உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் அராஜகம் ஒழிக கோஷமிட்ட நடிகை கஸ்துாரி

அரசியல் அராஜகம் ஒழிக கோஷமிட்ட நடிகை கஸ்துாரி

சென்னை : தெலுங்கர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், ஹைதராபாதில் கைதான நடிகை கஸ்துாரி, நவ., 29ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது, 'அரசியல் அராஜகம் ஒழிக; நீதி வெல்லட்டும்' என்று கோஷமிட்டார்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நவ., 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பங்கேற்று பேசினார்.அப்போது, தெலுங்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக, சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள பப்பலக்குடா பகுதியில், சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த கஸ்துாரியை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.அவரை, பெண் போலீசார் உதவியுடன் போலீஸ் வாகனத்தில் ஏற்றி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சாலை மார்க்கமாக அழைத்து வந்தனர்.அங்கு அவரிடம், 'யாருடைய துாண்டுதலின்படி தெலுங்கு இன பெண்கள் குறித்து அவதுாறாகப் பேசினீர்கள்' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கஸ்துாரி, 'என் பேச்சில் எவ்வித உள் நோக்கமும் இல்லை. என் பேச்சில் இடம்பெற்ற கருத்துக்களை ஏற்கனவே அரசியல் தலைவர்கள் பேசியுள்ளனர்.'படித்து தெரிந்து கொண்ட கருத்தையே பதிவு செய்தேன். தெலுங்கர் குறித்து அவதுாறாகப் பேசவில்லை. இருந்தபோதும், சர்ச்சையான பின் என் கருத்தை திரும்பப் பெற்று விட்டேன். அதன் பின்பும், என் மீது கைது நடவடிக்கை தேவையில்லாதது' என்று பதில் அளித்துள்ளார்.ஒரு மணி நேர விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து வரப்பட்டார். அப்போது, வலது கையை உயர்த்தி, 'அரசியல் அராஜகம் ஒழிக; நீதி வெல்லட்டும்' என்று கோஷமிட்டார். போலீசார் அவரை, சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது கஸ்துாரி, 'நான் ஒரு சிங்கிள் மதர், சிறப்பு குழந்தையின் தாய். என்னை சிறையில் அடைக்க வேண்டாம்' என, கோரிக்கை விடுத்தார். அதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.கஸ்துாரியை நீதிமன்ற காவலில் நவ.,29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மதியம் 3:30 மணியளவில், புழல் சிறையில் கஸ்துாரி அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Uuu
நவ 19, 2024 18:18

யாரை கைது செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லாத ஒரு ஆட்சி


Sivasankaran R
நவ 19, 2024 18:56

இதுதான் திராவிடம்!கஸ்தூரி நாலும் தெரிந்தவர்.நல்ல கல்வி அறிவு உள்ளவர் . இது கம்பயூட்டர் காலம் ......இந்த காலத்திலும் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி மக்களையும் சாதியையும் கேவலப்படுத்துவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் .......திராவிடம் சொல்லை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் திருந்துவார்களா ....இவனுகளும் திருந்த மாட்டாங்க ...மக்களையும் தவறான பாதையில் செலுத்துவானுக .........மானங்கெட்ட அரசியல்


MP.K
நவ 19, 2024 15:32

கடும் காவல் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் தான் இவ்வாறு பேச மாட்டார்கள்


karutthu kandhasamy
நவ 20, 2024 18:28

MPK நாளை உனக்கும் இந்த நிலை வரலாம் .அப்போது தெரியும் இந்த வலி என்னவென்று ? கர்மா யாரையும் சும்மா விடாது .உனக்கு தேவை மனிதாபிமானம்


rasaa
நவ 18, 2024 14:12

மாபெரும் தீவிரவாதியை பல வருடங்களாக பொறி வைத்து பிடித்து மீண்டும் ஸ்காட்லாந்து போலீசார் நிகரானவர் என்பதை நிரூபித்து விட்டார்கள். பாலாஜி தம்பி.........


Ramesh Sargam
நவ 18, 2024 13:20

என்ன பேசவேண்டும் என்று தெரிவதில்லை, எப்பொழுது, எங்கே, என்ன பேசவேண்டும் என்று தெரிவதில்லை. ஏதோ உளறிவிட்டு இப்படி மாட்டிக்கொள்வது இவள் மற்றும் பலர் வேலையாகிவிட்டது. இவர்களுக்கெல்லாம் பச்சாதாபம் பார்க்கக்கூடாது.


ko ra
நவ 18, 2024 13:02

ஆண்டாள் தாயார் பற்றி அவதூறு செய்து பின் மன்னிப்பு கேட்டதால் வைரமுத்து மீது நடவடிக்கை இல்லை. கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும் சிறை. நல்லருக்கு உங்க நியாயம்.


sankaranarayanan
நவ 18, 2024 12:15

நான் பேசியது தவறுதான், நான் சிங்கிள் மதர், எனக்கு மாற்றுத்திறன் குழந்தை இருக்கிறார். குழந்தையை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று மன்றாடியும் நீதி அரசர் செவிசாய்க்கவில்லையென்றால் அதன் புலம் என்னவாகத்தான் இருக்கும் . மாற்றுத்திறன் குழந்தை இருக்கும்போது கொஞ்சமாவது கருணை கொண்டு சொந்த ஜாமினில் விட்டிருந்தால் நீதி காக்கப்பட்டிருக்கும் இனி எங்கு செல்லுமோ எப்படி முடியுமோ ஆண்டவா உன் திருவிளையாடல்


angbu ganesh
நவ 18, 2024 14:22

அதெப்படி தெலுங்கனுங்க கூட்டம் இப்போ நம்மள ஆட்டி படைக்குது


Kanns
நவ 18, 2024 11:32

SHAMELESS JUSTICE. These Vested False Cases Proves that a. TN Police are Mercenaries of Ruling Party Goondas. b. TN Ruling Family is 100% Ongole Telugus& Not Tamils Fooling TN by Fraudulently Claiming belonging to a TN Caste. C.CourtJudges Commit Grave Crime-Sabotage of Justice by Influenced-Vested& BiasedRuler Etc Lickers To Restore Justice, SACK& PUNISH all Involved Viz. Power-Misusing Police, Ruling DMK Goondas& Judges. No Mercy Required.


Amruta Putran
நவ 18, 2024 10:44

Does DMK shows its anarchy


Nandakumar Naidu.
நவ 18, 2024 10:41

விடியல் ஆட்சியின் அராஜகம் வெறும் ஒழிக இல்லை. மண்ணோடு மண்ணாக நிரந்தரமாக அழிந்து போக வேண்டும்.


MADHAVAN
நவ 18, 2024 10:36

நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் பேசிய நடிகை கஸ்தூரி, ''நான் பேசியது தவறுதான், நான் சிங்கிள் மதர், எனக்கு மாற்றுத்திறன் குழந்தை இருக்கிறார். குழந்தையை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று மன்றாடினார் - இதுதான் உண்மை, நீதிபதிமுன்பு கெஞ்சியது தான் உண்மை, மண்டிபோட்டு மன்றாடுவது ஒன்னும் புதிதுஅல்ல