உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் பர்மிட் வாங்க ஆந்திரா, கேரளாவில் 3 நாள்: தமிழகத்தில் ஆறு மாதமா?

பஸ் பர்மிட் வாங்க ஆந்திரா, கேரளாவில் 3 நாள்: தமிழகத்தில் ஆறு மாதமா?

சென்னை: தனியார் ஆம்னி பஸ்களை பதிவு செய்வது, 'பர்மிட்' புதுப்பிப்பு, உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பெற, இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

சென்னையில் இருந்து தினமும், 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், 1,300க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல மாவட்டங்களில், 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியருக்கான சேவை வழங்குவதில், தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆனால், தனியார் பஸ்களுக்கான சேவைகளை, தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், உடனுக்குடன் வழங்குவதில்லை; இன்னும் பழைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு பஸ்சை புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றால், போக்குவரத்து ஆணையரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து, வாகன ஆய்வாளர், விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு வந்து ஆய்வு செய்கிறார். அதன்பின், ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. அதற்கான அறிக்கை, வட்டார போக்குவரத்து அதிகாரி வாயிலாக, துணை அல்லது இணை ஆணையர் அலுவலகங்களுக்கு செல்கிறது. இறுதியாக, ஆணையரகத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை சரியாக செய்தாலே ஒரு வாரம் போதும். ஆனால், ஒரு பஸ்சை புதிதாக பதிவு செய்வதற்கு இரண்டு மாதங்களாகி விடுகிறது. இதேபோல, ஏற்கனவே உள்ள ஆவணங்களை சரிபார்த்து, பர்மிட் புதுப்பிப்பதற்கும், மீண்டும் பழைய முறையையே பின்பற்றி தாமதம் செய்கின்றனர். உரிமையாளர்கள் பெயர் மாற்றத்துக்கு, ஆறு மாதங்கள் வரை தாமதம் ஏற்படுத்துகின்றனர். ஆனால், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில், ஆதார் அட்டையுடன் கூடிய, 'பயோமெட்ரிக்' முறையை அமல்படுத்தி, இதுபோன்ற சேவைகள், ஆவணங்களை, அதிகபட்சமாக மூன்று நாட்களில் வழங்குகின்றனர். தமிழகத்தில் அதுபோன்ற நடைமுறையை பின்பற்றாதது ஏன் என்று, தெரியவில்லை. சில ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. பணம் கொடுத்தால், பணிகளை விரைந்து முடிக்கின்றனர். தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சீரான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

சிட்டுக்குருவி
செப் 14, 2025 05:51

நீங்கள்தான் சொல்கின்றீர்களே ப்ரோக்கர்கள் இருக்கின்றார்கள் என்று .உடனே முடித்துவிட்டால் எப்படி துறை தலைமைக்கு கமிஷன் கிடைக்கும் .எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா என்ற ஊழல் விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்போது தமிழகத்தில்மட்டும் அமைக்கப்படவில்லையே அதிலிருந்தே தெரியவில்லையா? இதற்க்கெல்லாம் ஒருநாள் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் .வரும்காலங்களில் வரும் புதிய அரசுகள் கடந்த 30 வருடங்களாக ஆட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்கலின் சொத்துகளின் தணிக்கை செய்யவேண்டிய சட்டங்கள் இயற்றலாம் .தப்புவது கடினமே .


Gajageswari
செப் 14, 2025 05:39

எதற்கு இன்னும் பெர்மிட் முறை. இது ஒரு ஆங்கிலேயர் நடைமுறை. பெர்மிட் இருந்தாலும் வாகனங்கள் உள்ளூர் மாபியா அனுமதி தேவை


S SRINIVASAN
செப் 13, 2025 19:32

COLLECTION CORRUPTION IS NOT THERE NO PERMIT


Vasan
செப் 13, 2025 16:04

In Tamilnadu they check the required documents and some times additional documents also thoroughly before giving approval, that is why it takes time. They follow 5S and 3C in Dravidan model.


Soundar R
செப் 14, 2025 09:59

ஆமாம் எக்ஸ்ட்ரா காகிதங்கள் பச்சை நிறத்தில் காந்தி தாத்தா படம் போட்டு இருக்க வேண்டும்


Ram pollachi
செப் 13, 2025 14:32

கேரளாவில் அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகள் அதிகம் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருக்கு தமிழகம் போல் சமவெளி கிடையாது எரிபொருள் மற்றும் பராமரிப்பு, ஊதியம் கொடுத்தால் அரசை நடத்த முடியாது.... கொடுத்த பணத்திற்கு பயண சீட்டு கிடைக்காது... பேருந்து ஞாயிறு விடுமுறை.... சீருடை மற்றும் பேட்ஜ், பெயர் எதுவும் இருக்காது, விதிமுறைப்படி ஓட்டுவது கிடையாது வேகத்தடையை மதிக்காமல் அப்படி இயக்குவது கண்ணால் பார்க்க முடியும் மொத்தத்தில் சர்க்கஸ் வண்டி... பல வித்தைகளை கற்றுக்கொள்ள முடியும்....


Ram pollachi
செப் 13, 2025 14:16

தமிழ்நாட்டில் கடிகாரத்தை பார்த்து நேரம் சொல்வதை விட தனியார் பேருந்து வந்தால் நேரம் சொல்லும் மக்கள் அதிகம் அந்த அளவுக்கு தொழிலில் பக்தி, நேரம் தவறாமை, ஒழுக்கம் இருந்தது பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டு நாஸ்தி ஆகிவிட்டது.... இன்றும் பல வண்டிகள் பர்மிட் உள்ள வழித்தடத்தை விட்டு விட்டு அதிக வருவாய் வரும் வழித்தடத்தில் இயங்குகிறது. எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆசிர்வாதம் மற்றும் கவனிப்பு.... போ.துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுத்தத்தில் நிற்காமல் கூட்டம் எங்கே உள்ளதோ அங்கேயே நிரந்தரமாக நிற்கிறது மக்கள் அதையும் கண்டுகொள்ளவில்லை. இது ஒரு அத்தியாவசிய சேவை துறை என்பதை கடந்து பணம் கொட்டும் துறையாக மாறிவிட்டது.... தற்போது கூட சிற்றுந்து பர்மிட் கொடுத்தார்கள் அதை வாங்கி இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கி தற்போது நடுரோட்டில் நிற்கிறது வாங்கியவர்கள் அதிக விலை விற்க இருக்கிறார்கள் வி(ம)டியலுக்கு யாரும் தயார் இல்லை. அரசு ஊழியர்களின் நேர்மை கண்ணியம் கெட்டதற்கு நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே காரணம்...


Kasimani Baskaran
செப் 13, 2025 13:16

திராவிட[த்திமிர்] மனப்பான்மை என்பது இதுதான். தொழில்கள் கூட தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது இதனால்தான். திருந்தாத ஜென்மங்களாக இருந்தால் உடன்பிறப்புக்கள் ஓட்டுக்கூட போடமாட்டார்கள்.


Chandru
செப் 13, 2025 12:11

As long as you have Rs.200 oopis in tamilnadu things will not change for the better in TN. Oopigal tirundha muyarchi seyyanum


Kasimani Baskaran
செப் 13, 2025 11:24

அங்கு யூனிட் ஆப் மெஷர் நாள்.. இங்கு வருடம். தமிழகம் கருந்துளைக்குள் இருக்கிறது. திராவிட மகள் யாராவது அமெரிக்க துணை முதல்வருக்கு மணைவியானால் ஒருவேளை வேகமெடுக்கும். அது வரை தீம்க்காவுக்கு ஓட்டுப்போட்டு ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கவும்.


திகழ்ஓவியன்
செப் 13, 2025 11:59

அப்போ அங்கே போயி வாங்கி க சொல்லு , என் ஹிமாச்சலுக்கு AIIMS THAMILANATRIKKU AIIMS , அங்கு முடித்து 3 வருடம் அனால் இங்கு இன்னமும் தொடங்கவில்லை CONSTRUCTION இதை கேளு


Balaa
செப் 13, 2025 11:19

அந்த மாநிலத்தில் துரித லஞ்சம் , துரித வேலை. இங்கு விஞ்ஞான பூர்வ லஞ்சம் , அதனால் தாமதம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை