உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதான ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்; ஆதாரங்களை வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

கைதான ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்; ஆதாரங்களை வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,23) இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை இரு மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fo62lurd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, மாணவி பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் பிரியாணி கடை நடத்தி வருவதும், ஏற்கனவே, மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் பற்றிய புது விபரங்களை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் தி.மு.க.,வின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. 1. ஒரு குற்றவாளி, தி.மு.க.,வில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி தி.மு.க., நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார்.2. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.3. அந்தந்த பகுதி தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க தி.மு.க., அரசே பொறுப்பு. எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதல்வர் ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் கைதான ஞானசேகரன் இருக்கும் போட்டோக்களையும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Saran
டிச 26, 2024 22:27

particularly the slums living people are in the they are responsible for electing the assemly or parliment .they won’t vote for the honest people.


பாலா
டிச 26, 2024 17:05

16 வயதுப் குறைவான வறிய குழந்தையுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு காமுகனை திருத்திப் படுத்தவில்லை என்று கொடுத்த பணத்தையும் வாங்கி வந்தவனை அன்றே பிடித்து 25 ஆண்டுகள் சிறையிலிட்டிருந்தால் இப்படியான திராவிடியன்களின் கொடுமைகள் நடந்திருக்காது.


Barakat Ali
டிச 26, 2024 13:59

திமுகவின் வரலாறு அறிந்தவர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியை அளிக்காது ......


Madras Madra
டிச 26, 2024 11:34

இந்த அரசியல் செய்தி தேவைதான் அப்பவாச்சும் திமுக குற்றவாளிகள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் என நம்புவோம்


Madras Madra
டிச 26, 2024 11:30

கண்காணிக்க பட வேண்டிய குற்ற பின்னணி நபர் திமுக என்பதால் தைரியமா செஞ்சிருக்காரு ஜாமீன்ல இருக்குற பல பேரும் தொடர்ந்து குற்றம் செஞ்சிட்டு தான இருக்கிறாங்க என்ன சட்டமோ என்ன ஒழுங்கோ


Bahurudeen Ali Ahamed
டிச 26, 2024 10:47

அடப்பாவிங்களா உங்களுக்கு என்னதான்யா வேணும், குற்றமிழைத்தவன் பிடிபடவில்லையென்றால் காவல்துறையை அரசை குறை சொல்வீர்கள், அது சரியானதுதான், குற்றவாளியை பிடித்தபின்பு இவன் திமுகாவை சேர்ந்தவன் பிஜேபியை சேர்ந்தவன் என்று அடித்துக்கொள்வீர்கள், இது தேவையா, மேலும் திரு அண்ணாமலை அவர்களே குற்றம் நிரூபிக்கப்பட்டபின் திமுகவில் இணைந்து பதவி யாரும் பெற்றுள்ளார்களா? ஆனால் பிஜேபியில் எத்துணை ரவுடிகள் தாதாக்கள் இணைந்து பதவிபெற்றுள்ளார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், உங்களிடம் ஒருவர் வந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் நீங்கள் அனுமதிப்பீர்களா அல்லது மறுப்பீர்களா? உங்களிடம் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஆயிரம் பேரில் 10 குற்றவாளியும் இணைந்திருப்பான் அந்த பத்துப்பேர் குற்றவாளி என்று உங்களுக்கு தெரியாது இதுதான் யதார்த்தம்


N.Purushothaman
டிச 26, 2024 14:34

ஏற்கனவே அவன் மேல பாலியல் சீண்டல் வழக்கு இருக்கும் போது அவனுக்கு மீண்டும் தப்பு செய்ய எப்படி அவ்வளவு தைரியம் வந்தது ? அது தான் கேள்வி .....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 10:14

சென்னையில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலையும் செய்யப்பட்டார் .... இது நவம்பர் முதல்வார செய்தி ..... குற்றமிழைத்தவர்கள் கட்சியினர், மூர்க்க காட்டேரிகள் என்றால் சட்டத்தின் பார்வை கருணைமயம் ஆகிவிடும் .....


Barakat Ali
டிச 26, 2024 09:38

கடந்த 2006 முதல் முதல் 2011ஆம் ஆண்டு வரை பெரம்பலூர் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார். கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வறுமை காரணமாக தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார். ஒரு சில நாட்களில் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும் படியும் கூறியுள்ளார். மகளை அழைத்துச் செல்வதற்காக சிறுமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்துள்ளனர். சிறுமி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சென்று பார்த்தபோது சிறுமி சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் உயிரிழந்தது, பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்முறை, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இறந்து போனார். ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பளித்தார். பாலியல் வன்முறை, மரணத்திற்கு காரணமாக இருத்தல், கூட்டுச் சதி ஆகிய மூன்று பிரிவுகளில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளில், ராஜ்குமாரின் கூட்டாளி ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, இருவருக்கும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மற்றவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 09:32

அண்ணாமலை ...... ஜாஃபர் சாதிக் மீது விசாரணை இழுபறியாகப் போய்க் கொண்டிருக்கிறதே ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 09:30

இதைச்சொன்னால் ஆடு சார் ஆடு சார் என்று கத்திக்கொண்டு ஓ noise கூட்டம் ஓடிவரும் ....