உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: கவர்னருக்கு அமைச்சர் பதில்

அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: கவர்னருக்கு அமைச்சர் பதில்

சென்னை: ' சட்டத்திற்கு உட்பட்டே அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது, '' என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதி இல்லாததால், அக்குழுவை கலைத்து, புதிய குழுவை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தி இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ge2whijj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து அறிவிக்கை வெளியிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அரசுக்கு பரிந்துரை செய்யவே முடியும். மாநில அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பல்கலை நிதிநல்கை குழுவுக்கு ஆதரவாக கவர்னர் செயல்பட்டு வருகிறார். பல்கலை சட்டத்திற்கு உட்பட்டு, தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிப்பதே அவரது பதவிக்கு அழகு.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடயூறு செய்கிறார். இனியாவது அவர் தனது செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கோவி செழியன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

NATARAJAN R
டிச 19, 2024 22:25

அமைச்சரே உங்கள் ஆட்சியில் கல்வியின் லட்சணம் ஊரறிந்த ஒன்று. ஏராளமான பேராசியர்கள், ஒருவரே பல கல்லூரிகளில் பணிபுரிந்ததாக போலி கையழுத்து போட்டு பல வருடங்களாக சம்பளம் வாங்கியது. பல ஆசிரியர்கள் தன் இடத்தில் வேறு ஒருவரை நியமித்து குறைந்த சம்பளம் கொடுத்து வந்தது. தமிழ் தேர்வில் ஆயிரக்கணக்கில் மாணவ மாணவிகள் தோல்வி. பட்டமளிப்பு விழாவில் ஒரு ஏழை மாணவன் கல்லூரி விடுதியில் நடக்கும் அவலங்களை கவர்னரிடம் புகார் செய்தபோதுதான் அரசுக்கு அது பற்றி தெரிந்தது. வேண்டுமானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் கவர்னர் மீது. நீதிமன்றம் சொல்லட்டும் அவர் மீது தவறு இருந்தால். அவர் ஆளுநர். திமுக வின் மாவட்ட செயலாளர் அல்ல. எதிர்கட்சித்தலைவராக திரு ஸ்டாலின் இருந்தபோது வாரம் ஒரு முறை அதிமுக ஆட்சி மீது ஆளுநரிடம் தான் சென்று புகார் கொடுத்தார் என்பது நினைவில் இருக்கட்டும்.


Nagarajan S
டிச 19, 2024 20:01

பல்கலை துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி சேர்க்கப்படுகிறார். ஆனால் யு ஜி சி பிரதிநிதி இல்லாமல் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் கூறினால் உயர்கல்வித்துறை நிலைமை என்னவாகும்?


முக்கிய வீடியோ