கல்லுாரி பெண் முதல்வருக்கு தொல்லை; மாஜி பதிவாளர் மீது வழக்கு
திருமங்கலம்,: கல்லுாரி தொடர்பான வேலைக்காக சென்ற பெண் கல்லுாரி முதல்வரிடம் ஆபாசமாக பேசிய தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் கல்வியியல் கல்லுாரி உள்ளது. இதன் முதல்வராக 42 வயது பெண் உள்ளார். கல்லுாரி தொடர்பான வேலைகளுக்காக மற்றொரு கல்லுாரி முதல்வருடன் சென்னை சென்ற இவர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் என்பவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.அப்போது அவருக்கு சால்வை அணிவித்த போட்டோவை வைத்து பதிவாளர் ராமகிருஷ்ணன், இவரிடம் வாட்ஸ் அப் வழியாக ஆபாசமாக பேசி உள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை செயலரிடம் நேரில் புகார் தெரிவித்ததன் பேரில் ராமகிருஷ்ணன் பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் தொடர்ந்து பெண் முதல்வருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதுகுறித்து திருமங்கலம் மகளிர் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.