உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது அரசுக்கு நல்லது அல்ல: இ.பி.எஸ் ஆவேசம்

நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது அரசுக்கு நல்லது அல்ல: இ.பி.எஸ் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: ''நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.திமுக வாக்குறுதியின் உண்மை நிலையை மக்கள் அறிய, ரிப்போர்ட் கார்டு எனும் யோசனையை அதிமுக கையில் எடுத்தது. வீடு வீடாகச் சென்று கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டை இ.பி.எஸ்., வெளியிட்டார். பின்னர் புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: யூகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.

சஸ்பெண்ட் ஆர்டர்

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டால் அவருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் தான் பரிசாக கொடுக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களை பாதுகாப்பது போலீசார். போலீசாருக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டால் அழைத்து பேசி சரி செய்ய வேண்டும்.

அரசுக்கு அழகு அல்ல

அது தான் ஒரு அரசின் கடமை. அதனை விட்டுவிட்டு, நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல. அதிமுக, பாஜ கூட்டணியை உடைக்க வெளியில் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் இருக்கும் முதல்வரும், உதயநிதியும் பிரதமர் வீட்டு கதவை தட்டினார்களா? https://www.youtube.com/embed/j-b21CYCv_s

இதில் என்ன தவறு?

நாங்கள் உள்துறை அமைச்சரை சந்தித்தால் தவறு. அவர் இந்திய நாட்டு உள்துறை அமைச்சர் தானே? வேறு யாரும் இல்லை. இதில் என்ன தவறு இருக்கிறது. நாங்கள் பாஜ- அதிமுக கூட்டணி. நாங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்போம். ஒரு கட்சி என்றால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாது. இந்த அரசாங்கத்திற்கு மக்களின் பிரச்னை தெரிவதில்லை.

காவிரி குண்டாறு திட்டம்

கிராமத்தில் ஒரு தோட்டம், வீடு இருக்கும். இதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பது தவறு. விவசாயிகள் எல்லாரும் படித்தவர்கள் அல்ல. நீங்கள் தோட்டத்தில் இருக்கும் இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் இது எல்லாம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு கொடுக்க வேண்டும். மக்கள் ஆதரவு உடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் போது காவிரி குண்டாறு திட்டம் தொடரும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Santhakumar Srinivasalu
ஜூலை 25, 2025 19:58

இவர் ஆட்சியில் எல்லோரும் ரொம்ப ரொம்பவே தங்கமானவர்கள்!?


Senthoora
ஜூலை 25, 2025 17:15

இவர் ஆட்சியில் எப்படி இருந்தது, அதை முதலில் சொல்லுங்க.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 25, 2025 13:59

போலீஸ் துறை இலட்சணம் சந்தி சிரிக்கிறது. ஒரு போலீஸ் இன்னொரு போலீஸ் வீட்டில் நகைகளை திருடுகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


Vijay D Ratnam
ஜூலை 25, 2025 13:47

தமிழக மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருக்கும் எடப்பாடி ஐயா அவர்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் அரசுடமை ஆக்கப்படும் என்று அறிவிக்கலாமே. TAmilnad State MArketing Corporation Ltd கீழ் கொண்டுவரப்படும் என்று மக்கள் முன்பு அறிவிக்கலாம். முதற்கட்டமாக 50 சதவிகித டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கலாமே. விவசாயிகள் பயன்பெறும் வகையில் கள் இறக்க அனுமதி வழங்கலாம். சர்வதேச அளவில் பிரபலமான Pernod Ricord நிறுவனத்தின் MALIBU போன்ற ப்ராண்டுடன் Malibu is a coconut flavored liqueur made with white rum, which has an alcohol content by volume of 21.0% இணைந்து கள் ஏற்றுமதியை அனுமதிக்கலாம். இதை மட்டும் சொல்லி பாருங்க எடப்பாடியார் அவர்களே, தமிழ்நாடு தாண்டி ச்சும்மா இந்தியாவே அதிரும்ல. நாடு முழுக்க தென்னை பனை விவசாயம் பெருகும், நிலத்தடி நீர் மேம்ப்படும், கிராமப்புற வேலைவாய்ப்பு பொருளாதாரம் பெருமளவில் உயரும்.


திகழ்ஓவியன்
ஜூலை 25, 2025 19:12

ஒரே நாடு ஒரே சாராயம் . மோடி பூரண மதுவிலக்கு இந்தியா முழுமைக்கும் என்று கொண்டுவரலாமே ஒரே ஆர்டர் இந்தியா முழுவதும் சாராய ஆலைகள் மூடலாமே , ஒரே இரவில் நோட்டு செல்லாது ன்று அறிவித்தவர் செய்வாரா


Oviya Vijay
ஜூலை 25, 2025 13:46

இவர்கள் நடத்தும் இந்த நாடகத்தின் உட்கருத்து என்னவெனில் திமுகவைப் பார்த்து அதிமுக கூட்டணியினர் சொல்வது போல... இதுநாள் வரை நீங்கள் கொள்ளையடித்தது போதும். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுகவாகிய நாங்களும் கொள்ளையடிக்க வேண்டும். அதனால் நீங்கள் விலகிச்சென்று எங்களுக்கு வழிவிடுங்கள் என்பது தான்... தாங்கள் ஏதோ மக்கள் ஆச்சர்யப்படும் படியாக நேர்மையான ஆட்சியைத் தரப் போகிறோம் என சொல்லும் வகையில் இவர்கள் எல்லாம் உத்தமர்களோ புனிதர்களோ கிடையாது... ஏற்கனவே இவர்களது லட்சணத்தைத் தமிழக மக்கள் பார்த்தவர்கள் தானே... எத்தனையோ நாடகங்கள்... அதில் இதுவும் ஒன்று...


vivek
ஜூலை 25, 2025 17:16

ஓவியம்...இன்னொரு தலைப்பில் வயதான பாட்டி திமுக அமைச்சரை கை நீட்டி கேள்வி கேட்டதை பார்தீரா...இதயம் பத்திரம்...


Ramesh Sargam
ஜூலை 25, 2025 13:43

ஒரு தமிழ் படத்தில் வடிவேலுவின் தங்கச்சியை பெண் பார்க்க கவுண்டமணியும், செந்திலும் செல்வார்கள். பெண் அழகாக இல்லையென்றவுடன் இருவரும் மாறி மாறி தங்களை பற்றி இழிவாக பேசுவார்கள். ஆனால் இங்கே இந்த திமுகவும், அதிமுகவும் எதிரணியினரை பற்றி தவறாக பேசி ஆட்சியை பிடிக்கப்பார்க்கிறார்கள்.


Oviya Vijay
ஜூலை 25, 2025 13:08

இவர்களது லட்சணத்தைத் தமிழக மக்கள் பார்த்தவர்கள் தானே... எத்தனையோ நாடகங்கள்... அதில் இதுவும் ஒன்று...


vivek
ஜூலை 25, 2025 14:32

ஓவியரே , நீர் சொல்வது திமுக ஆட்சியிலே....தெளிவாக கருத்து போடவும்...இருநூறு ரூபாய்க்கு மோசம் வந்துடபோகுது


திகழ்ஓவியன்
ஜூலை 25, 2025 13:04

அந்த போலீஸ் எல்லாம் பேட்டி முடிந்து ஜெய் HIND என்றாரு பாருங்கள் அங்கு தான் இவர் பின்புலம் தெரிய ஆரம்பித்து விட்டது மண்டை மேலே உள்ள கொண்டய மறைக்க மறந்து விட்டாரோ


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 13:03

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணியில் உள்ளனர். சிலருக்கு பதவியுயர்வு.


திகழ்ஓவியன்
ஜூலை 25, 2025 13:03

எந்த போலீஸ் நேர்மை காய் கனி கடலை வாழை பழம் , ரோட்டோர கடை யில் எல்லாம் மாமூல் வாங்கும் கூட்டம் தானே அவர்கள் ஏன் போலீஸ் வேனில் வந்து சாராயக்கடை பார் களில் மாமூல் வாங்கும் கூட்டம் , அவர் ஒரு அதிகாரி அவர் ரோட்டில் வந்து எப்படி பேட்டி கொடுக்கலாம் அவர் மேல் அதிகாரி இடம் முறை இடலாம் , ஆகவே அவர் மீது துறை வாரியாக dispilinary action / enguiry எல்லாம் நடக்கும் , increment cumulative effect stoppage என்று எல்லாம் அவர் service புத்தகத்தில் இருக்கு , ஆகவே நேர்மை என்பது சந்தேகமா இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை