உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அன்னதானம் நடத்த விடாமல் தடுத்த 500 பேர் கைது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

அன்னதானம் நடத்த விடாமல் தடுத்த 500 பேர் கைது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல்: ஐகோர்ட்டில் அனுமதி பெற்று, கோவில் திருவிழாவிற்கான அன்னதானத்தை, அரசுக்கு சொந்தமான மைதானத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஒரு தரப்பை சேர்ந்த, 500 பேர் தானாக முன்வந்து கைதாகினர். பின்னர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், மறியலிலும் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், என்.பஞ்சம்பட்டி மைதானத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, அன்னதானம் நடத்த, ஒரு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்றனர்.கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்த நிலையில், கிராம மைதானத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் திரு இருதய ஆண்டவர் சர்ச் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கினர்.அவர்களிடம், தாசில்தார் தலைமையில் பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் 3வது நாளாக போராட்டம் நடந்த நிலையில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு போராட்ட குழுவினர் சர்ச் வளாகத்திலிருந்து வெளியே வந்தனர். மைதானத்தில் இரும்பு தடுப்புகளுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய, தாங்களாகவே முன்வந்து கைதாவதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் அழைத்து செல்லப்பட்டனர். அதில், 119 ஆண்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து, வழக்கமான பூஜைகளுடன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குறிப்பிட்ட மைதானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அன்னதானமும் நடந்தது.இந்நிலையில், கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட பின், குறிப்பிட்ட மைதானத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்க வேண்டும்.இந்த கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், தங்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்க போவதாக கூறி, கருப்புப்பட்டை அணிந்த படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.கலெக்டர் அலுவலக சர்வீஸ் ரோட்டில் மறியலிலும் ஈடுபட்டனர். கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் அவர்களில் சிலரை அழைத்து பேசினர். அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அதிகாரிகளிடம் 'ஈகோ' நிலவுகிறது: அதிருப்தி வெளியிட்டது ஐகோர்ட்

பஞ்சம்பட்டி கோவில் விழாவை முன்னிட்டு, அரசு மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சுரேஷ் பெர்க்மன்ஸ் என்பவர், 'அன்னதானத்திற்கு தடை விதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், '2017ல் சமாதான கூட்டத்தில், 100 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட விழாக்களை தவிர வேறு எந்த விழாவையும் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. இது வரை அங்கு மதம் சார்ந்த அன்னதானம் நடக்கவில்லை. தற்போது அன்னதானம் நடத்த உரிமை கோரியதை, தனி நீதிபதி அனுமதித்துள்ளார். இதன் மூலம் இனி தொடர்ந்து அன்னதானம் நடத்த உரிமை கோருவர்' என, வாதிட்டார். நீதிபதிகள், 'அன்னதானம் துவங்கிவிட்டதால் தடை கோரிய மனு காலாவதியாகிவிட்டது. அம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிரதான மனு மீதான விசாரணை நவ., 13க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. பொதுச்சாலையாக உள்ள மாற்று இடத்தில் அன்னதானம் நடத்தலாம் என தாசில்தார் உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல. அவர் மதியம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர். மதியம், 2:40 மணிக்கு இவ்வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். தாசில்தார் முத்துமுருகன் ஆஜரானார். நீதிபதிகள், 'பொது நோக்கத்திற்காக அரசு இடத்தை யாரும் பயன்படுத்தலாம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அதிகாரிகள் ஏன் தேவையின்றி பிரச்னையை உருவாக்குகின்றனர். சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் மக்களை சந்திப்பதில்லை. கள நிலவரத்தை ஆய்வு செய்தால் தீர்வு ஏற்படும்' என்றனர். தாசில்தார், 'இன்ஸ்பெக்டருடன் பஞ்சம்பட்டியில் ஆய்வு செய்தேன்' என்றார். நீதிபதிகள், 'மனிதர்களின் உணர்வுகளை அதிகாரிகள் புரிந்து கொள்வதில்லை. ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். தேவையின்றி அரசியல் கட்சிகள் பிரச்னைகளை உருவாக்குகின்றன. அதிக ஓட்டு வங்கி உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. இதனால் பலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 'ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், தற்போது ஒரு மாதிரியாக பேசுவார். அவர் எதிர்க்கட்சியாக மாறிவிட்டால் வேறு மாதிரியாக பேசுவார். ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர். அதிகாரிகள் 60 வயது வரை பதவியில் இருப்பர். அதிகாரிகள் தான் மக்களுக்கு பொறுப்பானவர்கள். அவர்கள் மத்தியில் 'ஈகோ' நிலவுகிறது. அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு தேவை' என்றனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், 'சம்பந்தப்பட்ட இடத்தை கிறிஸ்துவர்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

எஸ் எஸ்
நவ 04, 2025 20:48

கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக அரசு மேல்முறையீடு செய்வது அநியாயம். இந்த அரசு எப்போதும் இந்துக்களுக்கு எதிரானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


சிந்தனை
நவ 04, 2025 19:51

இந்த சட்டத்துறை ஹிந்துக்களிடம் மட்டும்தான் கௌரவம் உள்ளவன் மானமுள்ளவன் ரோஷம் சூடு சொரணை உள்ளவன் என்று காட்டிக் கொள்கிறது ஆனால் மற்றவர்களிடம் எல்லாம் இவை இல்லை என்று நிரூபிக்கப்படுகிறது


Yasararafath
நவ 04, 2025 19:17

அன்னதானம் தடுத்தது மிகப்பெரிய தவறு.இதில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதா.?


metturaan
நவ 04, 2025 18:44

கொடி ஏற்றம் தொடங்கி அலகு குத்தி அபிஷேகம், சுப்ரபாதம் வரை செய்து ஏசுவை ஹிந்து ஆக்கினாலும் அதென்னவோ பொது இடத்தை ஆக்ரமிக்கும் போது மட்டும் அந்நிய நாட்டு ஆட்களாகவே நடக்க தலைபடுவது வேதனையளிக்கிறது


Siva Balan
நவ 04, 2025 17:57

தமிழ்நாட்டிலிருந்து இந்து மதத்தினரை அடித்து விரட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.


Rajasekar Jayaraman
நவ 04, 2025 17:51

பொதுவெளியில் மதச் சடங்கு செய்வது அரசு நிலத்தை ஆட்டைய போட வா இதில் வேறு நூறு ஆண்டுகள் பயன்படுத்தியதாக அறிக்கை வேறு அரசு நிலத்தை யாருக்கும் ஒதுக்க கூடாது.


Natchimuthu Chithiraisamy
நவ 04, 2025 17:24

ஆரம்பம் ஆகிறது - வெளிநாட்டு காட்சிகள் - இந்துக்ககள் என்ன செய்யமுடியும்


N Sasikumar Yadhav
நவ 04, 2025 16:50

மற்ற நாடுகளில் இஸ்லாமியர்களும் கிருஷ்துவர்களும் அடித்து கொள்கிறார்கள் ஆனால் பாரதத்தில் இஸ்லாமியர்களும் கிருத்துவவன்களும் ஒற்றுமையாக இருந்து இந்துக்களை அடிக்கிறார்கள் . அப்படி அடித்து மதமாற்றிவிட்டால் பாரதத்திலும் இஸ்லாமிய கிருத்துவ சமாதானம் ??? ஆகிவிடும் ????


Arockia prabudass. I
நவ 04, 2025 16:28

நண்பர்களே.. மதம் இங்கு எந்த பிரச்சனையும் இல்லை... நாங்கள் இந்துக்கள் மற்றும் கிருஸ்தவர் இணைந்தே உறவுகளாக வாழ்கிறோம்... அன்ன தானத்திற்கு நன்கொடை வழங்கியும் இருக்கிறோம்... பாஸ்கு மைதானம் என்ற 150 வருட கால பெயர் எப்படி இப்பொழுது பொது மைதானம் ஆகும் என்று கேட்கிறோம்... அன்னதானம் தடுக்கப்படவில்லை.... பஞ்சம்பட்டி இந்து மக்களுக்கும் இது நன்றாக தெரியும்... சில கீழ்த்தரமான நாய்கள் அரசியல் பிழைப்பிற்காக இப்படி மத கலவரம் செய்கின்றனர்.... இங்கு நாங்கள் இந்து மற்றும் கிருஸ்தவர் பெண் கொடுத்தும் எடுத்தும் வாழ்கிறோம்... எல்லாம் தெரிந்து பிறகு பேசுங்கள்..


Rajasekar Jayaraman
நவ 04, 2025 17:53

அரசு நிலம் எப்படி பாஸ்கு மைதானம் ஆனது அரசு நிலத்தை ஆட்டைய போடவா.


Kalyanaraman Andhukuru.R.
நவ 04, 2025 18:51

இந்துக்களின் இடத்தில் நீங்கள் அத்துமீறி திருட்டுத் தனமாக ஆங்கிலேய அரசாங்கத்தின் சூழச்சியாக150 வருடமாக பாஸ்கு மைதானம் என்று ஆக்கிரமித்து வைத்துள்ளீர்கள் என்று சொல்ல வருகிறீர்கள். அல்லவா?


ஆரூர் ரங்
நவ 04, 2025 18:55

ஆங்கிலேயர் ஆட்டையை போட்டு இங்குள்ள மத நிறுவனங்களுக்கு கொடுத்ததெல்லாம் கர்த்தருக்கு ஏற்புடையதா?.


எஸ் எஸ்
நவ 04, 2025 21:29

அப்புறம் ஏன் போராட்டம்? அரசு நிலத்தில் நீங்கள் விழா நடத்தலாம் ஹிந்துக்கள் அன்னதானம் செய்ய கூடாதா? சகிப்புத்தன்மை என்பது ஹிந்துக்களுக்கு மட்டும்தானா? அன்பை போதிக்கும் மதம் என்பது எல்லாம் சினிமாவில் மட்டும்தான் போலும்


S.jayaram
நவ 04, 2025 16:03

அரசு வக்கில் 100 ஆண்டுகளாக பயன் படுத்துகின்றனர் என்கிறார். ஒரே ஒரு கேள்வி அங்கே இந்துக்கள் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கின்றனர், கிறிஸ்தவர்கள் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கின்றனர். என்று கூறுவாரா? மேலும் இந்த இந்தியா, தமிழ்நாடு யார்க்கு சொந்தம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வீகத்தை மாற்ற முயற்சிக்க கூடாது


சமீபத்திய செய்தி