உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 ஆண்டுகளாக எஸ்.ஐ.,க்கள் தவிப்பு: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

13 ஆண்டுகளாக எஸ்.ஐ.,க்கள் தவிப்பு: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நிதி பற்றாக்குறை என்ற, சற்றும் ஏற்க முடியாத காரணத்தை கூறி, 1,905 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வை நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக காவல் துறையில், 2011ல் நேரடியாக பணியில் சேர்ந்த, 1,905 எஸ்.ஐ.,க்கள், 13 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி உள்ள செய்தி வருந்தத்தக்கது.பிற அரசு துறைகளில், ஐந்து முதல் ஏழு ஆண்டுகளிலேயே பதவி உயர்வு பெறும்போது, சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல் துறை மட்டும், எப்போதும் வஞ்சிக்கப்பட்டு வருவதை ஏற்க முடியாது.கடந்த ஆண்டே, எஸ்.ஐ.,க்களின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு, காவல் துறை தலைமை இயக்குனரிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால், அரசின் நிதி பற்றாக்குறையால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பதும், வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதோடு, பணிகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இனியும் தாமதிக்காமல், அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.நிதி பற்றாக்குறை என்ற, சற்றும் ஏற்க முடியாத காரணத்தை கூறும் தி.மு.க., அரசு, தங்கள் வீண் விளம்பரங்களுக்கு செலவிடும் நிதியை, ஆக்கப்பூர்வமான அரசு நிர்வாகத்திற்கு செலவிடுவது, அனைவருக்கும் பலன் அளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Kanns
பிப் 04, 2024 23:18

Sack, Arrest, Prosecute & Punish All PowerMisusing CaseHungry Criminals Not Punishing Vested False Complainant Gang (esp Women, SCs, Advocates, Unions/Gangss & PowerMisusing Rulers-Officials (incl Judges)


ஆரூர் ரங்
பிப் 04, 2024 12:46

யார் அப்பா வீட்டு(சம்பளப் )பணம்.? ப்ரோமோஷன்? ????உதயா உடனே மந்திரியான மாதிரி எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தோமா?


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 11:29

சீமான் தம்பிகளை 'ஆயுதப்போர்' தீவிரவாதிகள் போல சித்தரிப்பதா?


Ravichandran,Thirumayam
பிப் 04, 2024 16:18

ரெண்டு பேத்துக்கும் சண்டை மூட்டி விடுறாராம்


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 11:25

அண்ணாமலை குழந்தைத்தனமான அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்


Chandran,Ooty
பிப் 04, 2024 12:34

அண்ணாமலை பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல...


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 11:18

பெண்கள் இலவச பஸ் / பெண்கள் உரிமை தொகை மாதம் ஆயிரம் / படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 / வெல்ல நிவாரணம் 6000 இப்படி எல்லாம் பெண்கள் பெண்கள் அப்புறம் எப்படி அடுத்தவன் க்கு வோட்டு விழும்


செல்வேந்திரன்,அரியலூர்
பிப் 04, 2024 12:39

திடல் ஓவியா இந்த நெனப்பு வேற இருக்கா? திமுகவுக்கு பெரிய ஆப்பு இருக்கு...????


ஆரூர் ரங்
பிப் 04, 2024 12:41

வெள்ள நிவாரணம்? அந்த மெல்டிங் பாயிண்ட் வெல்லத்தைச் சொல்றீங்களா????? நல்ல நிவாரணம்தான்.


kijan
பிப் 04, 2024 11:08

சார்.... கடுமையாக உழைக்கிறீர்கள் ..... பல பிரச்சனைகள் நீங்கள் குரல் கொடுப்பதால் தீர்வு கிடைக்கிறது .... கூத்தாடிஸ் குரூப் இல்லாமல் நன்கு பட்டம் படித்து நல்ல வேலையில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள் ....உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நல்லது .... புரையோடிப்போன ஜாதி ...மத அரசியல், ஊழல் ....பலமுள்ளவர்கள் .... எளியவர்களை அடக்கி ஆளுதல் .... போன்ற தமிழக அடிப்படை பிரச்சனைகளை சமாளித்து எப்படி வருவீர்கள் என்று தெரியவில்லை ... கடவுள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் .


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 11:23

அதிரவைக்கும் மெகா மோசடி..


rajan_subramanian manian
பிப் 04, 2024 11:03

என்ன செய்வது? அரசு ஊழியர்கள்,போக்குவரத்து ஊழியர்கள்,ஆசிரியர்கள்,காவல்துறை, முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள்,நடுநிலை மற்றும் முற்போக்கு என்று பீற்றிக்கொள்ளும் ஹிந்துக்கள்,கடவுளையும்,சார்ந்துள்ள மதத்தையும் மிதிக்கும் திமுகவிற்கு (மோடி எதோ இவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணை போட்டதாக நினைத்து)வாரி வாரி வழங்கிய பொது மக்கள்,சரியான தலைமை இல்லாத (அண்ணாமலை அப்போதே வந்திருக்க வேண்டும்)பிஜேபி,ஆகியோரின் கூட்டு முயற்சியால் வந்த வினை பலனை மக்கள் அனுபவிக்க வேண்டும். இப்போதும் காசு வாங்கி ஓட்டை போட்டுவிட்டு குத்துதே குடையுதே என்று இருந்தால் கடவுளாலும் காப்பாற்றமுடியாது.


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 10:34

இவருக்கு திடீர் பாசம் POLICE மீது, இப்படி தான் ஜெயா கைது செய்ய படுவோம் என்று தெரிந்து போலீஸ் மீது பாசம் அது போல இவரும் 2024 கு பிறகு என்று இப்போவே


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 10:33

தென்மாநிலங்களுக்கு நிதி கொடுக்கவில்லை என்பது உண்மையே. அதாவது மெஜாரிட்டியாக வாழும் இந்துக்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதே உண்மை. இந்துக்களுக்கு எதிரானவர்கள் நீங்களா? இல்லை இங்குள்ள எல்லா தரப்பு மக்களுக்காக குரல் கொடுப்பவர்களா? நீங்கள் இந்துக்கள் இல்லை இந்துத்துவாக்கள். தீவிரவாதிகளுக்கு சமமாகவே உங்களை தென் மாநில மக்கள் பார்க்கிறார்கள். திருந்துங்கள் திருந்த முயலுங்கள். மத அரசியல் பேசி பிரிவினை வளர்த்தவர்கள் நீங்கள். உங்களுடைய பேச்சுக்கள் அனைத்துமே அருவெறுப்பானவை. மத நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடத்தில் பிரிவினை தூண்டி கலவரம் செய்ய துடிக்கும் கும்பல் நீங்க. உங்கள் நாடகம் அறிவார்ந்த மக்களிடத்தில் ஒருபோதும் எடுபடாது.


subburamu K
பிப் 04, 2024 16:35

5 x 10 = 50 for your comments


Seshan Thirumaliruncholai
பிப் 04, 2024 10:28

பணிக்கு ஏற்ற கூலி வழங்கவில்லையெனின் அதர்மம். தகுதி அற்றவர் இலவசம்/தானம் பெறுவது மஹா பாவம். அரசும் தவறு செய்கிறது. மக்களும் தவறு செய்கிறார்கள். அதாவது தகுதி அற்றவர்களுக்கு வாக்கு வழங்குவது. காலம் மாறும் நம்பிக்கையோடு இருப்பின்.2024/2026 தேர்தல் மாற்றத்தை தமிழக மக்கள் வழங்குவர்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ