உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோட்டைக்கு பேரணி

பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோட்டைக்கு பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பிராமணர் சமூகத்தை பாதுகாக்க, மத்திய - மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்றக்கோரி, சென்னையில், வள்ளுவர் கோட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, நவ., 3ல்் பேரணி நடத்தப்படுகிறது.இது தொடர்பாக, ஹிந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலர் டி.குருமூர்த்தி கூறியதாவது:தமிழகத்தில் மற்ற சமுதாயத்தினருக்கு அளிப்பதுபோல, பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை; இட ஒதுக்கீடும் கிடையாது. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையோ, சலுகையோ வழங்குவதில்லை.பாடசாலை மற்றும் கோவில்களில் பணிபுரியும் குருக்களை கிண்டல் செய்து வந்தவர்கள், தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை விமர்சிக்கும் அளவுக்கு, தரம் தாழ்ந்து விட்டனர்.திராவிட கொள்கையை புகுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தி வருகின்றனர்.பிற சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசினால், உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ளது. சிறுபான்மை சமூகமான பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிப்பதற்கு, இதுவரை சட்டமில்லை.அச்சமூகத்தை பாதுகாக்கும் வகையிலும், அவர்களை இழிவுபடுத்தி பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையிலும், மத்திய - மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்ற வேண்டும்.இக்கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து சமுதாய தலைவர்களின் ஆதரவோடு, சென்னையில் வள்ளுவர் கோட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, ஒரு லட்சம் பிராமணர்களை ஒன்று திரட்டி, நவ., 3ல் கோரிக்கை பேரணி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஒருங்கிணைப்பு பணியை, குருமூர்த்தி செய்கிறார். இவரை தொடர்பு கொள்ள: 98947 76577.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 80 )

sankaranarayanan
நவ 03, 2024 08:58

சிறுபான்மை சமூகமான பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிப்பதற்கு, இதுவரை சட்டமில்லை.அவர்களை இழிவாக பேசுவது கிண்டல் செய்வது அவர்களை எல்லா முடிவுகளுக்கும் புறக்கணிப்பது என்ற எண்ணங்கள் அடியோடு அழியவேண்டும் எதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சரித்திர நிகழ்வை மனத்தில் கொண்டு அதையே திரும்ப திரும்ப சொல்லி மக்களை மடையவர்களாக்கி இப்போதுள்ள அந்தணர்களை அழிக்க முன் வருவத்திகு மடைமையாகும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து எல்லோரும் சமம் எல்லா சமூகத்தினருக்கும் இட ஒதுக்கிவிடு சமம் என்று வாயளவில் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் அரசு கொண்டுவர வேண்டும்


jgn
அக் 31, 2024 02:41

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை, தமிழ் நாடு - 600009 பொருள்: பிராமண சமூகத்தை இலக்காகக் கொண்ட சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் அன்புள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, சில அரசியல் குழுக்களால் பிராமண சமூகத்தின் உறுப்பினர்களை இலக்காகக் கொண்ட பாகுபாடு சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர நான் இதை எழுதுகிறேன். இந்த சிகிச்சை தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. உள்ளடக்கம் மற்றும் சமத்துவம் குறித்து பெருமை கொள்ளும் ஒரு மாநிலத்தில், சாதி அடிப்படையிலான தப்பெண்ணம் அல்லது எந்தவொரு சமூகத்தையும் குறிவைப்பது மன்னிக்கப்படக்கூடாது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் தவறான நடத்தை நமது அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவது மட்டுமல்லாமல், நமது சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிளவுகளை வளர்க்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். சாதி வேறுபாடின்றி அனைத்து சமூகங்களும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதை உறுதி செய்வது, மாநிலம் முழுவதும் ஒற்றுமை மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் உணர்வை வலுப்படுத்தும். இந்த முக்கியமான விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதில் உங்கள் தலைமையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மரியாதையுடன் jagadeesan gopalswamy coimbatore.


Natesan B
அக் 30, 2024 15:55

Under FC not only brahmins also there are lot of community like mudhaliar, chettiar naidu etc.


sundarsvpr
அக் 20, 2024 12:59

பிராமண பெண்கள் அதிகமாய் கலந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் திராவிட பாசறைகள் வெட்கி தலை குனிந்து மௌனம் காக்கும். வீட்டில் தான் அன்புக்கு அடிமை விட்டுக்கொடுத்தல். ஆனால் வெளியில் கண்ணால் சுட்டு எரிக்கவேண்டும்


தஞ்சை மன்னர்
அக் 12, 2024 18:19

அப்படி வாங்க வழிக்கு அப்போ தானே அடுத்தவனலோட வலி தெரியும்


Matt P
அக் 10, 2024 07:10

சாதி தப்போ சரியோ எப்படியோ பிரிவுகள் ஏற்பட்டு விட்டது. மக்களும் சமூக வாரியாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கால மாறிவிட்டதால் கண்டக்டர் ஜாதி டிரைவர் ஜாதி என்ஜினீயர் ஜாதி தொழிலாளர்கள் ஜாதி என்றால் தான் சரியாக இருக்கும். ஜாதி என்பதே வடமொழி வார்த்தை. அவ்வய்யாr சொன்னார் ஜாதி 2 ஒழிய வேறில்லை என்று சொன்னார். அந்த காலத்திலையே பிரிவினை இருந்து அவர் யாரையும் பிரிச்சு பார்க்காமல் பாடியிருக்கார். எல்லோரும் எங்க சாதியை காப்பாத்துங்க என்று சட்டம் இயற்ற விரும்பினால் சரியா ருக்குமா? மனிதர்களுக்கு பொதுவா இந்த அரசியல்வாதிகளுக்கும் மனிதர்களை பிரித்து பார்க்காமல் மனிதர்களை மதிக்கும் எண்ணம் வர வேண்டும். அன்றைக்கு அரசர் ஜாதி-மன்னர் குடும்பம் என்று இருந்தது. இன்றைக்கு எல்லோரும் மன்னர்கள். புறாக்கள் தனி கூட்டமாக பறக்கின்றன. காக்கைகள் கூட்டமாக பறக்கின்றன. எந்த பறவையினமும் அடுத்த பறவை இனத்துக்கு தீங்கு விளைவிப்பதாக தெரியவில்லை. அறிவில்லாத மனிதர்கள் தான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்கிறார்கள்.


Nallavan
அக் 09, 2024 11:17

நீங்கள் ஆரபித்ததை நீங்களே முடித்துவைத்தல் எங்களுக்கு மன நிறைவு தாழ்ந்தது , உயர்ந்தது


M.COM.N.K.K.
அக் 08, 2024 16:52

ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவாக பேசுபவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இதை இதுவரை எந்த அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் அனைவரும் கண்டிக்கிறோம்.


M.COM.N.K.K.
அக் 08, 2024 16:49

பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோட்டைக்கு பேரணி வெற்றி பெற அனைத்து சாதிகளும் ஒத்துழைப்பு தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


M.COM.N.K.K.
அக் 08, 2024 16:46

எந்த ஒரு சாதியை பற்றி இழிவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.பிராமணர்களின் கோரிக்கை மிக மிக சரியானதே எங்கள் முழு ஆதரவு அவர்களுக்கு உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை