உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகமே: நாகேந்திரன்

 பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகமே: நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: தேர்தலில் வெற்றி பெற்றால், தேர்தல் கமிஷனை கொண்டாடுவதும், தோல்வி அடையும்போது, அதே தேர்தல் கமிஷனை சாடுவதும்தான், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கை. பா.ஜ., எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம், தமிழகத்தை நோக்கியே. 'ஆடத்தெரியாதவன் தெரு கோணல்' என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவை பெற முடியாதவர்கள் தான், தேர்தல் கமிஷனின் நேர்மையை குறை சொல்வர். தேர்தல் கமிஷன் நடத்திய, தேர்தல் வாயிலாக கிடைத்த, எம்.பி., - எல்.எல்.ஏ., பதவிகளில் அமர்ந்து, அதே தேர்தல் கமிஷன் மீது, சந்தேக கற்களை வீசும் ஆட்கள், செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Mariadoss E
நவ 15, 2025 22:02

தமிழ்நாட்டில் அது நடக்காது ராஜா....


Rengaraj
நவ 15, 2025 17:28

ரெண்டு திராவிட கழகங்களும் வேண்டாம் என்று இருப்பவர்களின் சாய்ஸ் பாஜக என்னும் அளவுக்கு கட்சியை தமிழகத்தில் மிக கடுமையாக உழைத்து மேலே கொண்டுசென்றிருக்கவேண்டும். களநிலவரம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு இருக்கும் கடமைகள் அ பீஹார் வெற்றியை மையப்படுத்தி அண்ணாதிமுகவுடன் பேரம் பேசி அதிக இடங்களை பெறுவது அதில் தங்கள் பங்கை பாமக, தேமுதிக போன்ற அனைத்து சிறு கட்சிகளுக்கும் தந்து தேசிய ஜனநாயக கூட்டணியை பலம்பெறச் செய்வது ஆ எடப்பாடி , பிரிந்து இருக்கும் அண்ணாதிமுகவை ஒன்றிணைக்காமல் போனாலும் அவர் வெளியே அனுப்பியவர்களை மீண்டும் தங்கள் கூட்டணியில் சேர்த்து தாமரை சின்னத்தில் போட்டிபோட செய்வது. இ விஜய் பக்கம் யாரையும் சேரவிடாமல் பார்த்துக்கொள்வது , அவரை தனித்துவிடுவது


Rengaraj
நவ 15, 2025 16:40

எந்த காலத்திலும் திமுக தலைமையும் அண்ணா திமுக தலைமையும் நேரடியாக ஒரே தொகுதியில் போட்டி போட்டதில்லை. திமுக நிற்கும் அனைத்து தொகுதியிலும் அண்ணாதிமுகவோ அண்ணாதிமுக நிற்கும் எல்லாத்தொகுதியிலும் திமுகவோ நேரடியாக நின்றதில்லை. 234 தொகுதிகளிலும் தனித்து நின்று இரு கழகங்களும் போட்டி போட்டதே இல்லை. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரு கழகங்களுக்கும் நேரடி போட்டி என்பது இருந்த வரலாறே இல்லை. கூட்டணி இன்றி திமுக எந்த காலத்திலும் வெற்றிபெற்றதேயில்லை. பீஹாரில் இப்போது நடந்தது போன்று போன்று தமிழக மக்கள் எப்போதும் அபரிமிதமான வெற்றியை திமுக கூட்டணிக்கோ அல்லது அதிமுக கூட்டணிகோ தந்ததே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழக அரசியல் இருக்கும் போது தலைவர்கள் போடும் அரசியல் கணக்குகள் துல்லியமாக அமைவதில்லை.


Narasimhan
நவ 15, 2025 15:12

வீண் கனவு காணாதீர்கள். சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் இந்துக்கள் இங்கு அரவேயில்லை.


ராமகிருஷ்ணன்
நவ 15, 2025 15:00

DMK FILES எல்லாம் முழுவதும் விசாரிக்க வேண்டும். திமுக கைதிகளை அந்தமான் ஜெயிலில் அடைக்க வேண்டும். திகாரில் போட்டாலும் சப்பாத்தி சாப்பிட்டு உடம்பை தேற்றி விடுவார்கள். சுத்த மானங்கெட்ட ஜென்மங்கள்.


KRISHNAN R
நவ 15, 2025 14:13

அப்படியா


A.Gomathinayagam
நவ 15, 2025 14:10

ஒவ்வொரு மகளிருக்கும் இருப்பததையாயிரம் கொடுத்தால் மட்டுமே சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு .


V K
நவ 15, 2025 14:04

நைனா வாய்ப்பு இல்லை ராசா


xyzabc
நவ 15, 2025 13:56

வாரிசு அரசியல் முக்கியமா? தேவையா?


Shankar
நவ 15, 2025 11:53

கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு தலைவரே. அதுபோல பாஜகவின் செயல்பாடுகளும் தமிழகத்தில் இருக்கவேண்டுமல்லவா. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தவரை எல்லாம் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது. அந்த வேகம் இப்போது இல்லையே.


முக்கிய வீடியோ