அ.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்
சென்னை,:திண்டுக்கல், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளை நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார்; திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலர் ஆனந்தபாபு ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அ.தி.மு.க.,வினர் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.