உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் செயலாளராக இருந்த கண்ணன் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.* கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருந்த அம்ரித், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக நியமனம்.* தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பொது மேலாளராக இருந்த கவிதா, பால் கூட்டுறவு இணைய இணை மேலாண் இயக்குனர் ஆக நியமனம்.* தமிழக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இணை இயக்குநர் ஆக இருந்த முத்துக்குமரன், பேரிடர் மேலாண்மை முகமை இயக்குனர் ஆக நியமனம்.* தமிழக மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பொது மேலாளர் ஆக இருந்த, லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் ஆக நியமனம்.* ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தின் ஆணையராக இருந்த டாக்டர் மு.வீரப்பன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆக நியமனம்.* தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஆக இருந்த ரேவதி, உயர்கல்வித்துறை துணை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Chinna R
அக் 31, 2025 21:40

மக்கள் நல்ல கட்சி மனிதர்களை தேர்வு செய்ய வேண்டும்


திகழ் ஓவியன்
அக் 31, 2025 15:06

இந்த ias பதவி உயர்வை முதலில் நிறுத்தணும்... இவர்கள்தான் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க உதவுவதோடு, அவர்களும் நாட்டை கொள்ளையடிக்கின்றனர். ஆனால், இது பாவப் பணம் என்பது விரைவில் அவர்களுக்கு தெரிய வரும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை