உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி மாணவிக்கு டார்ச்சர்: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

கல்லுாரி மாணவிக்கு டார்ச்சர்: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

ராணிப்பேட்டை : கல்லுாரி மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்து, துன்புறுத்திய தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வசெயல், 40. இவருக்கு திருமணமாகி கனிமொழி என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜன., 31ல், அரக்கோணம் அடுத்த பருத்திப்புதுாரைச் சேர்ந்த பலராமன் மகளான கல்லுாரி மாணவி பிரித்தி, 21, என்பவரை, காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு மாதமாக தெய்வசெயல், பிரித்தியை அடித்து கொடுமைப் படுத்தி உள்ளார். இது தொடர்பாக, அரக்கோணம் டவுன் போலீஸ் மற்றும் அரக்கோணம் தாலுகா போலீசில் பிரித்தி புகார் மனு அளித்துள்ளார். நடவடிக்கை இல்லாததால், டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.தொடர்ந்து, அரக்கோணம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியை சந்தித்து, தி.மு.க., பிரமுகர் தெய்வசெயலின் செயல்பாடு குறித்து கூறி, இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். இதைத்தான், அ.தி.மு.க., தற்போது போராட்டம் வரை கொண்டு சென்றிருக்கிறது. இது குறித்து, போலீசார் கூறியதாவது: பிரித்தி புகார் மனு தீவிரமாக விசாரிக்கப்பட்டது. முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல், இரண்டாவதாக தி.மு.க., பிரமுகர் தெய்வசெயலை பிரித்தி திருமணம் செய்து கொண்டார். தெய்வசெயலும் ஏற்கனவே திருமணமாகி கனிமொழி என்ற மனைவி உள்ளார். பிரித்தியுடன் குடும்பம் நடத்திய தெய்வசெயல், முதல் மனைவி கனிமொழியோடும் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், பிரித்தியோடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் சண்டையிட்டுள்ளனர். பிரித்தி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்து, கடந்த 9ம் தேதியே வழக்கு பதிந்து விட்டோம். இன்னொரு புகாரையும் கொடுத்து, அதன் மீதும் வழக்குப்பதிவு செய்ய பிரித்தி அழுத்தம் கொடுத்தார். அதை ஏற்கவில்லை என்றதும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியை சந்தித்து, தனக்கு ஆதரவாக செயல்பட கேட்டுள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின், இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் அ.தி.மு.க., தரப்பு, போலீஸ் மீது குற்றஞ்சாட்டுகிறது. ஏற்கனவே பதியப்பட்ட வழக்கின் கீழ் தெய்வசெயலை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Karuthu kirukkan
மே 20, 2025 11:03

அந்த தெய்வம் தானா இந்த செயலை செய்ய சொல்லிருக்கு . அந்த தெய்வச்செயலை செய்த செயலுக்காக செயிலே போடுங்க டம்மி அப்பா இல்லேன்னா மம்மி அடிப்பாங்க


Barakat Ali
மே 20, 2025 09:04

ரெட்டை வண்டியில - ஆமா வண்டியைத்தான் சொல்றேன் - சவாரி செய்யறவன் ரொம்ப டேஞ்சரான ஆளா இருப்பான் ..... பணத்துக்காக எதையும் செய்வான் ....


sankaranarayanan
மே 20, 2025 07:50

கடந்த இரண்டு மாதமாக தெய்வசெயல், பிரித்தியை அடித்து கொடுமைப் படுத்தி உள்ளார். தெய்வச்செயல் என்ற பெயரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் கூட்டத்தலைவன் இவன் அவனது கட்சியைப்போன்றே அவனும் உள்ளான் இதில் என்ன வியப்பு அவனை யாருமே எந்த அரசும் தீண்டாது


Svs Yaadum oore
மே 20, 2025 06:28

திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தையை வீட்டு வாசலில் புதைத்த கல்லூரி மாணவி.. தகவலை மறைத்ததாக மாணவியின் காதலன் கைது... குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியே சென்ற வேறு பெண் குழந்தையை மீட்டுள்ளார் .. தினம் தினம் இப்படி செய்தி நாடு சீரழியுது.. அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கொ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை...அரசு பள்ளிகளில் மாணவிகளை கலை நிகழ்ச்சி என்று சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் .. ஹாப்பி ஸ்ட்ரீட் நடு ரோட்டில் ஆபாச நடனம் .. போதை கஞ்சா மெத்து கள்ள சாராயம் பாலியல் குற்றம்.. இதில் படித்து முன்னேறிய மாநிலமாம் ...கார்பொரேட் சாராய கம்பெனி நடத்துபவனை காசு வாங்கி வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி கொடுத்தால் இப்படித்தான் நாடு சீரழியும் ...இப்படி ஒரு அசிங்கமான , படு ஆபாச கேவலமான ஆட்சியை நாடு கண்டிராது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை