உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டு: அண்ணாமலை காட்டம்

பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டு: அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்திச் செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளைப் பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி, முற்றிலும் பிற்போக்குத்தனமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d9y6nszy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திமுக ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தனது ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்திச் செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது இந்த திமுக அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.தவிர, கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல்துறை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல, திமுக அரசில் செயலிழந்து நிற்கும் சட்டம் ஒழுங்கை மறைக்க, மடைமாற்றும் முயற்சிகளில் ஒன்றாகவே, திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

நிக்கோல்தாம்சன்
நவ 06, 2025 05:20

ஒட்டுமொத்தத்த்ஹில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அளவிற்கு செய்துவிட்டு பின்னர் வெளிநாட்டு ஸ்டைலில் முழுதும் மூடிக்கிட்டு இருங்க என்று சொல்வதற்கான அடித்தளம் இடப்படுகிறது என்றும் கூறலாம்


bharathi
நவ 06, 2025 03:26

Annamalai Ji ..being a police what would be your advise to the society. forget your political stand to blame the government. which we all know their in capability. PREVENTION IS BETTER THAN CURE lets be secure and avoid danger


மணிமுருகன்
நவ 06, 2025 00:07

அருமை நன்றாக கவனித்தால் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுககூட்டணி மீது குற்ற வழக்கு வெளியாகி அது உண்மை என்பதை மக்கள் உணரும் போது இத்தகரய வன்கொடுமைகளை நடத்தி மக்களை திசை திருப்பும் கேவலமான மானக்கேடான் அரசியல் கூட்டம் என்பது தெளிவாக உள்ளது பல்கலைகழக வன்கொடுமை யார் அந்த சாரைமறைக்க யாருடையது கார் திரும்ப யார் அந்த தமடபி டாஷ்மாக் ஊழல் மறைக்க மறக்க யார் அந்த அதிகாரி திருப்புவனம் அதை மறைக்க அவர்கள் கட்சி பெண்ணையே வைத்து ஒரு திரைகதை வசன நாடகம் ்ப்போது கே.என.நேரு ஊழல் மறைக்க பெண் வன்கொடுமை கேவலம்


Sivak
நவ 05, 2025 21:52

அந்த பெண் எதற்கு ஆளில்லாத பகுதிக்கு தனியாக செல்ல வேண்டும் .. மானத்திற்கு அஞ்சும் நல்ல குடும்பத்து பெண்கள் அப்படி செய்ய மாட்டார்கள் ... அந்த பெண் செய்தது தான் முதல் தவறு ... தங்கம் என்றால் அதை பத்திரமாக வீட்டில் பாதுகாத்து வைக்க வேண்டும் அதை விட்டு தங்கத்தை தெருவில் வைத்தால் யாரு வேண்டுமானாலும் தூக்கி செல்ல தான் செய்வார்கள் ....


Raj S
நவ 06, 2025 00:57

இந்த மாதிரி பிதற்றுவர்களை எதால அடிக்கறதுனே தெரியல... ஜனநாயக நாட்டுல ஒரு பெண் எங்க எப்போ போகணும்னு சொல்றவன் கேக்கறவனெல்லாம் மனித பிறவியானே தெரியல... ராமசாமி மாதிரி மகளையே காமத்தோட பாக்கற கும்பலை என்ன சொல்றது??


bharathi
நவ 06, 2025 06:08

will you allow your family personnel or even your self go to such place during the mide night


VSMani
நவ 05, 2025 20:26

மது டாஸ்மாக் என்று மூடப்படுகிறதோ அன்றுதான் குற்றச்செயல்கள் குறையும். மது குடித்தபின் என்னசெய்கிறான் என்றே தெரியாமல் மனிதன் பாலியல், கொலை குற்றம்களை செய்கிறான், எல்லா தவறுகளுக்கும் ஆளும் ஆட்சியாளர்கள்தான் காரனம்.


திகழ்ஓவியன்
நவ 05, 2025 20:52

உண்மை தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும்


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 20:17

பொள்ளாச்சி நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களை புகாரளிக்க வரவிடாமல் நிறுத்துவதற்காக, புகார் அளித்தவர்களின் பெயரை வெளியிட்டது, மிரட்டியது, அப்போதைய அதிமுக-பாஜக கூட்டணி.. அப்போ அண்ணாமலை என்ன செய்து கொண்டு இருந்தார்.


Indian
நவ 05, 2025 20:49

அவர் Karnataka வில் இருந்தார் .


தமிழ்வேள்
நவ 05, 2025 20:10

சென்னை பெருங்களத்தூர் மேம்பால இறக்கத்தில், இரவு இரண்டு மணிக்கு கூட ஆண்நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சிங்கிள் பெண்களை தினமும் அதிகம் பார்க்கலாம்... அங்கு இந்த மாதிரி சம்பவங்கள் என்று நிகழப்போகின்றனவோ தெரியாது.. எல்லாம் பி.ஜி யில் தங்கியுள்ள ஐடி வேலை பார்க்கும் வெளியூர் பெண்கள்.. அவர்கள் பாதுகாப்பு அவர்களின் பொறுப்பு...


Kasimani Baskaran
நவ 05, 2025 20:03

வன்மத்தை அவிழ்த்து விடுவதைப்பார்த்தால் குற்றவாளிகள் தி. மதத்தினராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. போதையுடன் ஆயுதமேந்தி விமான நிலையம் பக்கத்தில் திரிந்தவர்கள் விமான நிலையத்துக்குள் சென்று நாலு பேரை வெட்டிச்சாய்ப்பது கூட சாத்தியமே. காவல்துறை கோட்டை விட்டு இருக்கிறது என்பது சர்வ நிச்சயம். பெண்ணின் நடத்தையோ அல்லது அவரை அழைத்துச் சென்றவரின் நோக்கம் பற்றியோ அதே பெண் மூன்று வெறி பிடித்த மிருகங்களால் பாதிக்கப்பட்ட பின் கருத்து சொல்வது சரியாக இருக்காது.


தமிழ்வேள்
நவ 05, 2025 19:49

திரு.அண்ணாமலையின் கருத்துடன் மாறுபடுகிறேன். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.. அத்துமீறல்கள்விரும்பி அனுமதிக்க படுகின்றன...அது உள்ள வரை பிரச்சினை தொடரும்.


என்னத்த சொல்ல
நவ 05, 2025 19:46

சும்மா பேசுவதற்கு எதற்கு ரிஸ்க்கான பகுதிக்கு போகணும்.