உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 2ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்

ஜூன் 2ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில், வரும் ஜூன் 2ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:வி.சி., - சிந்தனைச்செல்வன்: தமிழகத்தில் பிறந்த இசை மேதை இளையராஜா, லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்து, சாதனை படைத்துள்ளார்.லண்டனில் ஒலித்த சிம்பொனி இசையை, தமிழகத்தில் கேட்க முடியாதா என்ற ஏக்கம் தமிழக மக்களுக்கு உள்ளது. எனவே, தமிழகத்தில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்ற, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.முதல்வர் ஸ்டாலின்: இளையராஜாவை நான் சந்தித்தபோது, லண்டனில் ஒலித்த சிம்பொனி இசையை தமிழகத்திலும் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். சிம்பொனி இசையை தமிழகத்தில் அரங்கேற்றம் செய்ய இருப்பதாக அவரும் உறுதியாக தெரிவித்தார்.ஆனால், லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்தில் பங்கேற்ற, 400 கலைஞர்களையும் நினைத்த நேரத்தில் தமிழகத்திற்கு அழைத்து வர முடியாது. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.வரும் ஜூன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்த நாள். அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து, 50 ஆண்டுகள் நிறைவடையும் நாளும் வருகிறது.எனவே, தமிழக அரசின் சார்பில், திரையுலகில் 50 ஆண்டு விழாவும், லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ததற்காக, அவருக்கு பாராட்டு விழாவும், ஜூன் 2ம் தேதி சென்னையில் நடத்தப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vbs manian
மார் 28, 2025 08:50

விடுபட்ட மறந்து போன ஜாம்பவான்கள் எதனை பேரோ.


Raj
மார் 28, 2025 08:01

பாராட்டு விழா வைப்பது சரி அதில் எத்தனை கோடி விழுங்க போகிறார்களோ? தமிழக அரசாங்கம் கடனளில் மூழ்கி விட்டது. இனி 2026 ல் வரும் அரசுக்கு கண் விழி பிதுங்கி விடும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 28, 2025 10:29

இதில் டிக்கட் விற்றும் சன் டிவிக்கு உரிமம் கொடுத்தும் துட்டு பார்த்துவிடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை