உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார்பதிவாளர் அலுவலகங்களில் உறவினர்களுக்கு தடை

சார்பதிவாளர் அலுவலகங்களில் உறவினர்களுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சார் பதிவாளர் அலுவலகங்களில் ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டாலும் லஞ்ச புகார்கள் தொடர்கின்றன. வெளியாட்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு மாவட்ட பதிவாளர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சார் பதிவாளரின் உறவினர்கள் நண்பர்கள் என்ற அடிப்படையில் தரகர்கள் நடமாடுவது தெரியவந்தது.இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் பிறப்பித்துள்ள உத்தரவு: சார் பதிவாளர் அலுவலகங்களில் துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடக்கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் சார் பதிவாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் நண்பர்கள் என யாரையும் தன்னிசையாக எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வுகள் வாயிலாக இதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

meenakshisundaram
ஜன 20, 2024 16:26

இதில் சிறந்த காமெடி என்பது- மாவட்ட ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் நுழைவு வாயிலில் உள்ள போர்டு தான் "இங்கு லஞ்சம் கொடுப்பதுவும்வாங்குவதுவும்


Jysenn
ஜன 20, 2024 16:16

Document writers are fleecing the poor under the guise of giving bribe to the officer who doesn't perhaps know how much money is involved as bribe.


ஆரூர் ரங்
ஜன 20, 2024 16:09

ராஜாஜி முதல்வராக இருந்த போது, தனது கட்சிக்காரர் எவரும் தலைமைச்செயலகத்திற்குள் வரக்கூடாது என உத்தரவு போட்டு கறாராக அமல்படுத்தினார்????. முதல்வரின் குடும்பத்து ஆட்கள் மேலேயே தலையீடு, முறைகேடு புகார் வருகிறது.


Varadarajan Nagarajan
ஜன 20, 2024 14:32

பத்திர பதிவு துறையில் ஊழல் வளர்ந்து புதிய பரிமாணத்தில் நடைபெறுகின்றது. முன்பெல்லாம் பதிவுசெய்யும் பத்திரத்திற்கு இவ்வளவு என்று இருந்தது. இப்பொழுதெல்லாம் சொத்தின் மதிப்பில் இத்தனை சதவிகிதம் என்று வாங்குகிறார்கள். (இவர்கள் ஷார் ஹோல்டர்கள்போல). ஒவ்வொரு எழுத்தரும் பதிவுசெய்த மொத்த மதிப்பில் கொடுக்கவேண்டிய லஞ்சம் அலுவலகத்திற்கு வெளியே கைமாறுகின்றது. பதிவு அலுவலகத்தைப்பொறுத்து பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் பதவிக்கும் இடமாறுதலுக்கும் சம்பந்தப்பட்ட துறையிலேயே ரேட் நிர்ணயம் செய்து லஞ்சம் வாங்கப்படுகிறது. பதிவுத்துறை அலுவலகங்களின் சுவற்றில் முன்பு காந்தி படம் இருந்த இடத்தில் தற்பொழுது விஞ்ஞான ஊழல் தலைவர் படம் மாட்டபட்டுள்ளது. பிறகு ஊழலை எப்படி ஒழிக்கப்போகின்றீர்கள்?


rsudarsan lic
ஜன 20, 2024 13:37

முடிந்தால் சார்பதிவாளர்கள் RTO எல்லோரையும் தடை செய்யலாம்


அப்புசாமி
ஜன 20, 2024 11:51

சார்பதிவு அலுவலகத்தில் ரெண்டு செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை பதிவு செய்யப்.போட்டால் அவைகூட லஞ்சம் கேக்கும். அத்தனை பெரிய ஊழல் சாக்கடை அது.


R KUMAR
ஜன 20, 2024 11:02

வேடிக்கையான காமெடி. பத்திரம் பதிவு செய்யப்பட, உரிமைச் சீட்டு உள்ளவர்கள் மூலமே பதிவு செய்யவேண்டிய பத்திரம் எழுதவேண்டும். இரண்டு தினங்கள் முன்பாகவே பத்திர விவரத்தினை ஆன்லைன் மூலம் துறைக்கு therividhu, பதிவு செய்ய நேரம் / நாள் விவரம் அறியவேண்டும். இசைவு கிடைத்தவுடன் பத்திரம் எழுதுபவர், ஒரு கணக்கு கொடுப்பார். அதை பார்த்த்தால், பதிவுத் துறை செலவு எண்டு ஒரு குறிப்பு இருக்கும். அதில் துறை அலுவலருக்கு எவ்வளவு, எழுத்தருக்கு எவ்வளவு என்ற விரிவான தகவல் தெரியும். அநேகமாக இந்தவகையில் பத்திர பதிவு வாரம் ஒரு முறை அல்லது எப்போதெல்லாம் கொடுக்கவேண்டுமோ அப்போதெல்லாம் செட்டில் செய்யப்படும்.


Jeyachandran Natarajan
ஜன 20, 2024 10:50

சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஊழல் குற்றங்கள் யார்மூலம் நடைபெறுகிறது பொதுமக்களிடம் கேளுங்கள். என்னுடைய அனுபவதில் சொல்கிறேன். ஒவ்வொரு அலுவகத்திற்கு அருகில் இருக்கும் டாக்குமெண்ட் எழுத்தர்கள்தான் இடைத்தரகர்கள். இந்த எழுத்தர்களிடமிருந்து வரும் டாக்குமெண்ட்ஸ் மட்டும் தான் சார்பதிவாளர்களால் எடுத்து கொள்ள படுகிறது. நேரடியாக டாக்குமெண்ட் ரெடி பண்ண உதவியாளர்கள் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் இல்லை. கேட்டாலும் சரியான பதில் வராது. இந்த காரணத்தினால்தான் மக்கள் பிரைவேட் எழுத்தர்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த எழுத்தர்கள் (இடைத்தரகர்கள்) தான் பதிவுக்கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். உதாரணத்திற்கு இவர்கள் 9,000/ பணத்தை கேஷாக பெற்றுக்கொண்டு 1,500/ பதிவுக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்திவிட்டு மீதமுள்ள 7,500/ லஞ்சமாக விஞ்ஞனான முறையில் ஊழல் செய்கிறார்கள். இந்த லஞ்ச ஊழலை சார்ப்பதிவாளர் அமைச்சர்கள் உள்பட அனைவரும் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.


தஞ்சை மன்னர்
ஜன 20, 2024 10:49

காமெடியாக இருக்கு இங்கே பண பரிவர்த்தனை பத்திர எழுத்தாளர் மூலமாக வே நடக்கிறது இன்னைக்கு இதனை மதிப்பு உள்ள பத்திர பதிவு நடக்குமேயென்று முதல் நாளில் சார்பதிவாளருக்கு தகவல் அளிக்கப்பட்டு பத்திரப்பதிவு முடிந்தவுடனே பணம் பத்திர எழுத்தாளர் மூலம் எங்கே போகணுமா அங்கே போய் விடும் இது இந்திய முழுவதும் நடக்கும் சங்கதி இப்போது இது தெரியாமல் ஹி ஹி


sami
ஜன 20, 2024 09:40

The main brokers are document writers. They act as a middle man as well as document writers. You need their presence all times. So they are most convenient for the registrars to do the collections on behalf of them.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ