வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கேரளாக்காரனுக்கு எடுக்க வேண்டிய பாடத்தை தமிழனுக்கு எடுப்பது மகா வன்மம்.
மருத்துவ கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளையும் கழிவுநீரை ஆறுகளில் கலக்கவிடுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் போன்ற அரசு அமைப்புகள்தான். கழிவுகளை முறையாக கையாள்வதில்லை. அவர்களிடம் அதற்குண்டான கட்டமைப்பும் இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவற்றை கண்டுகொள்வதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டும் தேவைக்கு அதிகமாக கடுமை காட்டுவதுபோல் நடந்துகொண்டு இதர வருமானம் பார்க்கின்றது. கட்டணம் வசூலிப்பதுமட்டுமே இந்த வாரியத்தின் பணியா? இவர்களால் திருப்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டதை தடுக்கமுடிந்ததா? அல்லது நெடுநாட்களாக கேரளாவிலிருந்து இதுபோன்ற மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் இருந்தபோது தடுக்க நடவடிக்கை எடுத்தார்களா? இந்த பிரச்சனையை ஒரு அரசியல் கட்சி கையிலெடுத்தபிறகு ஆணையம் முதல், வாரியம் வரை அனைத்து அமைப்புகளும் செயல்படுவதாக காட்டிக்கொள்கின்றன
இந்த விழிப்புணர்வு பள்ளி, கல்லூரிகளுக்கு தேவை இல்லை மருத்துவ மனைகளுக்கு தான். வெட்டித்தனமான வேலை. உக்காந்து யோசிப்பாங்களோ.
கழிவு ஏற்படாமல் இருக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதாவது சேமிப்பு அவசியம் என்பதை உணர்த்த வேண்டும்