உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்

விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் முத்தரப்பு பேச்சு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, பேச்சு நடத்தாத இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியதே,' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வளாகத்தில் இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=psjvg402&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் கூறியதாவது; விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம். 6 மாதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது. இது 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னை, இதைக் கூட அரசு அக்கறையாக எடுத்து, அதற்குரிய பதில் கொடுப்பதற்கு என்ன? பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கூட பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதியளிக்கப்பட்டது.அப்போது, நிறைய கேள்விகளை எழுப்பினார்கள், நாங்கள் அதற்கான பதிலை கொடுத்தோம். ஆனால், இன்றைய தினம் இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் பேசக் கூடாது என்ற நிலைப்பாட்டினால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்கள் முடிவு

போராட்டம் நடத்துவது அரசுக்கு தெரியாதா? அப்படி தெரியவில்லை எனில் மோசமான அரசு என்று பொருள். 6 மாதங்களாக விவசாயிகள் தங்களின் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார்கள், 2 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, நடத்தப்படவில்லை. அரசு பின்வாங்குவது ஏன்? இது எல்லாம் அரசுக்கும், துறை அமைச்சருக்கும் தெரியவில்லை எனில், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியது என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.இந்த அரசு விவசாயிகள் பக்கம் இல்லை. முதலாளிகள் பக்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. 40 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பிரச்னையை அவையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டால், அவையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தோல்வி பயம்

2021 சட்டசபை பொதுத்தேர்தலின் போது முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது அதிமுக தான். அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். அமைச்சர்கள் எல்லாம் வேண்டுமென்றே தவறான தகவலை வெளியிட்டு வருகிறார்கள். மகளிர் குல விளக்கு திட்டம் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்தோம். மகளிருக்கு பஸ் பயணச்சலுகை உள்ளிட்டவை ஏற்கனவே அறிவித்த திட்டம் தான். தோல்வி பயத்தினால் தான், அதிமுக கொண்டு வந்ததால் நிறுத்திவைக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை மீண்டும் திமுக அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அப்போதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. 2026ம் ஆண்டு துவங்கிய இந்த 20 நாட்களில் 46 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 27 நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. நிரந்த சட்ட ஒழுங்கு டிஜிபியை நியமிக்காததே இதற்கு முக்கியக் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raj Kamal
ஜன 22, 2026 21:04

விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ் - அப்புறம் இதைக்கூட கேக்கலைன்னா அப்படிப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எதுக்கு?


mindum vasantham
ஜன 22, 2026 19:17

கர்நாடகாவில் பல அணைகள் கட்ட விட்டவர்கள் திமுகவினர்


sundarsvpr
ஜன 22, 2026 14:16

வாங்கும் சக்தியுள்ளவர்கள் அரசு கொடுக்கும் இலவச பொருள் பணம் வெட்கம் மானம் இல்லாதவர்கள் பெறுகிறார்கள். போதிய வருமானம் இல்லாதவர்கள் பெறுவது தவறு என்றாலும் பெறுவதை விமர்சனம் செய்வது தவறு. விவசாயிகள் போராட்டம் நியாயமானது என்றாலும் நியாயத்தை நிரூப்பிக்கும் இடம் வாக்கு சாவடி. ஆனால் செய்வதில்லை. காரணம் இலவசம் பெறுவதால் அடிமைப்படுகிறோம்.


ஆகுயர்த்தோன்
ஜன 22, 2026 14:13

நான் 7.5 சதவீதம் கொடுத்தேன், அய்யா நீட் இல்லாம இருந்து இருந்தா மொத்த சீட்டும் கிடைத்திருக்கும் நீட் ஜெயா இருக்கும்போது இல்லாத நீட் எடப்பாடி ஆட்சியில் வந்தது எப்படி கேட்டால் விட்டு கொடுத்ததால் தான் என்கிறீர் ,சரி பீசப்பி கூட்டணி இப்ப நீட் விலக்கு வாங்குங்களேன்


duruvasar
ஜன 22, 2026 14:53

முட்டிக்கொ மோதிக்கோ . நீட் மசோதாவை திமுகவின் இணை அமைச்சர் பழனிமாணிக்கம் பார்லிமென்டில் தாக்கல் செய்து நிறைவேற்றிய பொழுது பொறக்கலையோ


ஆகுயர்த்தோன்
ஜன 22, 2026 14:10

DMK ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஆமாம் எல்லா போலீஸ் ஸ்டேஷன் மூடிவிட்டு சூப்பர்மார்கெட் ஆகிவிட்டேர்கள், போதுமா ம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு , எஸ்மா டெஸ்மா என்று அரசு ஊழியர் கைது இது ஒருவேளை சட்டம் ஒழுங்கில் வாராதோ


ஆகுயர்த்தோன்
ஜன 22, 2026 14:05

வேளாண் சட்டம் மோடியே கொண்டு வந்தார் அப்புறம் WITHDRAW பண்ணிட்டார் , அனால் நீங்கள் ஆதரித்தீர்கள் ஏன்


duruvasar
ஜன 22, 2026 15:03

ரொம்ப கஸ்டம் . வேளாண் சட்டத்துக்கு ஸ்பெல்லிங் தெரியுமா ?


guna
ஜன 22, 2026 15:54

ஆக்குயர் டுபாக்கூர் போல கருத்து போடுது


புதிய வீடியோ