உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேளுங்க; அமைச்சர் தியாகராஜன் விரக்தி

யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேளுங்க; அமைச்சர் தியாகராஜன் விரக்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ஐ.டி., பார்க் அமைக்கக் கோரிய அ.தி.மு.க., உறுப்பினருக்கு, ''யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று கருதுகிறேன்,'' என்று சட்டசபையில் அமைச்சர் தியாகராஜன் விரக்தியுடன் பதில் அளித்தார்.சட்டசபையில் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் அளித்த பதில்: இந்த கூட்டத்தொடரிலே, இந்த அவையில் நான் என்னுடைய துறையில் இருக்கும் சிக்கல்களை கூறி இருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் போல் எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும், எங்கள் துறையில் செயல்படுவது இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hx7v18n9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சின்ன பங்கு தான், எங்கள் துறையில் செயல்படுகிறது. பாக்கி, டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும் அது தான் 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கோ, அவரிடம் கேட்டால், அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். அது எங்களிடம் இல்லை. இவ்வாறு தியாகராஜன் பேசினார்.

சபாநாயகர் 'அட்வைஸ்'

இதற்கு சபாநாயகர் அப்பாவு, '' உறுப்பினர் கேட்கிறாங்க, அமைச்சர் இதெல்லாம் நீங்கள் உள்ளுக்குள் பேசி, முதல்வரிடம் முடிவு எடுக்க வேண்டியது, பாசிட்டிவாக பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்'' என அறிவுறுத்தினார்.முன்னதாக, அமைச்சரின் பதிலை கேட்டதும், தி.மு.க., உறுப்பினர்கள், குறிப்பாக அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தன்னிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டதில் இருந்தே விரக்தியில் இருக்கும் அமைச்சர் தியாகராஜன், அதை இந்த பதிலில் வெளிக்காட்டி விட்டதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

K.Rajasekaran
ஏப் 22, 2025 07:01

PTR is a Clean and capable minister stick with corrupted and illiterate goon party, he should exit and join with good party, DMK wont to any good thing for state or people of tamilnadu, they will punish by god because they cant punish by people or central govt because they have lot of corrupted money to prevent their actions. Hope PTR can join with BJP, at least they better than DMK.


கிஜன்
ஏப் 22, 2025 02:48

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா .... வஞ்சகன் கண்ணனடா .... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .... மாண்பு மிகு மத்திய நிதி அமைச்சர் ...மற்றும் பிரதமரே சிறப்பு அழைப்பு விடுத்து பேசியும் இனி என்ன தயக்கம் ... து.மு விற்கு கீழ் நீங்க பணியாற்றுவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை ...


தாமரை மலர்கிறது
ஏப் 21, 2025 21:08

இந்த ஆட்சி ஒன்றும் செய்யாது என்று விளக்கமாக அமைச்சர் கூறியுள்ளது பாராட்டத்தக்கதே.


அப்பாவி
ஏப் 21, 2025 20:48

இவிங்களா ஒண்ணும் செய்ய மாட்டாங்க. தனியார் ஏதாவது செஞ்சா 40 சதவீதம் கமிஷன் கேக்க கவுன்சிலர்லேருந்து டார்ச்சர் குடுப்பாங்க. வெளங்காத விடியல் அரசு. அதுக்கு தேவையில்லாத அமைச்சர்கள்.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 20:30

மீனாக்ஷி அம்மன் கோவில் அறங்காவலராகவே நியமித்திருக்கலாம் .... செந்தில் பாலாஜியிடம் அப்ரண்டிஸாக கொஞ்ச நாள் நியமிக்கலாம் ..


S Regunathan Abudhabi UAE
ஏப் 21, 2025 19:25

PTR is a educated intellectual, he has no place in DMK where only corrupt goons, illiterate and obscene fellows are surviving. He has to be in the right party-BJP. Hope PTR will soon quit DMK..


vadivelu
ஏப் 21, 2025 19:09

அதானே, நீ என்ன பைலில் லா இருக்கிறாய், ஒரு ரூ கூட ஊழல் செய்ய தெரியலை, எதற்கு ... ஒரு முறையாவது இறை சென்றதுண்டா.


murugu
ஏப் 21, 2025 17:56

எதுக்குயா நீ அமைச்சர்


Easwar Kamal
ஏப் 21, 2025 17:33

திமுக பெரிய ஊழல் கட்சி தாக்கு பிடிக்க வேண்டும் என்றல் adhae நீரோட்டத்தில் பயணத்தால் ஒழிய தாக்கு பிடிக்க முடியாது. திமுக உள்ள அமைச்சர்கள் ஆட்சி மாறினால் சிறைக்கும் /கோர்ட்டுக்கும் படி எற பயம் இல்லாதவர்கள். உங்களால் அது முடியாது அப்படி இருக்கும்போது வாய் மற்றும் காதை பொத்திக்கொண்டு போய் விட வேண்டும்.


theruvasagan
ஏப் 21, 2025 16:41

யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அங்க கேளுங்கன்னு சொல்றாரே. அது ஒரு வேளை ஆந்த 30000 கோடி ஆளுங்களா இருக்குமோ. அப்படி இருக்க முடியாதே. அவர் சொன்ன மூணு தகுதிகளில் நடுவுது சுத்தமா அங்க கிடையாதே. பின்ன யாராக இருக்கும்.


சமீபத்திய செய்தி