உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் வீடு மீது நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழக பா.ஜ., அண்ணாமலை கூறியுள்ளார்.துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8c3dmcb0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத் தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் போலீசாரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க., அரசு. தி.மு.க., அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M R Radha
மார் 25, 2025 00:26

செல்வ பெருந்தொகை என்ற ஓர் கேவலமான பிறவி பதவியில் இருக்கும் வரை காங்கிரஸ் திருந்த சான்ஸே இல்லை. இவன் மீது இருக்கும் அந்நிய செலாவணி மோசடியை ஏன் அமலாக்கத் துறை துரிதப் படுத்தவில்லை?


Thangaraj
மார் 24, 2025 17:50

இந்த ஆள் பிரதமரை கேவலமாக பேசினான் ஆனால் திமுகவை ஒரே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னதற்கு மொத்தமாக வைத்து செய்து விட்டார்கள் தொலையட்டும் சனியன்


veeramani hariharan
மார் 24, 2025 16:58

Height of atrocity. Now it is high time to unite all Hindus and infuse against Dravida pseudo secularism. We have to see that this Government should be removed from T.N. in coming election


என்றும் இந்தியன்
மார் 24, 2025 16:51

இதோ அண்ணாமலை சொன்ன இன்னும் சில வரிகள் திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியை பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?. திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம். இன்னொரு தகவல்- Sekar Babu is one of notorious dons of North Chennai .


Palanisamy Sekar
மார் 24, 2025 16:47

சங்கரின் பேட்டியில் சொல்கின்றார் போலீஸ் உயர் அதிகாரி என்று. அப்படி உண்மையென்றால் அந்த போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவருக்கு இதுபோல செய்ய முடியும் என்றால் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக சொல்லி பதவி நீக்கம் செய்திட கோர்ட்டாரே முன்வந்து இந்த வழக்கை கையிலெடுக்க வேண்டும். இப்போதெல்லாம் போலீசின் உயர் அதிகாரபிகள் அரசியல்வாதிகளோடு நேருக்கு நேர் மல்லுக்கட்டுக்கொண்டிருபப்து போலீஸ் துரையின் ஈரல் அழுகி துர்நாற்றம் வீசுகின்றதை உறுதி செய்திடலாம். எப்படிப்பட்ட தமிழக காவல்துறையானது இப்போது அடியாட்களை போல செயல்படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது. போலீஸ் இல்லை பொருக்கி என்கிற விக்ரம் படவசனம்தான் நினைவுக்கு வருகின்றது. திமுகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக இந்த சம்பவம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. விநாசகாலே விபரீத புத்தி.


Bala
மார் 24, 2025 16:12

சவுக்கு சங்கர் ஒன்றும் பாஜக ஆதரவாளர் அல்ல. ஆனால் தமிழகத்தில் அநீதி எங்கு நடந்தாலும் அதற்கு கொடுப்பவர் வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே


rama adhavan
மார் 24, 2025 15:35

அராஜக செயலை வீடியோ எடுத்து நேரலையில் அவரது யூ டுயூப் சேனலில் ஒளிபரப்பு செய்ய சொல்லவும். வீட்டுக்கு உள்ளும் புறமும் கண்கணிப்பு கேமரா வைத்து கண்காணிக்க சொல்லலாம். சங்கருக்கும் இது எல்லாம் தெரியுமே? ஏன் செய்யவில்லை?


sridhar
மார் 24, 2025 19:16

இப்படி கூடவா ஒரு கேவலத்துக்கு முட்டு குடுப்பீங்க . சம்பவம் பொய் என்று சொல்கிறீர்களா . நீங்க கலைஞ்சர் டிவி மட்டும் பார்க்கிற அறிவாளியா


makesh
மார் 24, 2025 15:16

ஏண்டா சாக்கடை கழிவு தூக்கி வீட்டுக்குள்ள போட்டானுவ , அதுக்கு இவோலோ அக்கப்போறா


raja
மார் 24, 2025 17:45

உன் வீட்டில் போட்டால் நீ என்ன செய்வாய் உடன் பிறப்பே...


Narayanan
மார் 24, 2025 14:47

திமுகவினர் செய்யும் போது யாரை கைது செய்வது . பிஜேபியின் கையில் எடுக்காத 356 சட்டப்பிரிவு அனைத்து கட்சியினரையும் காப்பாற்றுகிறது. வாய்க்கு வந்தபடி யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கு அசிங்கமாக இருக்கிறது .


Karuthu kirukkan
மார் 24, 2025 14:23

தி.மு.க., ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத் தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் போலீசாரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க., அரசு மதுவில் ஊழலும் மணலில் ஊழலும் மலையில் மற்றும் ......அணையும் விளக்கு சுடர் விட்டு எரியும்.. இது தமிழர்களின் இருண்ட காலம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை