உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூடுதல் ஆவணம் கேட்பது புதிதல்ல: முன்னாள் திட்ட இயக்குநர் தகவல்

 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூடுதல் ஆவணம் கேட்பது புதிதல்ல: முன்னாள் திட்ட இயக்குநர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் திட்ட அறிக்கை அனுப்பி, மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்,'' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் ராமநாதன் வலியுறுத்தினார். சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. மதுரையில், 11,360 கோடி ரூபாயில், திருமங்கலம் - ஒத்தக்கடை வரை, 31.93 கி.மீ., துாரம்; கோவையில், 10,740 கோடி ரூபாயில், 39 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசு தயாரித்தது. அதை மத்திய அரசுக்கு அனுப்பி, ஒப்புதல் கோரியது. ஆனால், மக்கள்தொகை குறைவை காரணம் காட்டி, அந்த அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன், தமிழக அரசு தொடர் ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறியதாவது: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, கூடுதல் ஆவணங்கள் கேட்டு, மத்திய அரசு திருப்பி அனுப்புவது புதியது அல்ல. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு முன், மூன்று, நான்கு முறை கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டு உள்ளன. கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில், மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள கடிதத்தை ஆய்வு செய்து, அதற்கான ஆவணங்களை தயார்படுத்த வேண்டும். திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய விவகாரத்தை கேள்வி கேட்கின்றனர் என, எடுத்துக் கொள்ள கூடாது. நமக்கான தேவை இருக்கும்போது, மத்திய அரசு கேட்கும் கூடுதல் ஆவணங்களை, தமிழக அரசு தான் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், மாநில அரசு அதிகாரிகள் டில்லி சென்று, தேவையான விளக்கங்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Suppan
நவ 27, 2025 16:49

தமிழக அரசு செய்யும் மிகப்பெரிய தவறு பல விஷயங்களை மறைத்து தங்களுக்கு தேவையான அரசியலுக்கு உகந்ததை மட்டுமே வெளியிடுவது. இந்த கோவை மதுரை மெட்ரோ விஷயத்தில் மக்கள் தொகை விஷயத்தை மட்டுமே முன்னெடுத்து மற்ற விஷயங்களை மொத்தமாக மறைத்து விட்டார்கள். அது எவ்வளவு கேவலமான விஷயம். தமிழக அரசின் திறமையின்மையை இந்த விரிவான திட்ட அறிக்கை வெளிப்படுத்துகிறது. என்னுடைய நண்பர் மெட்ரோ கன்சல்டன்ட் அந்த மத்திய அரசு கொடுத்து விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி உள்ள கடிதத்தை முழுவதும் படித்துவிட்டு என்னிடம் சொன்ன விஷயம் தான் அந்த அறிக்கையை தயாரித்தவர்களை உடனே நீக்க வேண்டும். மெட்ரோவுக்கு கீழ் உள்ள சாலைகள் குறைந்த பட்சம் 22 மீட்டர் அகலம் Right of way இருக்க வேண்டும். சில சாலைகளின் அகலம் ஏழு மீட்டர் கூட இல்லை. அந்த சாலைகளில் தூண்களை நிறுவினால் கீழே வண்டிகள் போவதற்கு இடம் எங்குள்ளது? ஸ்டேஷன்களை அமைக்க எவ்வளவு நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும்? அதற்கான செலவு என்ன? இதற்கே மிகுந்த காலம் வேண்டும். மொத்த திட்டத்தையும் மூன்று வருட காலத்தில் எப்படி முடிப்பார்கள்? இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தவர்கள் சுத்தமாக விஷயம் புரியாதவர்கள். அடுத்த விஷயம் விரிவான திட்ட அறிக்கை திருப்பி தான் அனுப்பப்பட்டுள்ளது நிராகரிக்கப்படவில்லை இதை ஏன் தெளிவுபடுத்த மாட்டேன் என்கிறது தமிழக அரசு இதிலிருந்து தெரிகிறது கயமைத்தனம். எப்பொழுதுமே மோதல் போக்கை கடை பிடித்தால் எப்படி தமிழகம் முன்னேறும். இந்த மாதிரி அறிவுரை என்ற பெயரில் அறிவு இல்லாத உரைகளை அரசுக்குக் கொடுத்த கூமுட்டைகள் யார் என்று தெரியவில்லை. இல்லை அமைச்சர்மார்களுக்கு தேர்தல் வருவதற்கு முன்னால் அறிக்கையை சமர்ப்பித்து பணத்தை வாங்க வேண்டும் என்ற நினைப்புதான். இதில் கழகக்கணமணி சொல்கிறார் நாங்கள் தனியார் பங்களிப்புடன் தை நிறைவேற்றுவோம் என்று. இந்த மாதிரியான உருப்படாத அறிக்கையை வைத்துக்கொண்டு நஷ்டப்படுவதற்கு எந்த தனியார்நிறுவனம் முன்வரும்?


morlot
நவ 27, 2025 15:50

For each and every thing we must ask permission to central govt.There is no liberty to do without cental govts nod. We are always slaves to these north indians. But they collect many millions of crores from south.They want to new airport,but we must give lands free,they implement new highways,but collect money in the toll gates.


panneer selvam
நவ 28, 2025 18:20

Morlot , it is better you can quit India since you do not want to respect the tem and follow guidelines. You are keen to cover up your shortcoming by blaming others . Corruption and Nepotism are major milestones in Tamilnadu today . So many examples to quote from Chennai airport to Industrial policies


அப்பாவி
நவ 27, 2025 13:48

மக்கள் தொகையை ஒசத்திட்டு அதற்கான ஆவணங்களை குடுங்கன்னு கேக்குறாங்களோ?


சந்திரன்
நவ 27, 2025 10:39

ஏன் தமிழக அரசிலேயே ஒரு மாவட்டம் அல்லது வட்டம் பிரிப்பதாக இருந்தாலும் அனுப்பப் பட்ட அறிக்கையில் ஏதேனும் குறை இருந்தால் அந்த மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் விபரம் கேட்டு குறை களைவு அறிக்கை தலைமை செயலகத்தில் இருந்து கோருவது தமிழக அரசிலேயே ஏற்கெனவே உள்ள நடை முறைதானே? அரசியல் ரீதியாக இதனை பெரிதாக்க என்ன இருக்கிறது?


பாமரன்
நவ 27, 2025 08:42

இன்னாடாயிது... ஒரு வேலைய திரும்ப திரும்ப செய்யறது வயக்கம் தான்னு இவரு சொல்றாரு... மொத தபாவே பர்ஃபெக்டாத்தான் இருக்கோனும்... அதாவது எதிரி கட்சி ஆளும் மாநிலம்னா... அப்பிடின்னு நம்ம வார் ரூம் பாய்ஸ் சொல்றாய்ங்க...


guna
நவ 27, 2025 11:44

பாவம்


கரீம் பாய், ஆம்பூர்
நவ 27, 2025 08:25

இப்படியே 70 வருடமா தமிழ் நாட்டை நாசமாக்கி விட்டனர். இனியும் இவர்களை விட்டு வைக்க கூடாது


sekar ng
நவ 27, 2025 07:56

மெட்ரோ பயண கட்டணம் கொடுக்க மதுரை, கோவை மக்களுக்கு பண ஆதாயம் இல்லை. அங்கு சென்னையைப்போல் ஐ டி வருமானம் இல்லை.


பாமரன்
நவ 27, 2025 08:46

சென்னையில் இதுவரை ஐடி நிறுவனங்கள் இருக்கும் இடங்களில் மெட்ரோ ஓட ஆரம்பிக்கலை... சொல்லப்போனா தமிழ் நாட்டின் BHIMARU பகுதியான வடசென்னை தான் மெட்ரோக்கு அதிக வருமானம் தருது... ஊரைவிட்டு வெளியே என்ன இருக்குன்னு தெரியாமல் நமக்கு புடிக்காதா ...ச்சூன்னு சாபம் விடுறது என்ன பழக்கமோ...


vivek
நவ 27, 2025 11:45

ஒழுங்கா DPR கொடுக்க வக்கில்லை....


kjpkh
நவ 27, 2025 07:41

அனுமதி கொடுத்திருந்தால் தான் வருத்தப்படுவார்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால் அதை வைத்து அரசியல் லாபம் பார்ப்பார்கள் இதுதான் அவர்களுக்கு சந்தோஷம்


Varadarajan Nagarajan
நவ 27, 2025 07:01

மாநில அரசும் அல்லது மத்திய அரசும் பல திட்டங்களுக்கும் ஒப்புதல்களுக்கும் பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி அறிக்கை மற்றும் விண்ணப்பஙபிகள் தயார்செய்யவேண்டியது அவசியம். அதனைவிடுத்து அரைகுறையாக திட்டத்தை தயார்செய்துவிட்டு அனுமதியளிக்கவில்லை, வஞ்ஜிக்கின்றது, ஓரவஞ்சனை, அரசியல் எதிர் அறிக்கை, எதிர்ப்பு போராட்டம், நீதிமன்றதில் வழக்கு என அரசியல் ஆதாயம் தேடுவது முறையல்ல. முதலில் திட்ட அறிக்கையை முறையாக சமர்பித்துவிட்டு பிறகு பேசலாம். வழிகாட்டுதல்கள்படி தயார்செய்யாதது அதிகாரிகளின் பொறுப்பற்றச்செயல். ஒரு குடியிருப்பு மனைப்பிரிவுக்கோ, அடுக்குமாடி குடியிருப்புக்கோ, சாலை அமைக்கவோ இதேபோல வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் ஒரு திட்டத்தை தயாரித்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பினால் எந்த கேள்வியும் கேட்க்காமல் ஒப்புதல் கிடைக்குமா? பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடரலாமா? நீதிமன்றம்தான் வழக்கை ஏற்றுக்கொள்ளுமா? அப்படியென்றால் வழிகாட்டுதல்கள் எதற்க்காக? கடந்த தேர்தலிலிருந்து கோவை செல்லப்பிள்ளையாக உள்ளது?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 27, 2025 05:52

ஒரு வாரத்தில் ஜனத்தொகை 20 லட்சத்தை தாண்டியது எப்படி என்று வல்லுநர்கள் கேட்டுள்ளார்கள்.


rama adhavan
நவ 27, 2025 07:25

திட்டத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டிய மத்திய அரசின் கடித்தை நன்கு படிக்கவும். இவ்வளவு குறை உள்ள கருத்துருவை இந்த அரசின் ஒரு துறை இந்த அரசுக்கு அனுப்பினால் இந்த அரசு பரிசீலிக்காமல் ஆணை வழங்குமா? வழங்கினாலும் மாநில கணக்காயர் தணிக்கையில் விடுவார்களா?


VJ VJ
நவ 27, 2025 07:40

Chennai metro ridership is about 4 lac per day with about 60kms lines. How Covai can have ridership of 5.9 lac per day with 39km lines? Also how much time metro is gonna save?


அப்பாவி
நவ 27, 2025 13:54

அதுவா... வண்டி வண்டியா பிஹாரிலிருந்து வாக்களிச்சுட்டு வந்துட்டாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை