உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில்களை தனியார் வசம் மாற்ற பா.ஜ., திட்டம்

 கோவில்களை தனியார் வசம் மாற்ற பா.ஜ., திட்டம்

அயோத்தி ராமர் கோவில் தனியார் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இருப்பதால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க முடியாது. மத்தியில் ஆளும் பா.ஜ., எல்லா மாநிலங்களிலும் உள்ள கோவில்களின் சொத்துக்களை, தனியார் அல்லது பக்தர்கள் வசம் மாற்றி வருகிறது.அந்த வகையில், தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களின் நிர்வாகத்தையும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், தனியாரிடம் கொடுக்குமாறு பா.ஜ., வற்புறுத்துகிறது. எந்த குற்றமும் செய்யாத, பட்டியலினத்தை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை களங்கப்படுத்த, பா.ஜ., முயற்சிக்கிறது. பட்டியலினத்தவர் உயர்கல்வி அமைச்சர் பதவி வகிப்பதா என்ற பொறாமையில், ஆர்.எஸ்.எஸ்., சதி செய்கிறது. டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின், தமிழக கவர்னரின் போக்கு மாறி விட்டது. - மாணிக்கம் தாகூர், தலைவர், தமிழக காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S.VENKATESAN
ஜூலை 06, 2026 19:17

பட்டியல் இனம் அப்படின்னா எல்லா சலுகையும் உண்டு தப்பு செஞ்சாலும் பட்டியல்ன்னு சொல்லி தப்பிக்கலாம்


ஊர்குருவி
ஜூலை 06, 2026 17:08

இவனுங்க இதுக்குனே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று ஒன்று வைத்துக்கொள்ளுவானுங்க தப்புசெய்யும்போதெல்லாம் அதுல ஓடி ஒளிந்துகொள்ளுவானுங்க .தப்பு ஏதும் நடக்கவில்லை அல்லது தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி விட்டு போங்களேன் .எதுக்கு தாழ்த்தப்பட்டவர் போர்வை ?தாழ்த்தப்பட்டவர் என்றால் மாற்று உடைக்கு கூட வசதி இல்லாதவர் என்று அர்த்தம் .உங்கள் கட்சியில தாழாதப்பட்டவர் என்றால் பலநூறு கோடிகளை சேர்த்தவர் என்று அர்த்தமா ?


Velayutham rajeswaran
ஜூலை 06, 2026 16:27

கோவில்களை அரசின் பிடியில் இருந்து எடுத்தால் ஊழல் காங்கிரஸ் கட்சிக்கு என்ன நஷ்டம்


ராஜா
ஜூலை 06, 2026 15:33

கோவில்கள் அரசுடைமை என்று யார் சொன்னது? கோவில்கள் கடவுள் சொத்து அதை பராமரிக்க வேண்டியது பக்தர்கள் கடமை. அதற்கு பொறுப்பு பக்தர்களின் பிரதிநிதியான தர்மகர்த்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை கொண்ட காங்கிரசு ஒரு பழங்குடி இன பெண் குடியரதலைவர் ஆவதை எதிர்த்து உயர் வகுப்பு வேட்பாளரை நிறுத்தியது ஏன்?


duruvasar
ஜூலை 06, 2026 15:23

எங்கடா பட்டியலினம், சிறுபான்மையனர் என்ற போர்வையில் புகுந்துகொள்ளவில்லையே என நினைத்தேன் .


srinivasan
ஜூலை 06, 2026 12:33

கோவில்கள் தனியார் மயமானால் இந்த மாணிக் டாகூருக்கு எங்க வலிக்கிறது . இத்துணை நாள் சேகர் பாடி சுருட்டிய போது வராத கவலை இப்போது ஏன்?


கண்ணன்
ஜூலை 06, 2026 12:08

நல்லது தானே! அரசாங்கத்தின் பெயரால் இந்த திருட்டுக் கட்சிகள் கொள்ளயடிப்பது நிற்கும். கருத்து என்ற பெயரில் படிப்பறிவற்றோர் உளறாமல் இருப்பது நல்லது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை