உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்

பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, இன்று கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரங்களை முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இதை கருத்தில் வைத்து, முகூர்த்த நாட்களில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் எண்ணிக்கையில், 'டோக்கன்' வழங்க அனுமதிக்கப் படுகிறது. இந்த வகையில் முகூர்த்த நாளான இன்று, சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை அனுமதிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. வழக்கமாக ஒரு நாளைக்கு, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில் இன்று, 150 டோக்கன்கள் அனுமதிக்கப்படும். இதேபோன்று ஒரு நாளைக்கு, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், இன்று, 300 டோக்கன்கள் வரை அனுமதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ