வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்தை வட கிழக்கு மழை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,21) 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ghru050n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. நவ.,23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (நவ.,21) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நவ.,25ம் தேதி
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நவ.,25ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நவ.,26, 27ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை வட கிழக்கு மழை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது