உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ., நிர்வாகி மீதான வழக்கு ரத்து

 பா.ஜ., நிர்வாகி மீதான வழக்கு ரத்து

மதுரை: துணை முதல்வர் உதயநிதி 2023ல், 'சனாதனத்தை கொசு, டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும்' என பேசினார். இதை திரித்து தவறான தகவலை வேண்டும் என்றே வெறுப்பு, வன்முறையை துாண்டும் வகையில் சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக பா.ஜ., அகில இந்திய தொழில்நுட்ப அணி தலைவர் டில்லியைச் சேர்ந்த அமித் மாள்வியாவிற்கு எதிராக தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி தினகரன், திருச்சி நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், அமித் மாள்வியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கருத்து சுதந்திரத்திற்குட்பட்டே பதிவிட்டேன். அவதுாறு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை. அரசியல் உள்நோக்கில் எனக்கு எதிராக தவறாக அவசர கதியில் வழக்கு பதியப்பட்டுள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை. வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரருக்கு எதிராக பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பாலாஜி
ஜன 21, 2026 17:42

உத்தரவை நீதிமன்றம் நிறைவேற்றியுள்ளது.


SULLAN
ஜன 21, 2026 15:17

வேறென்ன எதிர்பார்க்க முடியும்??? .


Selvakumar Krishna
ஜன 21, 2026 13:00

தவறான வதந்திகளை பரப்பி பின் மன்னிப்பு கேட்பது புதிதல்ல


panneer selvam
ஜன 21, 2026 18:11

He is not asked for apology but claimed his message was based on actual speech


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை