வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த பிளவிற்கு காரணம் வழக்கம்போல தேசிய கட்சியா? அறிந்தவர்கள் விளக்கம் தரலாம்
நல்ல விஷயம்! இந்த கட்சி ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது! இருவரும் தொடர்ந்து மோதிக்கொள்ளும் நிலமை தொடர் இறைவனை வேண்டுகிறேன்!
மிக சமீபத்தில் மிகப்பெரிய ஒரு மாநாட்டை நடத்தி முடித்து விட்டு அதன் பலனை முழுமையாக அறுவடை செய்யும் முன்னரே நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து பேசவேண்டிய உட்கட்சி விஷயங்களை பொதுவெளியில் வெளிப்படுத்தி கட்சியே அல்லோலப்பட்டுக் கொண்டுள்ளது... யாவும் பதவி மோகம் படுத்தும் பாடு... தற்காலத்தில் பதவி என்பதே ஒரு போதை தான்... ஒருமுறை அந்த சுகத்தை அனுபவித்து விட்டால் அதிலிருந்து மீள்வது கடினம்... 85 வயதைக் கடக்கப்போகும் ஒருவர்... இதுநாள் வரையில் எம்எல்ஏவாகவோ எம்பியாகவோ இருந்திராத ஒருவர்... நெடுங்காலம் தான் கட்டிக்காத்த ஒரு கட்சியின் தலைவர் பதவியாவது தன்னிடம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்... தன் கட்சியிலுள்ளோர் தன்னை கிள்ளுக் கீரையாக நடத்துவதையும் தன் சொற்படி கேளாமல் நடப்பதையும் பார்த்துப் பார்த்து வந்த ஆற்றாமையின் வெளிப்பாடே ராமதாஸின் இந்த குமுறல்... முக்கியமாக இனி வரப்போகும் தேர்தலுக்கான கூட்டணி விஷயத்தில் தந்தை மகனுக்கிடையில் சுமூகமான தீர்வு எட்டப்படும் என்பது கேள்விக்குறியே...
ஆரம்ப காலத்தில் சாலை ஓரம் இருந்த பசுமை மரங்களை போராட்டம் காரணமாக வெட்டி அழித்த மகான் இவர்.
மாம்பழங்கள் மாங்காய்கள் போல நடந்து கொள்வது துரதிஷ்டவசமானது.
இது பேரனுக்கும் மாமாவுக்கும் நடக்கும் அரசியல். ஏற்க்கனவே ஒரு பொண்ணை கொடுத்தாரு மாமா இன்னொரு பொண்ணையும் கொடுத்தா கட்சியும் பொண்ணும் பேரனுக்கே சொந்தமாகிடும்.. மொத்தத்துல அந்த கட்சி பி.ஜே.பிக்கு சொந்தமாகிடும்..
நிறுவனர் என்பவர் கட்சியை ஆரம்பித்தவர் என்ற பொருள் மட்டுமே. Bye Laws படி தலைவர் அல்லது பொது செயலாளருக்கு மட்டுமே அகிகாரிகளையோ உறுப்பினர்களையோ குழுவையோ நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் உள்ளது
குடும்ப உறுப்பினர்களால் பொறுப்பில் உள்ள கட்சிகளின் நிலைமை எப்போதுமே இப்படித்தான் இருக்கும். கருணாநிதி கட்டுப்பாட்டில் திமுக குடும்ப கட்சியாக மாறியதும் பின்னர் அவரது பெரிய குடும்பத்தின் மகன்கள் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார்கள் . அவரே கூட தனது தள்ளாத வயதில் பொதுவெளியில் புலம்பினார். தனது மகன் தன்னை மார்பில் உதைத்தார் என்றும், அடித்தார் என்றும் கூட கண்ணீர் மல்க கூறியதை படித்துள்ளோம். இது குடும்பங்களில் நடக்கின்ற கூத்துக்கள். ஆனாலும் கருணாநிதி ராமதாஸை போல அல்லாமல் கட்சிக்குள் அந்த நேரத்திலும் அந்நியர்கள் எவருமே பொறுப்புக்கு வராமல் கவனமாக சிந்தாமல் சிதறாமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ராமதாஸின் இந்த வயதில் கோபமானது எல்லையில்லாதது. தவறானதும் கூட. பொறுப்பில்லாமல் பேசுவதும் கட்சியை சிதைக்க முற்ப்படுவதும் சரியல்ல. தள்ளாத வயதில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை தவிர்த்திருக்க வேண்டும். அன்புமணி ராமதாஸை பற்றி அவர் தாயை தாக்கினார் என்பதுபோன்ற பொய் புகார்களை சொன்னால் தொண்டர்கள் கொந்தளிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அன்புமணியின் குணாதிசயம் அவரது பண்பான பேச்சும் பொறுப்பான செயல்களும் அனைவரும் அறிந்ததே. கட்சியினரையும் தாண்டி பொதுவெளியில் அன்புமணி அவர்கள் சிறப்பானவர்தான் அதில் சந்தேகமே இல்லை. அதனால் ராமதாஸின் பொய் புகார்களை நம்பும் அளவுக்கு தொண்டர்கள் யாருமில்லை. பிற கட்சியினரும் அவரை முழுமையாக நம்புகின்றார்கள். ராமதாஸ் இந்த தள்ளாத வயதில் ஒதுங்கி நின்று மகனின் திறமையை போற்றவேண்டும் ரசிக்கவேண்டுமே தவிர கொடூரமாக வாய்ஜால வார்த்தைகளால் புண்படுத்த கூடாது என்பதுதான் இன்றைய அரசியலில் பாமகவுக்கு மிக நல்லது. அன்புமணி அவர்கள் நிச்சயம் இந்த இக்கட்டான நிலையில் கட்சியை மீண்டும் காப்பாற்றி தமிழக அரசியலில் தனது பங்கினை பொறுப்போடு செயலாற்றுவார் என்றே நிச்சயம் எதிர்பார்க்கலாம். நல்ல மனிதர் அன்புமணி. நிச்சயம் மனம் புண்பட்டு வருத்தப்பட்டிருப்பார். தொண்டர்கள்தான் அவருக்கு பக்கபலமாக இருந்து தங்களது முழுமையான ஆதரவினை நல்கவேண்டும். பிளவை எதிர்பார்க்கும் பிற சாதிக்கட்சியின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப்போட்டு அவர்களின் நப்பாசையை துவம்சம் செய்திட ஒன்றுபட்ட தொண்டர்கள் அன்புமணிக்கே தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் இதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.
இதென்ன நியாயம் ராமதாஸ் சொன்னது பொய்யாம் ஆனால் பொது வெளியில் ஒருபோதும் தானைத்தலைவர் சொல்லாதது இவருக்கு உண்மையாம்.