வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழக மக்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் திமுகவின் உற்ற பங்காளியான இந்த எடப்பாடி பழனிச்சாமி திமுக.ஆட்சியில் நடந்த கனிமவள ஊழல்கள், மணல் குவாரிகளில் நடைபெறற ஊழல்கள் பத்திரப் பதிவில் நடந்த மாபெரும் பயங்கர ஊழல்களை எல்லாம் மக்களிடம் சொல்லி திமுகவை எதிர்த்து தன் கட்சியினரை கூட்டி பொது வெளியில் போராடாமல் இப்படி உப்புச் சப்பில்லாத பிரச்சனைகளை எல்லாம் சொல்லி திமுகவை எதிப்பது போல் நாடகமாடிக் கொண்டு தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார் அது ஏன் என்று சற்று விரிவாக பார்ப்போம். திமுக அரசு அமைந்து முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வருக்கு வைத்த முதல் கோரிக்கை: நான் முதலமைச்சராக இருந்த போது வசித்த இந்த ராசியான வீட்டையே எனக்கு ஒதுக்க வேண்டும் என கோரினார் அது உடனே நிறைவேற்றப்பட்டது.அடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னுடைய சம்பந்தி மீதான 4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு, 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்த ஊழல் வழக்கு ஸ்மார்ட் சிட்டி வழக்கு, இரண்டு லட்சம் டன் நிலக்கரி காணாமல் போன வழக்கு உள்ளிட்ட அனைத்து ஊழல் வழக்குகளையும் கிடப்பில் போட வேண்டும் என்கிற எடப்பாடி வேண்டுகோளும் ஸ்டாலினால் நிறைவேற்றப் பட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தாக எடப்பாடி மீது தொடரப்பட்ட வழக்கில் அப்படி தகவல்களை மறைப்பது ஒன்றும் பெரிய குற்றமில்லை என அரசுத் தரப்பே நீதிமன்றத்திலே தெரிவித்து எடப்பாடியை காப்பாற்றி வருகிறது. மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் அவர்களை முதல்வரிசையில் அமர்த்துவது எனது தனிப்பட்ட உரிமை என்று சபாநாயகர் உறுதிகாட்டிய நிலையில், முதல்வர் ஸ்டாலினே எழுந்து நின்று எடப்பாடியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க உடனே ஓ.பி.எஸ்ஸின் இருக்கை மூன்றாவது வரிசைக்கு மாற்றப்பட்டது.திமுகவிற்கும், எடப்பாடி திமுகவுக்கும் துரைமுருகன் மூலமாக புரோக்கராக செயல்பட்டு வருகிற கே.பி.முனுசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய குவாரி உரிமங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் பெட்ரோல் பங்க் உரிமங்கள் வழங்கப்பட்டது மேலும் இன்று வரை எடப்பாடியின் உறவினர்களின் நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்கள் மற்றும் காண்ட்ராக்ட் வேலைகளை தொடர்ந்து வழங்கி பங்காளி எடப்பாடியின் கஜானா நிரம்பி வழிய திமுக அரசு உதவி வருகிறது. இப்படி தன் பங்காளியான எடப்பாடியை பாதுகாப்பதும் அவரது கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றித் தருவதும், எதற்காக என்று எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகளான அதிமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும்!
என்னதான் ஆனாலும் உடைந்து போன அதிமுகவை ஒன்று சேர்க்க இவருக்கு பங்காளிகள் அனுமதி கொடுக்கவில்லை என்பதுதான் சோகம். அண்ணாமலை வந்தவுடன் எதிர்க்கட்சி பதவியும் வேலை செய்யாது. ஆத்தா திமுகவுக்கு இப்படி ஒரு சோகமான முடிவு வந்திருக்கக் கூடாது.
கடந்த 50 வருடங்களில் 30 வருடங்கள் மேல் ஆட்சி செய்தது மறைந்த எம்ஜிஈயர் மற்றும் அம்மா அவர்கள் ...அவர்கள் செய்த வளர்ச்சி பணிகளை வெட்கமில்லாமல் தி மு க ஸ்டிக்கர் ஒட்டி திராவிட மாடல் என்று விளம்பரம் .... அ தி மு க செய்த வளர்ச்சி பணிகள் அனைத்தும் அரசு குறிப்புக்கள் மற்றும் வலை தளங்களில் இருந்து நீக்கம் .. ..எம்ஜிஈயர் என்ன செய்தார் என்று தேடினால் எதுவும் தென்படாது ....மறைந்த அம்மா அவர்களை பற்றி விடியல் மிக மோசம் தரம் தாழ்ந்து எழுதுகிறார்கள் ....ஆனால் இதை எல்லாம் அ தி மு க திருப்பி கேள்வி கேட்காது..... காரணம் இரெண்டு திராவிட கட்சிகளும் பங்காளிகள்தான் ....இப்போதுள்ள அ தி மு க வேறு , அம்மா காலத்திய அ தி மு க வேறு .....
487 கோடி ரூபாயில், கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க, விடியல் அரசு டெண்டர் கோரியுள்ளதாம் ...இந்த 500 கோடி ரூபாயை விடியல் அரசு கார்பொரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்க .... ..ஆனால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம், காவிரி உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.....விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும், 235 கோடி ரூபாயில், மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாம் ......இதுதான் விடியல் சமூக நீதி மத சார்பின்மை ....