வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாவம், அவர் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.. விட்டுடுங்க போலீஸ்கார்..
சென்னையில் வீரவசனம் பேசிவிட்டு தில்லியில் போயி சரண்டர் ஆகுறவங்க ????
திருப்பத்துார்: பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே கும்பங்குடியில் கடந்த 4ம் தேதி, எச்.ராஜா காரில் திருப்பரங்குன்றம் செல்ல முயன்றதாக, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா, 'நான் நடிக்கும் கந்தன் மலை பட டப்பிங் பேச செல்கிறேன்; ஏன் என்னை தடுக்கிறீர்கள்?' என கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் எச்.ராஜா, அவரது கார் டிரைவர் மோகன் ஆகியோர் மீது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மதவாதத்தை துாண்டும் விதத்தில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், நாச்சியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாவம், அவர் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.. விட்டுடுங்க போலீஸ்கார்..
சென்னையில் வீரவசனம் பேசிவிட்டு தில்லியில் போயி சரண்டர் ஆகுறவங்க ????