உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் தருவோருக்கு 5 மடங்கு இழப்பீடு

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் தருவோருக்கு 5 மடங்கு இழப்பீடு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ள புதிய விமான நிலைய திட்டத்திற்கு நிலம் தருவோருக்கு, சந்தை மதிப்பை விட, ஐந்து மடங்கு இழப்பீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யும் பணி துவங்கியுள்ளது. வரும் மார்ச் முதல் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையம், டில்லி, தெலுங்கானா ஐதராபாத் விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது. இருப்பினும் ஆண்டுக்கு, 2 கோடி பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அதற்கேற்ப விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, போதிய இடம் இல்லை. எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதை, பொது - தனியார் கூட்டு முயற்சியில், 29,150 கோடி ரூபாயில், தமிழக அரசு அமைக்கிறது. பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றிய, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் தேவை. அதில், 3,600 ஏக்கர் தனியார் வசம் உள்ள பட்டா நிலம். மீதி, அரசுக்கு சொந்தமானது. நிலம் கையகப்படுத்தும் பணியின் முதல் அறிவிப்பு, 2024 பிப்ரவரியில் வெளியானது. தொடர்ந்து, கையகப்படுத்த உள்ள நிலத்தின் உரிமையாளர், நிலத்தின் வகை, அளவு உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதுவரை, 6,000 நபர்களிடம், 3,600 ஏக்கர் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு பணி முடிந்துள்ளது. நிலம் வழங்குவோருக்கு, நிலத்தின் சந்தை மதிப்பைவிட, 3.40 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்திருந்தது.இந்நிலையில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், சமீபத்தில் பரந்துாரில் மக்களை சந்தித்து பேசினார். இந்த விவகாரத்தில் அரசின் மீது, விஜய் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். எதிர் கட்சிகளும் அரசை விமர்சித்தன. எனவே, பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் வழங்குவோருக்கான இழப்பீட்டை, சந்தை மதிப்பை விட, ஐந்து மடங்கு கூடுதலாக வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வரும் மார்ச் முதல், நிலம் கொடுத்தோருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

HEBRON SHALOM
பிப் 02, 2025 22:59

கேளம்பாக்கம் திருப்போரூர் பாதையில் உள்ள அரசாங்க நிலம் 5000 ஏக்கர் உள்ளதாக திரு.அன்புமணி ராமதாஸ் கூறினார் அரசாங்கம் அதில் விமான நிலையம் அமைக்கலாமே பரந்தூரில் ஐந்து மடங்கு விலை கொடுக்க தயார் என்றால் வேறு ஏதோ காரணமாக இருக்கலாம்.


E Pandian
பிப் 02, 2025 00:18

ஐந்து மடங்கு கொடுப்பீர்கள் ஐந்து தலைமுறைக்கு சாப்பிடுவதற்கு அரிசி கொடுக்கிறீர்களா உங்களிடம் பல தலைமுறை சாப்பிடுவதற்கு கார்பெட் நிறுவனம் வைத்துள்ளீர்கள்


E Pandian
பிப் 02, 2025 00:14

கார்ப்பரேட் காரர்கள் வந்து செல்வதற்கு நிலத்தை கொடுத்துவிட்டு கார்ப்பரேட் காரற்களிடம் உணவுக்கு கையேந்து நிலைமை வரப்புகிறது அரசு கொடுக்கும் அரிசியில் எண்ணற்ற பிளாஸ்டிக்


Ethiraj
ஜன 31, 2025 11:18

Pl give that money to min.of defence OTA they will shift in 6 months to some other location Dont kill agriculture


Gajageswari
ஜன 31, 2025 05:23

முதலில் தமிழகம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்பு திருத்தபட வேண்டும். இதேவே டங்ஸ்டன். பரந்தூர் பிரச்சினை தீர்வு. அதே சமயம் முத்திரை தீர்வை 7%ஆக குறைக்க வேண்டும்


அப்பாஜிராம்
ஜன 30, 2025 13:07

ஓதுக்காதீங்க. மாசா மாசம் ஏர்போர்ட்டின்.லாபத்துக்கேத்த மாதிரி டிவிடெண்ட் வர்ர மாதிரி ஒப்பந்தம் போடுங்க. ஆபம் வர வரைக்கும் மினிமம் பேமெண்ட் கேளுங்க்ச். உள்ளுர் தத்திகளை நம்பாம நல்ல மும்பை, டெல்லி வழக்கறிஞர்களை ஆலோசனை கேளுங்க.


Sivagiri
ஜன 30, 2025 12:43

நிலம் கொடுக்கிற விவசாயிகளை, அவங்க நிலத்தின் மதிப்புக்கு தக்க, கட்டப்போகிற, ஏர்போர்ட்டில், நிரந்தர பங்குதாரரா ஆக்கி , அதன் லாபத்தில் பங்கு கொடுத்து விடும் திட்டத்தை கொண்டு வரலாம். அல்லது அரசு புறம்போக்கு நிலத்தை / கோவில் நிலங்களை - - தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை போல - 50 வருஷம் - அல்லது 70 வருஷம் - என்று - ஏர்போர்ட்-க்கு குத்தகைக்கு விட்டு, மாசாமாசம் குத்தகை தொகை கொடுத்து விடலாம்... ஆனால் ஐந்து மடங்கு கொடுப்போம் என்று இந்த த்ராவை மாடல் சொல்வதெல்லாம் நம்பறா மாதிரி இல்லை , ஐந்து மடங்கு கொடுக்கிறதா இருந்தா - ஈசிஆர்-ல கூட கிடைக்குமே , மந்திரிகள் பினாமிகள் பிடிச்சு வச்சிருக்கிற நிலங்களை / ரெசார்ட்களை எல்லாம் பறிமுதல் செய்யலாம் . . .


Ravindhar Gandhidas
ஜன 30, 2025 12:20

அருமை.


rama adhavan
ஜன 30, 2025 10:28

அப்படித்தான் மாத்தூர் திட்டத்துக்கும் சொல்லி இறுதியில் சதுர அடிக்கு ரூ. 125 தான் தந்தார்கள். மதிய அரசின் சந்தை மதிப்பு வழிகாட்டி பேரில் தரவில்லை. அதுபோல் இதையும் செய்யலாம். ஏன் ஏக்கருக்கு இழப்பீடு இவ்வளவு என இப்போவே சொல்லலாமே? எதற்கு மூடு மந்திரம்? இறுதியில் நில எடுப்பு தாசில்தார் நிலத்துக்கு பல கணக்குகள் போட்டு அடிமாட்டு விலை போடுவார். அரசு அவ்விலைக்கு 5 மடங்கு போட்டு சதுர அடி ரூ 200 என சொல்லி ஆணை போடும். நிலம் கொடுப்போர் கண்ணில் ஆற்று வெள்ளம் ஓடும். பல நில எடுப்புகளில் நாம் கண்டது தான் இது. இதற்கு நடுவில் நிலம் கொடுப்போர் சங்கம் தொடங்குவர். நடுவில் வக்கீல்களுக்கு பெரும் தொகை வேறு வரும் சிறு பணத்தில் அழ வேண்டும். இவைதாம் காலம் காலமாக நடக்கும் கதை.


GMM
ஜன 30, 2025 09:44

சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க மாநில நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. பதிவு விலை மற்றும் அதற்குரிய வட்டி மட்டும் கொடுக்க வேண்டும். 5 மடங்கு தர எப்போதும் அதிகாரம் இல்லை. பொது உபயோகத்திற்கு கொடுக்க முடியாது என்று கூற முடியுமா? நிலம் +அரசு அபிவிருத்தி முதலீடு தனியே கணக்கிட்டு , அபிவிருத்தி செலவுகள் திரும்ப பெற வேண்டும். மேலும் இழப்பீடு பெரும் நபர் அனைத்து ஒரிஜினல் ஆவணம் வைத்து இருக்க வேண்டும். சுமார் 30 ஆண்டுகள் குடியிருந்து /பயிர் செய்து வரவேண்டும். வரி பணத்தை அரசு பாழ் செய்ய முடியாது.


rama adhavan
ஜன 30, 2025 11:41

தரலாம். ஆனால் மாநில அரசு தர மாட்டார்கள். மதிய அரசின் 2014இல் அறிவித்து உள்ள சந்தை மதிப்பின் படி நிர்ணயம் செய்து இழப்பீடு தந்து நிலம் எடுத்தால் கட்டுபடி ஆகாது என ஏற்கனவே சொல்லி விட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை