உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பீல் மனு விசாரணைக்கு 8 ஆண்டுகள்: தகவல் ஆணையம் மீது ஆர்வலர்கள் புகார்

அப்பீல் மனு விசாரணைக்கு 8 ஆண்டுகள்: தகவல் ஆணையம் மீது ஆர்வலர்கள் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உரிய முறையில் தகவல் கிடைக்கவில்லை என, 2017ல் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, எட்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கியிருப்பதாக, புகார் எழுந்துள்ளது.அரசு துறைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் பெற, தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அளிக்கும் மனுக்களுக்கு, பொது தகவல் அலுவலர், 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்.

மேல்முறையீடு

இந்த அவகாசம் கடந்த நிலையில், மனுதாரர் அதே துறையில் மேலதிகாரியிடம், முதலாவது மேல்முறையீடு செய்யலாம். இதிலும் பதில் கிடைக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில், இரண்டாவது மேல்முறையீட்டை தாக்கல் செய்யலாம். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களை பதிவு செய்து, வரிசைப்படுத்தி விசாரணை நடத்தி, மனுதாரருக்கு உரிய தீர்வு கிடைக்க செய்வதே, ஆணையத்தின் பணி. ஆனால், சில ஆண்டுகளாக, மாநில தகவல் ஆணையர்கள், மனுதாரர்களை தொடர்ந்து அலைக்கழிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பிட்ட சில தகவல் ஆணையர்கள், சட்டத்தை மீறும் பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக, தகவல் உரிமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிலர், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், பொது மக்கள் அளித்த மேல்முறையீடுகள் விசாரணைக்கு வர, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தாமதம் ஏற்படுவதாக, தகவல் உரிமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, சென்னை பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் பி.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், குறிப்பிட்ட சில தகவல்கள் கேட்டு, 2017ல் மனு செய்தேன். அதற்கு பொது தகவல் அலுவலரான, துறையின் சார்பு செயலர் உரிய தகவல்களை அளிக்கவில்லை. இது தொடர்பாக, மாநில தகவல் ஆணையத்தில், அதே ஆண்டில் இரண்டாவது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தேன். இந்த மனுவுக்கு மிக தாமதமாக, 2019ல் வரிசை எண் ஒதுக்கப்பட்டது. அதன்பின், என் இரண்டாவது மேல்முறையீட்டு மனு, எட்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருமாறு, ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

காலக்கெடு

ஒரு குறிப்பிட்ட தகவல்களை பெற, 30 நாட்கள் என காலக்கெடு இருக்கும் நிலையில், மேல்முறையீட்டு மனுவை வரைமுறையின்றி அதிகாரிகள் கிடப்பில் போடுவதால், சட்டத்தின் அடிப்படை நோக்கம் சிதைகிறது. ஓரிரு ஆண்டுகள் தாமதம் என்றால் கூட பரவாயில்லை; ஒரு மனுவுக்கு, எட்டு ஆண்டுகள் தாமதம் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thiru Murugan
மே 05, 2025 23:46

தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல் முறையீடு மனுவை பெற்று கொண்டு வழக்கு எண் பதிவு செய்து வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே பொது தகவல் அலுவலர் தகவல் தர முடியாது என்ற கடிதம் அனுப்பி வைப்பார் அதன் பிறகு தகவல் ஆணையத்தில் ஒரு கடிதம் வரும் பொது தகவல் அலுவலர் தங்களுக்கு தகவல் தந்து விட்டார் தகவல் வழங்கவில்லை என்றால் தகவல் வழங்கவில்லை என்று ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் கடிதம் அனுப்ப சொல்வார்கள் நாமும் தகவல் ஆணையத்தை நம்பி தகவல் வழங்கவில்லை நேரடி விசாரணை நடத்தி முழுமையான தகவல்களையும் ஆவணங்களையும் பெற்று தருமாறும் கடிதம் அனுப்பி வைப்போம் கடிதத்தை பெற்று கொண்ட தகவல் ஆணையம் நீங்கள் தகவல் கிடைக்கவில்லை என்று கடிதம் அனுப்பாத காரணத்தால் இந்த வழக்கு முற்றாக்கம் செய்யப்படுகிறது என்று வழக்கை முடித்து பொது தகவல் அலுவலரை பாதுகாக்கும் இதற்கு இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை காத்திருந்து கடைசியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொது மக்கள் பயண்படுத்த கூடாது என்ற மனநிலைக்கு மக்களை விரக்தி அடையும் நிலைக்கு செல்வதற்கான வேலையை தமிழ் நாடு மாநில தகவல் ஆணையம் செயல்பாட்டு கொண்டு இருக்கிறது


NATARAJAN R
மே 05, 2025 20:42

தகவல் ஆணையர் தகவல் தரவில்லை என்று புகார் அளித்தாலும் எந்த அபராதமும் விதிக்க மாட்டார்கள். நான் பல கடிதம் அனுப்பி பார்த்து விட்டு ஓய்ந்து போனேன்.


R.RAMACHANDRAN
மே 05, 2025 06:45

இந்த நாட்டில் அரசமைப்பு மட்டும் சட்டங்களை அமல்படுத்தும் அமைப்புக்கள் அவற்றை விட உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றி ஆதாயம் அடைவதில் குறியாக உள்ளன.இவைகளால் தான் நாட்டில் தீவிர வாதம் தலை தூக்குகிறது.


Ramanujam Veraswamy
மே 05, 2025 05:43

Justice delayed is denied. It is not only prerogative of Informtion Commission. Even High Courts and Supreme Court are also in the same boat. . A case filed in 2013 in Madurai Bench of Madras High Court was without any enquiry dismissed in 2021. An appeal was preferred in the same Court in 2021 itself. It is yet to see the light of the day while the petitioner suffers silently helplessly. This being the status, cases attended by Senior Lawyers like Mr.Kapil Sibal etc are heard and disposed of on day to day basis.The irony is - Still Judiciary cry about delay in Justice.God only can save petitioners, while we celebrate Courts are Gods representatives.


Kasimani Baskaran
மே 05, 2025 03:43

நீதிமன்றம் சென்று வழக்குத்தொடுத்தால் அதை விசாரித்து, வாய்தாக்கள் கொடுத்து, தீர்ப்பு சொல்லி, அதன் பின் பதில் சொல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கப்போட்டு, அதிலும் ஜெயித்து திரும்பவும் தமிழக அரசு தகவல் கொடுக்காது. வழக்கு போட்டவர் நொந்து செத்துப்போய் இருப்பார். உயிருடன் இருந்து உச்ச நீதிமன்றம் சென்றால் தமிழக அரசு பல கோடிகள் செலவு செய்து கபில் சிபலை வைத்து வாதாடுவார்கள்... இதுதான் நிதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதியின் நிலைமை.


புதிய வீடியோ