உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ

தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ

சென்னை; தி.மு.க., கேடு தரும் என்று அக்கட்சியின் எம்.பி. கனிமொழி, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசிய வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை எதிர்த்து சென்னையில் நேற்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் முற்றுகை போராட்டம் அறிவித்து இருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o144qy9j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போராட்டத்திற்கு சென்ற அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அண்ணாமலை உள்ளிட்ட 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்ணாமலை தமது சமூக வலைதள பதிவில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுவினால் ஏற்படும் சீரழிவு காரணமாக இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டு இருக்கிறது, ஏன் என்றால் இங்கு ஒவ்வொரு நாளும் குடிபழக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது என ஒருபுறம் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசும் வீடியோ அன்று என்று தலைப்பிட்டு இணைக்கப்பட்டு உள்ளது.அவரின் வீடியோ அருகிலேயே நேற்றைய தினம் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசிய வீடியோவின் ஒரு பகுதி சேர்க்கப்பட்டு உள்ளது. அதில் கனிமொழியின் பேச்சசுக்கு நேர் எதிராக அவர் பேசும் காட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது.அதில் பேசும் அமைச்சர் ரகுபதி, இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள் என்றால் அதற்கு அரசாங்கம் என்ன செய்யமுடியும், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அரசாங்கம் எந்த பொறுப்பும் கிடையாது. அவர்கள் என்ன காரணம் என்று சொன்னால் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். டாஸ்மாக்கால் செத்துபோனார்கள் என்று கிராமங்களில் கூட சொல்லவில்லை. அதில் ஏன் நீங்கள் இளம்விதவைகள் என்று சொல்கின்றீர்கள். டாஸ்மாக்கில் குடித்து ஒரு இளைஞன் இறந்துவிட்டான் என்று எந்த கிராமத்தில் இருந்து உங்களுக்கு புகார் வந்தது என்று கூறி உள்ளார். இவ்விரண்டு வீடியோக்களையும் ஒன்றாக இணைத்து, ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு, தி.மு.க., கேடு தரும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

TRE
மார் 18, 2025 15:52

பிஜேபி கேடு தரும் - அண்ணாமலை வீடியோ வெளியிடுவார்


சீனி
மார் 18, 2025 15:41

தமிழ் நாட்டில தாமரை வளருதுங்கோ


SRITHAR MADHAVAN
மார் 18, 2025 12:14

அன்புள்ள அண்ணாமலை அவர்களே, ஸ்டாலினின் புகைப்படத்தை "டாஸ்மாக் அப்பா" உடன் போடுங்கள்.


Karthik
மார் 18, 2025 19:08

""டாஸ்மாக் ன் தந்தை"" என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.


pmsamy
மார் 18, 2025 12:14

பாஜகவுக்கு தமிழகத்தில் என்றுமே வாய்ப்பு கிடையாது


Apposthalan samlin
மார் 18, 2025 10:31

அண்ணாமலை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தில்லு இருந்தால் மது விலக்கு கொண்டு வருவேன் என்று சொல்லட்டும் பார்ப்போம் ?


vivek
மார் 18, 2025 11:48

சொல்லமுடியாது. போவியா அப்போஸ்தலர்


நாஞ்சில் நாடோடி
மார் 18, 2025 12:13

அன்று சொன்ன கனிமொழிக்கு தில்லு இல்லையா ?


Barakat Ali
மார் 18, 2025 10:07

இந்த ஐடியா இப்பத்தான் வந்துச்சா மாஜி ஐ பி எஸ் ???? தேர்தல் நெருங்க நெருங்க ஆவேசம். போராட்டம் அதிகமா இருக்குதே ????


பேசும் தமிழன்
மார் 18, 2025 08:51

உண்மை தான் திமுக கேடு தரும்.. சென்ற அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று எத்தனை போராட்டம் என்ற பெயரில் கூத்து நடத்தினார்கள்.. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்த பிறகு.. டாஸ்மாக் மதுக் கடைகளை மூடாமல் இருக்கிறார்கள்.. இன்னும் சொல்ல போனால் நாங்கள் மதுக்கடைகளை மூடுவது எதுவும் கூறவில்லை என்று வேறு வியாக்கியானம் பேசி கொண்டு இருக்கிறார்கள்.... அப்போ முன்பு போராட்டம் நடத்தியது எல்லாம் பொய்யா கோபால் ???


RAAJ68
மார் 18, 2025 08:49

சும்மா நாடகம் போடாதீங்க. நீங்கள் மட்டும் டெல்லி பிஜேபி தலைவர்கள் தமிழக சாராய ஆலை அதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக தமிழா தமிழா பாண்டியன் யூட்யூபில் ஓப்பனாக குற்றம் சாட்டியிருக்கிறார். பொய் என்றால் இதற்கு ஆட்சேபணம் தெரிவியுங்கள் அல்லது அவர் மீது வழக்கு போடுங்கள். திமுகவுக்கு உதவி செய்ய நீங்கள் தான் தைரியம் கொடுக்கிறீர்கள். .


Yes your honor
மார் 18, 2025 10:11

இந்து பத்திரிக்கையையே நாங்கள் மதிப்பதில்லை. ஊருக்கு வெளியில் இருக்கும் ஓர் உவர்நிலம் நடத்தும் எதோ ஓர் ஊளைக்கா அலட்டிக்கொள்ளப் போகிறோம். இவர்கள் அனைவரும் பிஜேபியை வைத்து முன்னுக்குவர துடிக்கும் அஜெண்டா பார்ட்டிகள். இதெல்லாம் வெறும் கொசுத் தொல்லைதானே தவிர பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.


Sampath Kumar
மார் 18, 2025 08:23

தீ.மு.க கேடு தரும் என்றால் பிஜேபி என்ன தரும் அதுவும் அதை விட மோசமாக தான் தரும் மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள் சும்மா பொய் பொய்யா சொல்லி மக்களை ஏமாற்றாதே போவியா


Arunkumar,Ramnad
மார் 18, 2025 08:41

இந்த வண்டான் முட்டுக் கொடுக்க நசுங்கிப் போன திமுக கொத்தடிமை சமச்சீர் சம்பத்து...


Nandakumar Naidu.
மார் 18, 2025 08:54

ஐயோ பாவம், பரம்பரை கொத்தடிமை போல தெரிகிறது.


N.Purushothaman
மார் 18, 2025 11:10

திமிங்கலம் ...இளமை விதவைகள் குறித்து உங்க மூளைக்கு ஏதாவது எட்டி இருந்தால் இங்கே கருத்தாக பதியவும் ....காழ்ப்புணர்ச்சியில கருத்து போட கூடாது ...


sridhar
மார் 18, 2025 08:19

இத்தனை kedu கெட்ட கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தரம் என்ன


SUBBU,MADURAI
மார் 18, 2025 08:39

இந்த திருட்டு திராவிட திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் 25,000 கோடிகள் மட்டும்தான். ஆனால் இந்த திமுக திருட்டுக் களவானி திராவிட மாடல் அரசு வந்த பின் இன்றைய கணக்கின் படி டாஸ்மாக் வருமானம் 52,000 கோடிகளாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த திமுக அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் அவர்களை தினக் குடிக்கு அடிமையாக்கி அவர்கள் உழைக்கும் பணத்தையும் அவரகளின் இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கிறது. தமிழக மக்கள் இந்த கேவலமான திமுக அரசின் ஏமாற்று வித்தையை நம்பி இனியும் அவர்களுக்கு ஓட்டுப் போடுவதை தவிர்த்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் இந்த திமுக களவானிகளை ஆட்சியில் அமர்த்தினால் தமிழகம் சுடுகாடு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை