உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்

நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: ''நேர்மையாக இருந்த காரணத்துக்காக இவ்வளவு சிக்கலை சந்திக்க வேண்டுமா,'' என்று வாகனம் பறிக்கப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது புகார்களை மாவட்ட போலீஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,யாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். சட்டவிரோத சாராயம், மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்ததுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 700 பேரை சிறையில் அடைத்தார். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tppg5udu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நடை பயணமாக

இந்நிலையில் சுந்தரேசன் பயன்படுத்திய அரசு வாகனம் மாவட்ட காவல்துறையால் திரும்ப பெறப்பட்டது. முதல்வர் வருகைக்கு முன்னர், அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்பு பணி செல்வதற்கு சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறை, மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனம் வழங்கவில்லை. இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வந்த வீடியோ, போலீஸ் குரூப்பில் பதிவிடப்பட்டது. வாகனம் எதுவும் இல்லாததால் இன்று சுந்தரேசன் தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு நடந்து சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின.

விளக்கம்

இது தொடர்பாக சுந்தரேசன் கூறியதாவது: கடந்த 5ம் தேதி அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்பு பணிக்கு எங்களின் வண்டியை கேட்டனர். ஆனால் புரோட்டோக்காலில் கிடையாது. இதனால் வண்டியை தர மறுத்துவிட்டேன். அவ்வாறு வாகனம் கேட்டால், அதற்கு ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏ.டி.ஜி.பி., ஜெயராமனுக்கு ஒரு பிரச்னை வந்தது. உத்தரவு இல்லாமல் வாகனம் வெளியில் சென்ற பிரச்னை. எனவே, நான் உத்தரவு தரும்படி கேட்டேன்.ஆனால், வாகனம் கொடுக்கவில்லை என்பதற்காக எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து என்னை மைக்கில் கூப்பிட்டனர். என்னை உடனே திருச்செந்தூர் பாதுகாப்பு பணிக்கு செல்லும்படி கூறினர். நானும் சென்றேன். 7ம் தேதி பணி முடிந்தது. மீண்டும் எஸ்பி அலுவலகத்தில் அழைத்து திருவாரூர் பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு கூறினர் அதையும் 3 நாள் பார்த்துவிட்டுமீண்டும் மாவட்டத்துக்கு நுழைந்த போது, எனது வாகனத்தை மெய்யநாதன் கான்வாய்க்கு மீண்டும் கேட்டனர்.நான் ஒன்றும் சொல்லவில்லை. 'கொடுப்பதில் பிரச்னை இல்லை. வாகனத்தில் பிரச்னை உள்ளது. பார்த்து கொள்ளுங்கள்' என கொடுத்துவிட்டேன்.10ம் தேதி கொடுத்தேன். இன்று வரை அந்த வாகனம் கொடுக்கவில்லை. நான் பைக்கில் போனேன். எல்லாம் பண்ணேன். ஒரு கட்டத்துக்கு பிறகு, சொந்த வாகனமும் இல்லை. மற்ற போலீசிடம் இரவல் வாங்க முடியாது. இதனால் நேற்றும், இன்றும் அலுவலகத்துக்கு நடந்து போனேன்.

பணம் நின்றது

மயிலாடுதுறை, சீர்காழியில் 1,200க்கு மேல் மதுவிலக்கு வழக்குப் போட்டுள்ளேன். 700 பேரை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளேன். 5 பேரை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளோம் . காரைக்கால் எல்லைப் பகுதி என்பதால் தீவிர வாகன சோதனை செய்து கட்டுப்படுத்தி உள்ளோம். அதிகாரிகளுக்கு சரியான பைசா பணம் சென்று சேரவில்லை. எல்லாம் நின்றுவிட்டது. நான் கடந்த நவ., மாதம் முதல் சாராயம் கடத்தல் போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் சாராய பணம் கிடைக்கவில்லை.

நேர்மை

எஸ்.பி., என்னை கூப்பிட்டு, 'வளைந்து கொடுங்கள். இல்லை என்றால் உடைத்து விடுவார்கள்' என கூறுகிறார். ஒரு அதிகாரியிடம் பேசும் பேச்சா இது? இதுபோன்ற அதிகாரிகளிடம் நாங்கள் எப்படி வேலை செய்வது? நான் நேர்மையாக இருந்த காரணத்துக்காக இவ்வளவு சிக்கலை சந்திக்க வேண்டுமா?நான் மனித உரிமை ஆணையத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். நான் யாரிடம் பணம் வாங்குவது கிடையாது. நேர்மையாக வேலை செய்துள்ளேன். எனது அலுவலகம் மோசமான நிலையில் உள்ளது. கழிவறை கூட கிடையாது. நான் கஷ்டப்படுகிறேன் என்பதற்காக எஸ்.ஐ., ஒருவர் தனது வீட்டில் இருந்த ஏசியை கொடுத்தார். அதுவும் பழைய ஏசி தான். எஸ்.பி., நேற்று என்னை அழைத்து, ' சுந்தரேசன் எனக்கும் உங்களுக்கும் எந்த வித பிரச்னையும் கிடையாது. உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்குமாரும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யும் தான் உங்களை 'டார்ச்சர்' செய்ய சொல்கின்றனர்' என கூறுகிறார். இது எந்தவிதமான நியாயம்?நான் மனித உரிமை ஆணையத்தில் அஸ்ரா கார்க் ஆட்கள் மீது புகார் கொடுத்தேன் என்பதற்காக என்னை இவ்வளவு டார்ச்சர் செய்கின்றனர். தொந்தரவு செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் மறுப்பு

இந்நிலையில், போலீசார் இதனை மறுத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., ஆக பணியாற்றும் சுந்தரேசனுக்கு அலுவலக பணிகளை மேற்கொள்ள கடந்த ஏப்., 7 ம் தேதி முதல் பொலிரோ வாகனம் வழங்கப்பட்டது. முக்கிய அலுவலக பணிக்காக கடந்த 11ம் தேதி அந்த வாகனம் எடுக்கப்பட்டு மாற்று வாகனம் வழங்கப்பட்டது. இன்று மீண்டும் பழைய வாகனம் வழங்கப்பட்டது. ஆனால், சுந்தரேசன் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், அவருக்கு மாவட்ட போலீஸ் சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Jay
ஜூலை 18, 2025 09:09

துறையின் பெயரோ மதுவிலக்கு. ஆனால் ஆளுபவர்கள் மதுவை பெற்று வருமானம் பார்க்க நினைப்பவர்கள். மக்களின் மது பழக்கத்தை அதிகரிப்பதை விட்டுவிட்டு மதுவிலக்கு துறையில் நேர்மையாக பணியாற்றினால் இப்படித்தான் நடக்கும். மக்கள் டூ 200க்கும் 500க்கும் விற்பது அவர்கள் ஓட்டை அல்ல. இது போன்ற நேர்மையான அதிகாரிகளை முடக்குவது தான்.


Padmasridharan
ஜூலை 18, 2025 05:46

இவரின் நேர்மைக்கு பாராட்டுகள். தொடரட்டும் நியாயப்பணிகள். வாழ்க குடும்பம். "வளைந்து கொடுங்கள். இல்லை என்றால் உடைத்து விடுவார்கள்" இவ்வாறு சொன்னவர் உண்மையாகபே கோழைத்தனமுள்ள காவலர்தான். இவர் போல் நிறைய பேர் தைரியமான ஆசாமிகளாக காக்கி உடையில் நடித்து கொண்டிருக்கின்றனர். . மக்களை ஏமாற்றி பன்ஜாயத்து பண்ணி பணத்தை அதிகார பிச்சை எடுப்பதுதான் இவர்களின் வழக்கம். தொழிலுக்கும், குடும்பத்திற்க்கும் மானக்கேடு


தமிழ்வேள்
ஜூலை 17, 2025 21:03

தமிழகம் திருந்த வேண்டும் என்றால், மிக கடுமையாக கொடுமையான சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை.. ஒருகாலத்தில் கருப்பு சிவப்பு வேட்டி கட்டி கருப்பு சட்டை போட மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை இருந்தது.. பள்ளி மாணவர்கள் திக திமுக பற்றி பேசினால் ஆசிரியர் நாயடி பேயடி விட்டு வெளுப்பார்..பிரம்பு பிய்ந்துவிடும்... போலீஸ் ஜவான் கேள்வி முறை இன்றி லாட்டி கொண்டு அடி வெளுப்பார்... அந்த மாதிரி ஒரு டிரீட்மெண்ட் கொடுத்தால் மட்டுமே விளங்கி வரும்.. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு திராவிட கரை வேட்டி கட்டவோ, அடுக்கு மொழி பேசவோ, தோளில் துண்டு போட்டு கெத்து காட்டவோ முடியாமல், இவற்றை நினைத்தாலே இன்னொரு செந்தில் பாலாஜி ஆக வேட்டி நனையும் அளவு மாப்பிள்ளை மரியாதை கொடுத்தால் திராவிடம் அடங்கி தமிழன் திருந்துவான்.... கிட்டத்தட்ட நூறாண்டு கால ஒழுக்கக்கேடு. சக்கையாக பிளந்து கட்டாமல் மறையாது..


aaruthirumalai
ஜூலை 17, 2025 20:47

அரிச்சந்திரன் புராணகதையில் கேட்கிறார் நீதி நேர்மை மனசாட்சி இப்படி அனைத்து வகையிலும் ஒழுங்காக இருந்த என்னை ஏன் சோதித்தீர்கள் என்று கடவுள்களை பார்த்து...... ஆனால் இங்க யாரும் கடவுள் கிடையாது.


Ramesh Sargam
ஜூலை 17, 2025 20:28

நேர்மையாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் இதுபோன்று மரியாதை இல்லாமல் நடத்தப்படுவதால், அவர்கள் விரக்தி அடைந்து, காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதிகளிடம் மிக மோசமாக நடந்துகொள்கிறார்களோ என்று தோன்றுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி ஒழியவேண்டும். ஏன் திமுக என்கிற கட்சியே முற்றிலும் ஒழியவேண்டும்.


Sivagiri
ஜூலை 17, 2025 19:30

பேசாமல் பிஜேபி யில் சேர்ந்திடுங்கோ . . . அண்ணாமலைக்கு அப்புறம் - பிஜேபி சுறுசுறுப்பு குறைஞ்சிடுச்சு . .


பெரிய ராசு
ஜூலை 17, 2025 19:23

மக்கள் அதிகாரிகள் நேர்மையாக இருக்க திருட்டு திராவிடிய ஆட்சி ஒழிக்கப்படவேண்டும் ..ஓர் DSPகே இந்த நிலைமை என்றல் சாமானிய மக்கள்நாக்கை கோமணத்தை உருவி விடுவார்கள்


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 18:56

மீண்டும் கள்ளக்குறிச்சி நடக்கலாம். சுரணை வராது.


Shankar
ஜூலை 17, 2025 18:56

திருட்டு திராவிட ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா. இந்த ஆட்சியில் நேர்மைக்கு இடமில்லை.


RK
ஜூலை 17, 2025 18:55

திமுக ஆட்சி போதையின் விடியல் ஆட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை