உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு: கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உறுதி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு: கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்; முகாம்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மக்களிடம் தெரிவிக்கப்படும்'' என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்தார்.தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.நாளை தொடங்கப்பட உள்ள, 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கம். அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களுக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.

1.01 கோடி மனுக்கள்

முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப் படும். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வருகின்றன. இதுவரை 1.05 கோடி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. மக்கள் அதிகமாக கூடுகிற, வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம். மக்களுக்கு நாம முகாம் நடத்துவது தெரியப்படுத்த, முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்ட முகாம் நடத்த உள்ளோம். 45 நாட்களில் இந்த மனுக்களுக்கான தீர்வு காண வேண்டும் என முதல்வர் கூறியிருக்கின்றார். அதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

உடனடியாக தீர்வு

வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும். இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முன்பு 20,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது. இப்போது 10 ஆயரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆவணங்களை முறையாக கொண்டு வரும் மக்களின் மனு மீது உடனடியாக தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Indian
ஜூலை 22, 2025 14:28

நான் முறையாக நில அளவீட்டிற்கு பணம் செலுத்தியே வேலை நடக்கவில்லை என்பதுதான் மிகவும் வருத்தம். நான் பல முறை அலுவலகம் சென்ற போதெல்லாம் எதோ பிஎல்து அளக்க போவதாகவே கூறுகின்றனர் , இதில் என்ன ஆச்சர்யம் என்றல், காலை மற்றும் மலை வேலைகலீல் இருமுறையும் சென்று பார்ப்பேன். ஒரு நாளில் கூட பார்த்ததில்லை. இதில் என்ன வெக்க கேடு என்றல் அவர்கள் கோவப்படாத அளவிற்கு நங்கள் கேள்வியை கேட்க்கவேண்டுமாம்.


அப்பாவி
ஜூலை 14, 2025 21:31

இது அம்ரித் கால் மேடம். 2047 க்குள்ளாற ஆக்‌ஷன் எடுப்போம்னு சொல்றதுதான் ஃபேஷன்.


Muralidharan S
ஜூலை 14, 2025 17:29

நேர்மைக்கும், திறமைக்கும் பெயர் பெற்ற அதிகாரிகள் எல்லாம், கட்சி காரர்கள் பேசுவது போல, அரசியல் கட்சிக்கு முட்டுக்கொடுத்து பேசுகிறார்கள்.. ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கிறது..


Muralidharan S
ஜூலை 14, 2025 17:20

45 நாட்களில் தீர்வு, தலைமை செயலாளர் உறுதி - அது எப்படிங்க... 4 வருஷம் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தீர்க்க, 4 வருடம் இல்லாத இல்லாத உறுதி, தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் தான் இருக்கிறது என்றவுடன் வருகிறது.. ஒரே மெடிக்கல் மிராக்கிள் தான் போங்க... செலெக்ட்டிவ் அம்னீஷியா உள்ள மக்களும் 4 வருட ஆட்சி அவலங்களை எல்லாம் மறந்து விட்டு, திராவிஷ கட்சிகளுக்கு ஒட்டு போட இனி குஷியா கிளம்பிடுவாங்க.... யாரும் ஒன்னும் அசச்சுக்க முடியாது..


Muralidharan S
ஜூலை 14, 2025 17:11

4 வருடங்களாக மக்களின் குறைகளை , கோரிக்கைகளை, புகார்களை கண்டுகொள்ளாமல், டாஸ்மாக் வருமான வரம்பை குவாட்டர்க்கு குவாட்டர் உயர்த்த இலக்கு வைத்து நடந்த நிர்வாகத்திற்கு, குண்டும், குழியுமாக சாலைகளை வைத்து இருந்து, மக்களின் நகர வாழ்க்கையை நரகம வாழ்க்கையாக்கிய அரசு நிர்வாகத்திற்கு, இன்னும் 9 மாதங்களில் தேர்தல் வருகிறது என்றவுடன் திடீர் என்று ஞானோதயம். மக்களின் மீது கரிசனம். அவசரம் அவசரமாக மனுக்கள் பெற்று, 45 தினங்களில் குறைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்று கூறும் நிர்வாகத்தை பார்த்தால்.. ஒரு பழைய பாட்டு நினைவுக்கு வருகிறது. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே.. தமிழகத்தில் மக்களின் மிக முக்கியமான குறையே சாராயம் டாஸ்மாக் மூலம் ஆறாக தமிழகமெங்கும் ஓடுவது தான். பலமடங்கு பெருகி இருக்கும் பாலியல் குற்றங்கள்.. லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையும் நடக்காது என்று நிலவும் சூழல். சிறு வட்டம் முதல் மாவட்டம் வரை தலைவிரித்து ஆடும் ரவுடியிசம் மற்றும் கட்சிக்காரர்களின் அராஜக செயல்கள்... இதை எல்லாம் 45 நாட்களில் தீர்க்க முடியுமா ? முதலில், டாஸ்மாக்க்கை மூடுவோம் என்று வாக்குறுதி குடுத்து ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் திரு ஸ்டாலின் அவர்கள், 45 நாட்களில் டாஸ்மாக்களை மூடி , நிஜமாகவே மக்களின் குறைகளை தீர்க்கவே இந்த ஆட்சி, என்று நிரூபித்து காட்டிவிட்டு - உங்களுடன் ஸ்டாலின் என்று சொன்னால் நம்பலாம்.


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2025 16:52

ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு???இதன் அர்த்தம் இப்படி எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்டாலின் திட்ட திட்டினதால், மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு இல்லையென்றால் தீர்வு இல்லை???என்ன அமுதா சரிதானே


Perumal Pillai
ஜூலை 14, 2025 16:19

கருணாநிதி அடக்கத்தில் பார்த்த உக்கிரமான லேடி ஆஃபீசர். நேர்மைக்கு பெயர் போனவர் . ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது .


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 16:00

மோடிஜி கிட்ட கவுரவமாக பணி செய்த உங்களுக்கு இந்த ஊதுகுழல் வேலை தேவையா அம்மா?


V Venkatachalam
ஜூலை 14, 2025 15:58

கூடுதல் தலைமை செயலாளர் அம்மா என்ன சொல்றாங்க? இனிமே வாங்கும் மனுக்களில் 45 நாட்களில் தீர்வு. அதாவது மனுக்களை வாங்காமல் ஓட்டலாம். வேறு வழியின்றி வாங்கி கொண்டால் குப்பைக்கு ஒதுக்குவது போக மிச்சத்தில் 45 நாட்களில் தீர்வு. அதாவது முடியாது அல்லது நிராகரிப்பு அதுவும் தீர்வு கணக்கில் சேர்த்துக் கொண்டு தீர்வு கண்டு விட்டோம் அல்லது இருக்கவே இருக்கு அறிக்கை. அந்த அறிக்கையில் அடிச்சு வுட்டா எவனுக்கு என்ன தெரியும்.‌ நீட் தேர்வு வேண்டாம் ன்னு பொது மக்கள் கிட்டே கோரிக்கை மனு வாங்கியதை நாம் கண்ணாலேயே பார்த்தோமே.. அதுக்கே நாம் அசரவில்லையே..இது எம்மாத்திரம்?


Padmasridharan
ஜூலை 14, 2025 14:19

இப்போது 10 "ஆயரம்" மக்கள்.. தமிழ் பிழையை கவனிக்கவும் அய்யா சாமியோவ், காக்கிச்சட்டை போன்ற அரசதிகரிகள், அதிகார பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு வாங்கும் சம்பளத்திற்கு கொடுத்த வேலைகளை நியாயமா செய்ய முயற்சிக்கட்டும். ரோட்டில் குடித்துவிட்டு படுத்துக் கிடந்தவனை காவலர்கள் கண்டுகொள்ளாத பொழுது கடற்கரை போன்ற பொது இடங்களில் குடிப்பவர்களிடம் அதட்டி, மிரட்டியடித்து பணம் /பொருள் புடுங்குவது நிற்கட்டும். என்ன செய்யக்கூடாது என்ற பலகைகளை நிறுவட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை