உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல்: டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல்: டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதில் அளிக்கும்படி டிஜிபிக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டினார். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.இதன் பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துபவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த சூழலில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று (செப்.,03) விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

* ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. * ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.* எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், சமூக அமைப்பாக இருந்தாலும் ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும்.* பொதுக்கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும்.* அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா?* ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் வழிமறித்து தாக்கினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.* ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

என்னத்த சொல்ல
செப் 03, 2025 20:07

ஏன் EPS மீது வழக்கு பதியவில்லை. இந்த பிரச்சனையை தூண்டி விட்டதே அவர்தானே...


M S RAGHUNATHAN
செப் 03, 2025 17:17

அரசு வக்கீல் நீதிமன்றத்தில் சொல்லப் போவது : அய்யா DGP ஓய்வு பெற்று விட்டார். இப்போது தான் பொறுப்பு DGP பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அசல் DGP வந்தவுடன் அவர் பதிலை வாங்கி சொல்கிறேன்.


V Venkatachalam
செப் 03, 2025 17:10

ஆம்புலன்ஸ்க்கு பாதுகாப்பு வேணும் என்று கேஸ் போட்டவன் யாரு? நீ ஏன் கேஸ் போட்டாய்? உனக்கும் ஆம்புலன்ஸ் க்கும் என்ன சம்பந்தம் என்று கோர்ட் ஏன் கேட்கவில்லை? ஆம்புலன்சில் பணம் கொண்டு போன போது எவனாவது கேஸ் போட்டானா? தீய முக தூண்டி விட்டு போட சொன்ன கேஸ் தானே இது?


ஆரூர் ரங்
செப் 03, 2025 15:51

மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தாக்கியவர் மாடல் அமைச்சர். கட்சி உ.பி மீதே கல்லெறிந்த தலைவரும் அமைச்சரானார். மெட்ரோ ரயிலில் சக பயணியை அறைந்தவரும் ஒரு மாநில முதல்வராக முடிகிறது.


GMM
செப் 03, 2025 14:30

ஆம்புலன்ஸ் ஒரு உயிர் காக்கும் வண்டி. கட்டாயம் வழி விட வேண்டும். அண்ணா திமுக கூடத்தில் மட்டும் ஆம்புலன்ஸ் உள்ளே செல்கிறதா அல்லது எல்லா கட்சி கூட்டத்திலும் உள் செல்கிறதா என்று விசாரித்து டி ஜி. பி. அறிக்கை தரும் பொழுது இது அவசர ஊர்தியா/அரசியல் ஊர்தியா என்று தெரிய வரும்.


RAAJ68
செப் 03, 2025 13:38

ஸ்டாலின் ஆம்புலன்ஸ் பாலிடிக்ஸ் செய்கிறார் என்று தெரிந்தும் கூட நாட்டில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாதது போல்பேசுகிறார்கள். செய்திகள் பார்ப்பதில்லையா படிப்பதில்லையா.


RAAJ68
செப் 03, 2025 13:37

ஆளும் கட்சி சொல்வதை மட்டுமே கேட்பீர்களா எதிர்க்கட்சியினர் சொல்வதையும் கேளுங்கள். நியாயம் எதில் உள்ளது என்று பார்க்க வேண்டாமா


RAAJ68
செப் 03, 2025 13:36

அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே கூட்டத்தை கலைக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்சை விடுவது எந்த விதத்தில் நியாயம் அவர்கள் மீது என்ன நடவடிக்கை அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை