உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11 மாவட்டங்களில் கலை, அறிவியல் கல்லுாரிகள்: முதல்வர் துவக்கி வைத்தார் முதல்வர் துவக்கி வைத்தார்

11 மாவட்டங்களில் கலை, அறிவியல் கல்லுாரிகள்: முதல்வர் துவக்கி வைத்தார் முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை : தமிழகத்தில் புதிதாக, 11 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கோவி.செழியன், ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், உயர்கல்வித்துறை செயலர் சமயமூர்த்தி, கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய கல்லுாரிகளில், தலா ஐந்து பாடப்பிரிவுகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு கல்லுாரிக்கும் முதலாம் ஆண்டுக்கு, 12 பேர் வீதம் மொத்தம், 132 உதவி பேராசிரியர்கள்; 14 பேர் வீதம், 154 ஆசிரி யர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இக்கல்லுாரிகளின் செலவிற்காக, 25.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ஆண்டுக்கு. 3,050 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். புதிய கல்லுாரிகளுடன் சேர்த்து, தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 176 ஆக உயர்ந்துள்ளது.

புதிய கல்லுாரிகள் விபரம்:

மாவட்டம் துவக்கப்படும் ஊர்கடலுார் பண்ருட்டிநீலகிரி குன்னுார்திண்டுக்கல் நத்தம்சென்னை ஆலந்துார்விழுப்புரம் விக்கிரவாண்டிசெங்கல்பட்டு செய்யூர்சிவகங்கை மானாமதுரைதிருவாரூர் முத்துப்பேட்டைதஞ்சாவூர் திருவிடைமருதுார்பெரம்பலுார் கொளக்காநத்தம்துாத்துக்குடி ஓட்டப்பிடாரம்

புதிய கல்லுாரிகள் விபரம்:

மாவட்டம் துவக்கப்படும் ஊர்கடலுார் பண்ருட்டிநீலகிரி குன்னுார்திண்டுக்கல் நத்தம்சென்னை ஆலந்துார்விழுப்புரம் விக்கிரவாண்டிசெங்கல்பட்டு செய்யூர்சிவகங்கை மானாமதுரைதிருவாரூர் முத்துப்பேட்டைதஞ்சாவூர் திருவிடைமருதுார்பெரம்பலுார் கொளக்காநத்தம்துாத்துக்குடி ஓட்டப்பிடாரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VENKATASUBRAMANIAN
மே 27, 2025 08:01

இருக்கும் கல்லூரிக்கே மாணவர்களை காணும். இருப்பதை மேம்படுத்தலாம். அதைவிட்டு விளம்பரத்திற்கு இதையெல்லாம் செய்கிறார்கள். புத்திரனை மேலும் வலுப்படுத்த உதவும். மாக்கள் சிந்திக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை