உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்துக்கு சபரிமலையில் 5 ஏக்கர்; கேரளாவுக்கு பழநியில் 5 ஏக்கர்; நிலம் வழங்க இரு மாநிலமும் முடிவு!

தமிழகத்துக்கு சபரிமலையில் 5 ஏக்கர்; கேரளாவுக்கு பழநியில் 5 ஏக்கர்; நிலம் வழங்க இரு மாநிலமும் முடிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சபரிமலையில், தமிழகத்திற்கு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். அதற்கு பதிலாக, பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உள்ளோம்,'' என, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி: கண்ணகி கோவில் கட்டவும், கோவிலுக்கு செல்லும் வழிப் பாதையை செப்பனிடவும் அனுமதி அளிக்க வேண்டும் என, கேரள மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில், 30 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வசதி ஏற்படுத்துவதற்காக, சபரி மலையில் 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். அவர்கள், பழனியில் இடம் தந்தால் தருவதாகக் கூறினர். பழனியில் இடம் தர தயாராக உள்ளோம் என்று, தெரிவித்துள்ளோம்.அய்யப்பன் கோவில் விழா காலங்களில், தமிழகத்தில் இருந்து செல்வோருக்கு உதவ, சன்னிதானத்தில் சுழற்சி முறையில், இருவரை நியமித்துள்ளோம். அவர்களுக்கு அறை, உணவு வழங்கப்படுகிறது. தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, ஜனவரிக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

S.jayaram
செப் 24, 2025 08:19

முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பார்க்க மரங்களை வெட்ட அனுமதி பேச்சு பேசமுடியலை இத்தனைக்கும் அந்த இடத்திற்கு கட்டணம் வேறு செலுத்திக் கொண்டு வருகிறோம், 5 மாவட்ட 2 கோடி மக்களின் தண்ணீர் தேவைக்கு நீர்மட்டம் உயர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல் படுத்தமுடியாமல் 5 வருடத்தை ஒப்பெத்தி விட்டீர்கள், இதிலே இடையில் தமிழ்மக்கள் சார்பாக நன்றி பினரயிக்கு தெரிவித்தார் இந்த முதல்வர் எதற்கு தெரியுமா இந்தமரங்களை வெட்ட அனுமதி கொடுத்ததற்கு, ஆனால் நடந்தது என்ன அந்த பினராயி அந்த அதிகாரியை இவர் நன்றி தெரிவித்த தினமே அந்த இடத்தில் இருந்து மாற்றி விட்டார். இந்த செயலால் இன்னும் மரம் வெட்ட முடியலை, தமிழக மக்களையும், தமிழ் நாட்டையும் தலை குனிய வைத்ததுதான் மிச்சம் இதுல தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் என்று மக்களை ஏமாற்றும் விதமாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.


Geethanjali Nil
செப் 24, 2025 05:16

ஏன் பவ்ட் திருவண்ணாமலை யில் தெலுங்கு மக்களுக்கு ஆந்திரா மக்களுக்கு ரெஸ்ட் ஹோமோ என்னவோ ஆந்திரா கிட்ட ஏன் நிலம் கேட்கல..பாசம்


அருண் பிரகாஷ் மதுரை
செப் 23, 2025 23:14

கேரளாகாரர்களுக்கு பழனியில் இடம் தேவைப்பட்டு இருக்கும்.தங்கும் விடுதி, உணவகம் கட்டி அவர்கள் காசை மிச்சம் செய்ய. வெளியில் தங்கினால் அதிக செலவாகும். தமிழனை சாம்பாதிக்க விடலாமா..இடத்தை சும்மா கொடுத்தால் பிரச்சினை வரும்.அதுதான் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு.. யார் நிலத்தை யார் கொடுப்பது.. 5 வருடம் உங்களை ஆட்சியில் இருக்கதான் ஓட்டு போட்டார்கள்.. மக்களை, பொது சொத்தை விற்பதற்கு இல்லை..


Palanisamy T
செப் 24, 2025 07:02

நல்லாச் சொன்னீர்கள் 5 வருடமா உங்களை ஆட்சியில் இருக்கத்தான் ஓட்டுப் போட்டார்கள். மக்களின் பொதுச் சொத்தை விற்பதற்க்கு அல்லவென்று. முன்பு திருவண்ணாமலை இப்போது சபரிமலை. அன்று சபரிமலை தமிழகத்தை சேர்ந்த மண். திராவிடம், மதச்சார்பற்றக் கொள்கை என்று சொல்லிச் சொல்லி தமிழர்களுக்கு இவர்கள் தன்னையறியாமல் துரோகம் செய்கின்றார்கள். இவர்களுக்கு திராவிடமும் விளங்க வில்லை. மதச் சார்பற்றக் கொள்கை புரியவுமில்லை. திராவிடத்திற்கும் நேற்றுவந்த மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கான தீர்வு நாளைய தமிழகத்திற்கு நல்ல தமிழும் ஆங்கிலமும் கற்ற, தமிழ் ஞானம் பெற்ற முதல்வர் தமிழகத்திற்கு தேவை. நாம் அறிஞர் அண்ணாவோடு அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம்.


Ram pollachi
செப் 23, 2025 22:45

மணிகண்டன் சிலையை பழனி கோவிலிலும், குமரகுரு சிலையை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து மன சாந்தி அடையுங்கள்....


pv, முத்தூர்
செப் 23, 2025 20:01

ஆன்மிகத்தில் வடிவேல் பேக்கரி காமெடி வேண்டாம்.


Sivaram
செப் 23, 2025 18:38

சேகர் பாபு அவர்களே அரசன் வேறு தெய்வம் வேறு. ரொம்பவும் சோதனை செய்யாதீர்கள் பின்னால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்


R.MURALIKRISHNAN
செப் 23, 2025 16:49

அப்ப இவர் ரியல் எஸ்டேட் பிஸினஸ் தான் பேசிட்டு வந்தாரா? சுவாமி சரணம்


Rathna
செப் 23, 2025 16:23

என்ன விஞஞானம் முறை


தமிழ் மைந்தன்
செப் 23, 2025 16:12

கும்பாபிஷேகத்திற்கு உத்தாரவா


Rajah
செப் 23, 2025 15:41

இந்து மதம் அழிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் தங்கள் செல்லப் பிள்ளை வன்னி அரசு இதற்கு சம்மதிப்பாரா? முதலில் வன்னி அரசிடம் பேசி ஒரு முடிவுக்கு வரவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை