200 ரூபாய் கேவலம் நீ.


KOVAIKARAN
நவ 05, 2025 09:28

ஊழல் செய்து கையும் களவுமாக பிடிபட்டால், விசாரணையின்றி நிரந்தர பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஊழல் நிறைந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டங்களை மத்திய அரசு திருத்தவேண்டும். அதற்குப்பின் தான் லஞ்ச லாவண்யங்கள் ஒழியும்.


Palanisamy Sekar
நவ 05, 2025 09:26

பாவமாதான் இருக்குது. இந்த வேலைக்காக எத்தனை லட்சம் கொடுத்து வந்தார்களோ தெரியல. வாங்குற சம்பளத்துக்கு வட்டி மட்டும்தான் கட்டுவாங்க போல. அதனாலதான் லஞ்சம் வாங்கினேன்னு சொன்னா கோர்ட் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்? பணம் வாங்கிய அரசியல்வாதியை பற்றியும் சொல்லிவிட்டால் அவர்கள் மீது வழக்கு போடப்படுமா என்றும் தெரிஞ்சாகணும்.. இந்த ஆட்சியே லஞ்சத்தில் உச்சம் தொடுகின்றபோது, ஆளும் தரப்புக்கு லஞ்சம் கொடுத்து வேளைக்கு சேர்ந்தவர்கள் மட்டும் கையரிப்புக்கு மறுந்துபோட்டுட்டு சும்மா இருக்க முடியுமா? எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் எல்லோருமே லஞ்சம்தான். தமிழ்நாடு என்பதை லஞ்ச மாநிலம் என்று பெயர் மாற்றம் செய்யலாம் போல


V.Mohan
நவ 05, 2025 09:05

இந்த மாதிரி அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதையோ, மற்ற ஆதரவாளர்கள் நிலம் வாங்கும், விற்கும் தொழிலில் போட்டி போட்டு டவுன் பிளானிங் துறை, பதிவுத்துறைக்கும் ஏராளமாக லஞ்சம் தந்து எந்த இடத்தில் வேண்டுமானாலும் மனைகள் பிரித்து பகல் கொள்ளை அளவு ரேட்டை உயர்த்துவதற்கும், இன்னும் பல தறைகளில் அடாவடியாக லஞ்சம் தர, பெற, செளகரியமான ஆட்சியாக மாடல் ஆட்சி இருப்பதாலும், கையில காசு வாயில தோசை என்பது போல தேர்தல் சமயத்தில் "தாராளமாக" இருப்பதாலும் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டில் "லஞ்ச ஊழல்" தான் என்றும் ஆட்சி நடத்தும்... மாற வாய்ப்பே இல்லை.


Mithu
நவ 05, 2025 08:24

This is the only way to recover the money they have already paid at the time of recruitment. This is the naked truth


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை